Saturday, May 31, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92, ஸ்ரீ நாராயணீயம் 92வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -92
கர்மம் கலந்த பக்தி 

वेदैस्सर्वाणि कर्माण्यफलपरतया वर्णितानीति बुध्वा
तानि त्वय्यर्पितान्येव हि समनुचरन् यानि नैष्कर्म्यमीश ।
मा भूद्वेदैर्निषिद्धे कुहचिदपि मन:कर्मवाचां प्रवृत्ति-
र्दुर्वर्जं चेदवाप्तं तदपि खलु भवत्यर्पये चित्प्रकाशे ॥१॥

வேதை₃ஸ்ஸர்வாணி கர்மாண்யப₂லபரதயா வர்ணிதாநீதி பு₃த்₄வா
தாநி த்வய்யர்பிதாந்யேவ ஹி ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யமீஶ |
மா பூ₄த்₃வேதை₃ர்நிஷித்₃தே₄ குஹசித₃பி மந:கர்மவாசாம் ப்ரவ்ருத்தி-
ர்து₃ர்வர்ஜம் சேத₃வாப்தம் தத₃பி க₂லு ப₄வத்யர்பயே சித்ப்ரகாஶே || 1||

1. செயல்களை, பற்றற்று, பலனில் விருப்பமின்றி செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான், பலனை எதிர்பார்க்காமல் வேதம் கூறிய செயல்களைச் செய்து, அவற்றை உம்மிடமே அர்ப்பணித்து ஞானத்தை அடையவேண்டும். வேதத்தால் புறக்கணிக்கப்பட்ட எந்த செயலிலும் என் மனம், வாக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு விலக்கப்பட்ட ஏதாவது செயலை நான் செய்ய நேர்ந்தால், அதையும் உம்மிடமே சமர்ப்பித்து விடுவேன்.

यस्त्वन्य: कर्मयोगस्तव भजनमयस्तत्र चाभीष्टमूर्तिं
हृद्यां सत्त्वैकरूपां दृषदि हृदि मृदि क्वापि वा भावयित्वा ।
पुष्पैर्गन्धैर्निवेद्यैरपि च विरचितै: शक्तितो भक्तिपूतै-
र्नित्यं वर्यां सपर्यां विदधदयि विभो त्वत्प्रसादं भजेयम् ॥२॥

யஸ்த்வந்ய: கர்மயோக₃ஸ்தவ ப₄ஜநமயஸ்தத்ர சாபீ₄ஷ்டமூர்திம்
ஹ்ருத்₃யாம் ஸத்த்வைகரூபாம் த்₃ருஷதி₃ ஹ்ருதி₃ ம்ருதி₃ க்வாபி வா பா₄வயித்வா |
புஷ்பைர்க₃ந்தை₄ர்நிவேத்₃யைரபி ச விரசிதை: ஶக்திதோ ப₄க்திபூதை-
ர்நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித₃த₄த₃யி விபோ₄ த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜேயம் || 2||

2. பிரபுவே! உம்மைத் தொழுவதும் ஒரு வகையான கர்மயோகம் ஆகும். அழகானதும், ஸத்வ வடிவானதும் ஆன ஒரு மூர்த்தியைக் கல்லிலோ, மண்ணிலோ, மனதிலோ தியானம் செய்து, சக்திக்குத் தகுந்தபடி பரிசுத்தமான சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களாலும், பூக்களாலும் தினமும் பூஜை செய்து, உமது அருளை அடைய வேண்டும்.

स्त्रीशूद्रास्त्वत्कथादिश्रवणविरहिता आसतां ते दयार्हा-
स्त्वत्पादासन्नयातान् द्विजकुलजनुषो हन्त शोचाम्यशान्तान् ।
वृत्त्यर्थं ते यजन्तो बहुकथितमपि त्वामनाकर्णयन्तो
दृप्ता विद्याभिजात्यै: किमु न विदधते तादृशं मा कृथा माम् ॥३॥

