Saturday, March 1, 2014

ஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம் - தசகம் 1

ஸ்ரீ நாராயணீயம் - முதல் தசகம், ஸ்ரீ நாராயணீயம்

 முதல் த³ஶகம்
                                                              பகவான் பெருமை
ஸ்ரீ குருவாயூரப்பன் ஜனங்களின் பாக்யம் 


सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |  
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||

1. பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் உள்ளது. மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஒப்புயர்வு அற்றது. கால தேசத்திற்கு அப்பார்ப்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. ஆச்சர்யம்!

एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्
तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।
एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै
निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥

ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்
தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |  
ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை
நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||

2. இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான பொருள், எளிதில் கிடைத்திருந்தும், மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழிபடுகிறார்கள். கஷ்டம்! அனைத்து உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவரான குருவாயூரப்பனையே, உலகோரின் கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பியிருக்கின்றோம்.

सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत्
भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।
तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं
तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥

ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|  
தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்
தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||

3. ஓ குருவாயூரப்பா! தங்கள் திருவுருவம் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய குணங்களின் சம்பந்தமற்று, ஸத்வ குணம் நிரம்பியதாகவும், பஞ்ச பூதங்களாலும்,பதினொரு இந்த்ரியங்களாலும் ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று வியாசர் கூறுகின்றார். பரமானந்தரூபமான உன் அழகுருவம் பிரகாசிக்கிறதாய், எளிதில் அடையக்கூடியதாய் , காதிற்கும், மனத்திற்கும் இனியதாய் இருக்கிறது. புண்யசாலிகள் அந்த ரூபத்தைக் கண்டு களிக்கிறார்கள்.

निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे
निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।
कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा
कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே
நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |  
கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||

4. தாங்கள் என்றும் நிறைந்து இருப்பவர். பேரின்பமாகிற அம்ருதஸ்வரூபி. முக்தர்களின் கூட்டத்தால் அழகு நிறைந்து விளங்குபவர். அப்படிப்பட்ட ஸத்வ ரூபியான தாங்களே முழுமுதற்கடவுள். பரிபூரணர்.

निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां
तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।
तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं
स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥

நிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப₄ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்₂யாம்
தேநைவோதே₃தி லீநா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி₃காலே|  
தஸ்யா: ஸம்ஶுத்₃த₄மம்ஶம் கமபி தமதிரோதா₄யகம் ஸத்த்வரூபம்
ஸ த்வம் த்₄ருத்வா த₃தா₄ஸி ஸ்வமஹிமவிப₄வாகுண்ட₂ வைகுண்ட₂ ரூபம் ||5|| 

5. ஓ குருவாயூரப்பா! பிறப்பற்றவரே! நீர் எவ்விதச் செயலுமற்றவர். ஆயினும், கடைக்கண் பார்வையால் மாயையை ஏவும் செயலைச் செய்து வருகிறீர். அந்த  மாயை, தங்களிடத்தில் அடங்காதது போன்ற தோற்றம் அளிக்கின்றது. விவரிக்கமுடியாத அந்த தூய்மையான மாயையின் ஒரு அம்சமே உம்முடைய திருவுருவம்.
                                                                                                                                                     
तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥

தத்தே ப்ரத்யக்₃ரதா₄ராத₄ரலலிதகலாயாவலீகேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜநத்₃ருஶாம் பூர்ணபுண்யாவதாரம்|  
லக்ஷ்மீநிஶ்ஶங்கலீலாநிலயநமம்ருதஸ்யந்த₃ஸந்தோ₃ஹமந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா₃ரநாத₂ ||6||

6. தங்கள் சரீரமானது, கார்மேகம் போலும், காயாம்பூங்கோத்தைப் போலும் அழகாய் இருக்கிறது. புண்ணியசாலிகளின் கண்களுக்கு முன்ஜன்ம புண்ணியத்தின் பயனாக விளங்குகிறது. ஸ்ரீ மகாலக்ஷ்மி விளையாடுவதற்க்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கிறது. பக்தர்களின் மனத்தைப் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது. அப்படிப்பட்ட தங்களை நான் என்றும் ஸ்மரிக்கிறேன்.

कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-
मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।
नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं
नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥

கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப₃ஹுதரப₄வகே₂தா₃வஹா ஜீவபா₄ஜா-
மித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்₃யாபி₄ஜாநே|  
நோசேஜ்ஜீவா: கத₂ம் வா மது₄ரதரமித₃ம் த்வத்₃வபுஶ்சித்₃ரஸார்த்₃ரம்
நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா₄ம்போ₄தி₄பூரே ரமேரந்||7||

7. மாயையால் ஜயிக்கப்படாத குருவாயூரப்பா! இதுவரை, தங்கள் ஸ்ருஷ்டி பிறவித் துன்பத்தை அளிக்கின்றது என்று நினைத்தேன். இப்போது அந்த எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், இவ்வாறு படைக்காதிருந்தால், மிகவும் ஆனந்தமான உன் திருமேனியைக் கண்களாலும், காதுகளாலும் அனுபவித்து பேரின்பக் கடலில் மகிழ்ச்சி அடைந்திருக்க முடியுமா?

नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -
प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।
इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं
क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥

நம்ராணாம் ஸந்நித₄த்தே ஸததமபி புரஸ்தைரநப்₄யர்தி₂தாந -
ப்யர்தா₂ந் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநந்த₃ஸாந்த்₃ராம் க₃திம் ச|  
இத்த₂ம் நிஶ்ஶேஷலப்₄யோ நிரவதி₄கப₂ல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்₃ரம் தம் ஶக்ரவாடீத்₃ருமமபி₄லஷதி வ்யர்த₂மர்தி₂வ்ரஜோ(அ)யம்||8||

8. குருவாயூரப்பனான பாரிஜாதமானது அளவற்ற பயன்களை அளிக்கும். சுலபமாக அடைய முடியும். மோக்ஷத்தையும் கொடுக்கும். அப்படியிருக்க, அழியக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் இந்திரலோகத்து பாரிஜாத மரத்தை யாசகர்கள் விரும்புவது ஏனோ?

कारुण्यात्काममन्यं ददति खलु परे स्वात्मदस्त्वं विशेषा-
दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम्।
त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतना: स्फीतभाग्या-
स्त्वं चात्माराम एवेत्यतुलगुणगणाधार शौरे नमस्ते॥९॥

காருண்யாத்காமமந்யம் த₃த₃தி க₂லு பரே ஸ்வாத்மத₃ஸ்த்வம் விஶேஷா-
தை₃ஶ்வர்யாதீ₃ஶதே(அ)ந்யே ஜக₃தி பரஜநே ஸ்வாத்மநோ(அ)பீஶ்வரஸ்த்வம்| 
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத₃மது₄ரே சேதநா: ஸ்பீ₂தபா₄க்₃யா-
ஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு₃ணக₃ணாதா₄ர ஶௌரே நமஸ்தே||9||

9. உலகில் மற்ற தெய்வங்கள் அபீஷ்டங்களைக் கொடுக்கின்றனர். நீயோ, உன்னையே, உன் ஸ்வரூபமான ஆத்மாவையே அளிக்கின்றாய். வாசுதேவ, உன்னைத் தொழுகின்றேன்.

ऐश्वर्यं शङ्करादीश्वरविनियमनं विश्वतेजोहराणां
तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम्।
अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता
तद्वातागारवासिन् मुरहर भगवच्छब्दमुख्याश्रयोऽसि॥१०॥

ஐஶ்வர்யம் ஶங்கராதீ₃ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ₃தம்|  
அங்கா₃ஸங்கா₃ ஸதா₃ ஶ்ரீரகி₂லவித₃ஸி ந க்வாபி தே ஸங்க₃வார்தா
தத்₃வாதாகா₃ரவாஸிந் முரஹர ப₄க₃வச்ச₂ப்₃த₃முக்₂யாஶ்ரயோ(அ)ஸி||10||

10. முரனைக் கொன்றவனே! சங்கரனையும், மற்ற தெய்வங்களையும், அவரவர்கள் வேலையைச் செய்ய ஏவுகின்றீர். முற்றும் துறந்த பெரியோர் உன்னைப் பாடும் புகழ் பெற்றிருக்கிறீர். தாங்கள் பற்றற்று இருப்பதால்,பகவான் என்ற சொல்லுக்குப் பொருளாக விளங்குகின்றீர். 

8 comments:

  1. Thank you Shanthi.I could recite the first dasakam listening to the audio.I could read the meaning too.I hope in 100 days I would have done the parayanam thanks to you.Looking forward to one dasakam a day.An admirable service indeed!!

    ReplyDelete
  2. Jai Sriman Narayana.
    Shanthi pls include the dhyana slokam also.

    ReplyDelete
  3. Thank you so much for this excellent effort. Have been looking for this for quite some time. It would be great if we could get Tamil meaning padham wise. Not only will it help us learn to recite correctly but will also make us understand what we say, completely. Jai Sriram.

    ReplyDelete