ஸ்த்ரீஶூத்₃ராஸ்த்வத்கதா₂தி₃ஶ்ரவணவிரஹிதா ஆஸதாம் தே த₃யார்ஹா-
ஸ்த்வத்பாதா₃ஸந்நயாதாந் த்₃விஜகுலஜநுஷோ ஹந்த ஶோசாம்யஶாந்தாந் |
வ்ருத்த்யர்த₂ம் தே யஜந்தோ ப₃ஹுகதி₂தமபி த்வாமநாகர்ணயந்தோ
த்₃ருப்தா வித்₃யாபி₄ஜாத்யை: கிமு ந வித₃த₄தே தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 3||

3. பெண்களும் மற்றும் சிலரும் அறியாமையினால் உமது கதைகளைக் கேட்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். ஆனால், உயர்குலத்தில் பிறந்து உம்முடைய திருவடிகளை அடைந்தும் அமைதியற்றவர்களாய் இருப்பவர்களைக் குறித்து வருந்துகிறேன். பிழைப்பிற்காக யாகம் செய்து கொண்டு, பலமுறை உம்முடைய பெருமைகளை பற்றிக் கேட்டிருந்தும் உம்முடைய பெருமைகளில் நாட்டமில்லாமல், படிப்பால் கர்வம் கொண்டு இருப்பதால் அவர்கள் தவறுகள் செய்கின்றனர். தாங்கள், அவர்களைப்போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.

पापोऽयं कृष्णरामेत्यभिलपति निजं गूहितुं दुश्चरित्रं
निर्लज्जस्यास्य वाचा बहुतरकथनीयानि मे विघ्नितानि ।
भ्राता मे वन्ध्यशीलो भजति किल सदा विष्णुमित्थं बुधांस्ते
निन्दन्त्युच्चैर्हसन्ति त्वयि निहितमतींस्तादृशं मा कृथा माम् ॥४॥

பாபோ(அ)யம் க்ருஷ்ணராமேத்யபி₄லபதி நிஜம் கூ₃ஹிதும் து₃ஶ்சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப₃ஹுதரகத₂நீயாநி மே விக்₄நிதாநி |
ப்₄ராதா மே வந்த்₄யஶீலோ ப₄ஜதி கில ஸதா₃ விஷ்ணுமித்த₂ம் பு₃தா₄ம்ஸ்தே
நிந்த₃ந்த்யுச்சைர்ஹஸந்தி த்வயி நிஹிதமதீம்ஸ்தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 4||

4. பக்தியற்ற சிலர் உம்முடைய பக்தர்களை நிந்திக்கின்றனர். “இவன் செய்த பாவங்களை மறைக்க ‘கிருஷ்ணா, ராமா’ என்று கூறுகிறான். வெட்கமற்ற இவன் பிதற்றல்களால் நான் பல விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வீண் பொழுது போக்கும் என் சகோதரன் விஷ்ணுவை வழிபடுகிறான்” என்று உண்மையான பக்தர்களைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றனர். அவர்களைப்போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.

श्वेतच्छायं कृते त्वां मुनिवरवपुषं प्रीणयन्ते तपोभि-
स्त्रेतायां स्रुक्स्रुवाद्यङ्कितमरुणतनुं यज्ञरूपं यजन्ते ।
सेवन्ते तन्त्रमार्गैर्विलसदरिगदं द्वापरे श्यामलाङ्गं
नीलं सङ्कीर्तनाद्यैरिह कलिसमये मानुषास्त्वां भजन्ते ॥५॥

ஶ்வேதச்சா₂யம் க்ருதே த்வாம் முநிவரவபுஷம் ப்ரீணயந்தே தபோபி₄-
ஸ்த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்₃யங்கிதமருணதநும் யஜ்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ரமார்கை₃ர்விலஸத₃ரிக₃த₃ம் த்₃வாபரே ஶ்யாமலாங்க₃ம்
நீலம் ஸங்கீர்தநாத்₃யைரிஹ கலிஸமயே மாநுஷாஸ்த்வாம் ப₄ஜந்தே || 5||

5. கிருத யுகத்தில், ஒளி பொருந்திய வெண்ணிறத்தில் உள்ள பிரும்மச்சாரியின் வடிவுடைய உம்மை, மக்கள் தவங்கள் செய்து மகிழ்விக்கின்றனர். திரேதா யுகத்தில், சிவப்பு நிறம் கொண்ட யக்ஞ புருஷனாகப் பூஜிக்கின்றனர். துவாபர யுகத்தில், சங்கு சக்கரம் தரித்த நீலமேக ஸ்யாமளனாக வணங்குகின்றனர். கலியுகத்திலோ நீலவண்ணனாக உம்மை நாமசங்கீர்த்தனத்தால் வழிபடுகின்றனர்.

सोऽयं कालेयकालो जयति मुररिपो यत्र सङ्कीर्तनाद्यै-
र्निर्यत्नैरेव मार्गैरखिलद न चिरात्त्वत्प्रसादं भजन्ते ।
जातास्त्रेताकृतादावपि हि किल कलौ सम्भवं कामयन्ते
दैवात्तत्रैव जातान् विषयविषरसैर्मा विभो वञ्चयास्मान् ॥६॥

ஸோ(அ)யம் காலேயகாலோ ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்தநாத்₃யை-
ர்நிர்யத்நைரேவ மார்கை₃ரகி₂லத₃ ந சிராத்த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதாக்ருதாதா₃வபி ஹி கில கலௌ ஸம்ப₄வம் காமயந்தே
தை₃வாத்தத்ரைவ ஜாதாந் விஷயவிஷரஸைர்மா விபோ₄ வஞ்சயாஸ்மாந் || 6||

6. முரனை வென்ற முராரியே! இவ்வாறாகக் கலியுகம் மேன்மையுடன் விளங்குகிறது. கலியுகத்தில், சிரமமின்றி நாமசங்கீர்த்தனத்தால் உம்மைத் தொழுவதால், உம்முடைய அருளை மக்கள் விரைவிலேயே அடைகிறார்கள். அதனாலேயே, மற்ற யுகங்களில் பிறந்தவர்கள் கூட மீண்டும் கலியுகத்தில் பிறக்க விரும்புகிறார்கள். யாவற்றையும் அளிப்பவனே! இக்கலியில் புண்ணியவசத்தால் பிறந்த எங்களை, விஷத்தைப் போன்ற இந்திரிய சுகங்களைக் காட்டி ஏமாற்ற வேண்டாம்.

भक्तास्तावत्कलौ स्युर्द्रमिलभुवि ततो भूरिशस्तत्र चोच्चै:
कावेरीं ताम्रपर्णीमनु किल कृतमालां च पुण्यां प्रतीचीम् ।
हा मामप्येतदन्तर्भवमपि च विभो किञ्चिदञ्चद्रसं त्व-
य्याशापाशैर्निबध्य भ्रमय न भगवन् पूरय त्वन्निषेवाम् ॥७॥

ப₄க்தாஸ்தாவத்கலௌ ஸ்யுர்த்₃ரமிலபு₄வி ததோ பூ₄ரிஶஸ்தத்ர சோச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீமநு கில க்ருதமாலாம் ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத₃ந்தர்ப₄வமபி ச விபோ₄ கிஞ்சித₃ஞ்சத்₃ரஸம் த்வ-
ய்யாஶாபாஶைர்நிப₃த்₄ய ப்₄ரமய ந ப₄க₃வந் பூரய த்வந்நிஷேவாம் || 7||

7. இக்கலியில் உம்மிடம் பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். திராவிட தேசத்தில் இன்னும் அதிகமாக உள்ளனர். காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆற்றின் கரைகளிலும், மேற்கு நோக்கி ஓடும் நதிகளின் கரைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். நானும் இந்தப் பகுதியில் பிறந்தவன். உம்மிடம் சிறிதளவு பக்தி கொண்டிருக்கிறேன். ஹே கிருஷ்ணா! ஆசை என்னும் கயிற்றால் என்னைப் பிணைத்து என்னை ஏமாற்ற வேண்டாம். உம்மீது கொண்ட பக்தி முழுமையடையப் பிரார்த்திக்கிறேன்.

दृष्ट्वा धर्मद्रुहं तं कलिमपकरुणं प्राङ्महीक्षित् परीक्षित्
हन्तुं व्याकृष्टखड्गोऽपि न विनिहतवान् सारवेदी गुणांशात् ।
त्वत्सेवाद्याशु सिद्ध्येदसदिह न तथा त्वत्परे चैष भीरु-
र्यत्तु प्रागेव रोगादिभिरपहरते तत्र हा शिक्षयैनम् ॥८॥

த்₃ருஷ்ட்வா த₄ர்மத்₃ருஹம் தம் கலிமபகருணம் ப்ராங்மஹீக்ஷித் பரீக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருʼஷ்டக₂ட்₃கோ₃(அ)பி ந விநிஹதவாந் ஸாரவேதீ₃ கு₃ணாம்ஶாத் |
த்வத்ஸேவாத்₃யாஶு ஸித்₃த்₄யேத₃ஸதி₃ஹ ந ததா₂ த்வத்பரே சைஷ பீ₄ரு-
ர்யத்து ப்ராகே₃வ ரோகா₃தி₃பி₄ரபஹரதே தத்ர ஹா ஶிக்ஷயைநம் || 8||

8. முன்னொரு சமயம், பரீக்ஷித் என்ற அரசன், தர்மத்திற்குத் தீங்கு செய்த கலிபுருஷனைக் கொல்ல வாளை உருவினான். கலியிடம் நற்குணங்கள் இருந்ததால் அவனைக் கொல்லாமல் விட்டான். இக்கலியுகத்தில் உமக்குச் செய்யும் தொண்டுகள் மிக விரைவிலேயே பலனை அளிக்கும். தீய செயல்கள் பலன் கொடுப்பதில்லை. கலிபுருஷன் உம்முடைய பக்தர்களிடம் பயப்படுகிறான். அதனால், தங்களைத் தொழுவதற்கு முன்னரே, பக்தர்களுக்கு நோய் முதலியவற்றைக் கொடுத்து, பக்தியைத் தடை செய்கிறான். அதற்காக மட்டும் தாங்கள் அவனைத் தண்டிக்க வேண்டும்.

गङ्गा गीता च गायत्र्यपि च तुलसिका गोपिकाचन्दनं तत्
सालग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णा: ।
एतान्यष्टाप्ययत्नान्यपि कलिसमये त्वत्प्रसादप्रवृद्ध्या
क्षिप्रं मुक्तिप्रदानीत्यभिदधु: ऋषयस्तेषु मां सज्जयेथा: ॥९॥

க₃ங்கா₃ கீ₃தா ச கா₃யத்ர்யபி ச துலஸிகா கோ₃பிகாசந்த₃நம் தத்
ஸாலக்₃ராமாபி₄பூஜா பரபுருஷ ததை₂காத₃ஶீ நாமவர்ணா: |
ஏதாந்யஷ்டாப்யயத்நாந்யபி கலிஸமயே த்வத்ப்ரஸாத₃ப்ரவ்ருத்₃த்₄யா
க்ஷிப்ரம் முக்திப்ரதா₃நீத்யபி₄த₃து₄: ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா₂: || 9||

9. பரமனே! இந்தக் கலியுகத்தில் அதிக முயற்சியின்றி தங்களுடைய அருளைப் பெற்று முக்தி அளிக்கும் எட்டு வழிகளை முனிவர்கள் உபதேசித்துள்ளனர். அவை, கங்கை, கீதை, காயத்ரி, துளசி, கோபிசந்தனம், ஸாளக்ராம பூஜை, ஏகாதசி, உமது நாமமான அஷ்டாக்ஷரம் ஆகியவை. இந்த எட்டு விஷயங்களிலும் பற்றுள்ளவனாக என்னை ஆக்க வேண்டும்.

देवर्षीणां पितृणामपि न पुन: ऋणी किङ्करो वा स भूमन् ।
योऽसौ सर्वात्मना त्वां शरणमुपगतस्सर्वकृत्यानि हित्वा ।
तस्योत्पन्नं विकर्माप्यखिलमपनुदस्येव चित्तस्थितस्त्वं
तन्मे पापोत्थतापान् पवनपुरपते रुन्धि भक्तिं प्रणीया: ॥१०॥

தே₃வர்ஷீணாம் பித்ருணாமபி ந புந: ருணீ கிங்கரோ வா ஸ பூ₄மந் |
யோ(அ)ஸௌ ஸர்வாத்மநா த்வாம் ஶரணமுபக₃தஸ்ஸர்வக்ருத்யாநி ஹித்வா |
தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகி₂லமபநுத₃ஸ்யேவ சித்தஸ்தி₂தஸ்த்வம்
தந்மே பாபோத்த₂தாபாந் பவநபுரபதே ருந்தி₄ ப₄க்திம் ப்ரணீயா: || 10||

10. எங்கும் நிறைந்தவனே! எல்லாக் கர்மங்களையும் தொலைத்து உம்மிடம் சரணடைந்தவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்படுவதோ, பணி செய்வதோ இல்லை. தாங்கள் அவனது மனதில் குடிகொண்டு, அவனது பாபங்களை முற்றிலுமாகப் போக்குகின்றீர். குருவாயூரப்பா! அதனால், என் பாபங்களினால் உண்டான எனது துன்பங்களைப் போக்கி, எனக்கு பக்தியை அளிக்க வேண்டும்.

Friday, May 30, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91, ஸ்ரீ நாராயணீயம் 91வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -91
பக்தி மார்க்கம்

இந்த தசகத்தைப் படிப்பதால் அனைத்து பாபங்களும் விலகி, வைராக்யமும் திடமான பக்தியும் உண்டாகும்.


श्रीकृष्ण त्वत्पदोपासनमभयतमं बद्धमिथ्यार्थदृष्टे-
र्मर्त्यस्यार्तस्य मन्ये व्यपसरति भयं येन सर्वात्मनैव ।
यत्तावत् त्वत्प्रणीतानिह भजनविधीनास्थितो मोहमार्गे
धावन्नप्यावृताक्ष: स्खलति न कुहचिद्देवदेवाखिलात्मन् ॥१॥

ஶ்ரீக்ருஷ்ண த்வத்பதோ₃பாஸநமப₄யதமம் ப₃த்₃த₄மித்₂யார்த₂த்₃ருஷ்டே-
ர்மர்த்யஸ்யார்தஸ்ய மந்யே வ்யபஸரதி ப₄யம் யேந ஸர்வாத்மநைவ |
யத்தாவத் த்வத்ப்ரணீதாநிஹ ப₄ஜநவிதீ₄நாஸ்தி₂தோ மோஹமார்கே₃
தா₄வந்நப்யாவ்ருதாக்ஷ: ஸ்க₂லதி ந குஹசித்₃தே₃வதே₃வாகி₂லாத்மந் || 1||

1. தேவதேவனே! அனைத்து உயிரினங்களின் உயிரே! கிருஷ்ணா! பொய்யான இந்த சரீரத்தில் ஆசை வைத்து அல்லல்பட்டு மரண பயத்தை அடையும் ஒருவனுக்கு, உமது திருவடிகளை அடைக்கலம் அடைந்து பணி செய்வதே பயத்தைப் போக்கக் கூடியது என்று நம்புகிறேன். தாங்கள் உபதேசித்த முறைகளில் வழிபடுபவன், கண்ணை மூடியபடி சென்றாலும், அவன் பக்தி நிலையில் தவறுவதில்லை.

भूमन् कायेन वाचा मुहुरपि मनसा त्वद्बलप्रेरितात्मा
यद्यत् कुर्वे समस्तं तदिह परतरे त्वय्यसावर्पयामि ।
जात्यापीह श्वपाकस्त्वयि निहितमन:कर्मवागिन्द्रियार्थ-
प्राणो विश्वं पुनीते न तु विमुखमनास्त्वत्पदाद्विप्रवर्य: ॥२॥

பூ₄மந் காயேந வாசா முஹுரபி மநஸா த்வத்₃ப₃லப்ரேரிதாத்மா
யத்₃யத் குர்வே ஸமஸ்தம் ததி₃ஹ பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ஶ்வபாகஸ்த்வயி நிஹிதமந:கர்மவாகி₃ந்த்₃ரியார்த₂-
ப்ராணோ விஶ்வம் புநீதே ந து விமுக₂மநாஸ்த்வத்பதா₃த்₃விப்ரவர்ய: || 2||

2. எங்கும் நிறைந்த பரம்பொருளே! உமது சக்தியினால் என் மனம் தூண்டப்படுகிறது. என் உடல், வாக்கு, மனம் இவைகளால் செய்யும் அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மிடத்தில் தனது செயல், வாக்கு, இந்திரியங்கள், பிராணன், மனம் ஆகியவற்றை அர்ப்பணம் செய்தவன், பிறப்பால் நீசனாக இருந்தாலும் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். தங்கள் திருவடிகளில் பக்தி இல்லாதவன் அந்தணனாக இருந்தாலும் உலகைப் புனிதப்படுத்துவதில்லை.

भीतिर्नाम द्वितीयाद्भवति ननु मन:कल्पितं च द्वितीयं
तेनैक्याभ्यासशीलो हृदयमिह यथाशक्ति बुद्ध्या निरुन्ध्याम् ।
मायाविद्धे तु तस्मिन् पुनरपि न तथा भाति मायाधिनाथं
तं त्वां भक्त्या महत्या सततमनुभजनीश भीतिं विजह्याम् ॥३॥

பீ₄திர்நாம த்₃விதீயாத்₃ப₄வதி நநு மந:கல்பிதம் ச த்₃விதீயம்
தேநைக்யாப்₄யாஸஶீலோ ஹ்ருத₃யமிஹ யதா₂ஶக்தி பு₃த்₃த்₄யா நிருந்த்₄யாம் |
மாயாவித்₃தே₄ து தஸ்மிந் புநரபி ந ததா₂ பா₄தி மாயாதி₄நாத₂ம்
தம் த்வாம் ப₄க்த்யா மஹத்யா ஸததமநுப₄ஜநீஶ பீ₄திம் விஜஹ்யாம் || 3||

3. பயமானது தன்னிடத்திலிருந்து விலகியுள்ள மற்றொரு இடத்திலிருந்து உண்டாகிறது. அந்த மற்றொரு இடமும் மனதின் கற்பனையே ஆகும். காரியம், காரணம் இரண்டும் ஒன்றே என்பதை மனதில் நிறுத்தி, நிச்சய புத்தியுடன் சிந்திப்பேன். ஒருமுறை மாயையால் கவரப்பட்டவன், மனதைக் கட்டுப்படுத்தினாலும் முன்போல் சிந்திப்பதில்லை. எனவே, ஈசனே! மாயைக்கு அதிபதியான உம்மை எப்பொழுதும் பக்தியுடன் வணங்கி, என் அனைத்து பயங்களையும் விடுவேன்.

भक्तेरुत्पत्तिवृद्धी तव चरणजुषां सङ्गमेनैव पुंसा-
मासाद्ये पुण्यभाजां श्रिय इव जगति श्रीमतां सङ्गमेन ।
तत्सङ्गो देव भूयान्मम खलु सततं तन्मुखादुन्मिषद्भि-
स्त्वन्माहात्म्यप्रकारैर्भवति च सुदृढा भक्तिरुद्धूतपापा ॥४॥

ப₄க்தேருத்பத்திவ்ருத்₃தீ₄ தவ சரணஜுஷாம் ஸங்க₃மேநைவ பும்ஸா-
மாஸாத்₃யே புண்யபா₄ஜாம் ஶ்ரிய இவ ஜக₃தி ஶ்ரீமதாம் ஸங்க₃மேந |
தத்ஸங்கோ₃ தே₃வ பூ₄யாந்மம க₂லு ஸததம் தந்முகா₂து₃ந்மிஷத்₃பி₄-
ஸ்த்வந்மாஹாத்ம்யப்ரகாரைர்ப₄வதி ச ஸுத்₃ருடா₄ ப₄க்திருத்₃தூ₄தபாபா || 4||

4. இந்த உலகில் செல்வம் உள்ளவனோடு சேர்ந்தால் செல்வம் பெருகுவதைப்போல், தங்கள் திருவடிகளை வணங்குபவரோடு சேர்ந்தால் பக்தி பெருகுகிறது. தேவனே! அடியேனுக்கும் உமது அடியவர்களின் சேர்க்கை கிடைக்கவேண்டும். அவர்கள் கூறும் உமது மகிமைகளால், அனைத்து பாபங்களையும் போக்கக் கூடிய உறுதியான பக்தி எனக்கு உண்டாக வேண்டும்.

श्रेयोमार्गेषु भक्तावधिकबहुमतिर्जन्मकर्माणि भूयो
गायन् क्षेमाणि नामान्यपि तदुभयत: प्रद्रुतं प्रद्रुतात्मा ।
उद्यद्धास: कदाचित् कुहचिदपि रुदन् क्वापि गर्जन् प्रगाय-
न्नुन्मादीव प्रनृत्यन्नयि कुरु करुणां लोकबाह्यश्चरेयम् ॥५॥

ஶ்ரேயோமார்கே₃ஷு ப₄க்தாவதி₄கப₃ஹுமதிர்ஜந்மகர்மாணி பூ₄யோ
கா₃யந் க்ஷேமாணி நாமாந்யபி தது₃ப₄யத: ப்ரத்₃ருதம் ப்ரத்₃ருதாத்மா |
உத்₃யத்₃தா₄ஸ: கதா₃சித் குஹசித₃பி ருத₃ந் க்வாபி க₃ர்ஜந் ப்ரகா₃ய-
ந்நுந்மாதீ₃வ ப்ரந்ருத்யந்நயி குரு கருணாம் லோகபா₃ஹ்யஶ்சரேயம் || 5||

5. மோக்ஷத்தை அடையும் வழிகளில் பக்தி மார்க்கத்தில் மிகவும் விருப்பமுடையவனாக நான் ஆக வேண்டும். உமது லீலைகளையும், நாமங்களையும் ஆர்வத்துடன் பாடி மனம் உருக வேண்டும். பாடிக் கொண்டும், சிரித்துக்கொண்டும், பைத்தியம் பிடித்தவன் போல் ஆடிக்கொண்டும் பற்றற்று நான் இருக்கக் கருணை புரிய வேண்டும்.

भूतान्येतानि भूतात्मकमपि सकलं पक्षिमत्स्यान् मृगादीन्
मर्त्यान् मित्राणि शत्रूनपि यमितमतिस्त्वन्मयान्यानमानि ।
त्वत्सेवायां हि सिद्ध्येन्मम तव कृपया भक्तिदार्ढ्यं विराग-
स्त्वत्तत्त्वस्यावबोधोऽपि च भुवनपते यत्नभेदं विनैव ॥६॥

பூ₄தாந்யேதாநி பூ₄தாத்மகமபி ஸகலம் பக்ஷிமத்ஸ்யாந் ம்ருகா₃தீ₃ந்
மர்த்யாந் மித்ராணி ஶத்ரூநபி யமிதமதிஸ்த்வந்மயாந்யாநமாநி |
த்வத்ஸேவாயாம் ஹி ஸித்₃த்₄யேந்மம தவ க்ருபயா ப₄க்திதா₃ர்ட்₄யம் விராக₃-
ஸ்த்வத்தத்த்வஸ்யாவபோ₃தோ₄(அ)பி ச பு₄வநபதே யத்நபே₄த₃ம் விநைவ || 6||

6. பஞ்சபூதங்களையும், அவைகளாலான உலகங்களையும், அவற்றில் வசிக்கும் பறவைகள், மீன்கள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றையும், நண்பர்களையும், பகைவர்களையும் உமது வடிவமென்று நான் வணங்க வேண்டும். லோகநாயகா! எப்போதும் உம்மை வணங்குவதால், உம்முடைய கருணையினால், எனக்கு உறுதியான பக்தி, வைராக்கியம், உண்மை அறிவு முதலியவை வேறு முயற்சிகள் இல்லாமலேயே கிடைக்கிறது.

नो मुह्यन् क्षुत्तृडाद्यैर्भवसरणिभवैस्त्वन्निलीनाशयत्वा-
च्चिन्तासातत्यशाली निमिषलवमपि त्वत्पदादप्रकम्प: ।
इष्टानिष्टेषु तुष्टिव्यसनविरहितो मायिकत्वावबोधा-
ज्ज्योत्स्नाभिस्त्वन्नखेन्दोरधिकशिशिरितेनात्मना सञ्चरेयम् ॥७॥

நோ முஹ்யந் க்ஷுத்த்ருடா₃த்₃யைர்ப₄வஸரணிப₄வைஸ்த்வந்நிலீநாஶயத்வா-
ச்சிந்தாஸாதத்யஶாலீ நிமிஷலவமபி த்வத்பதா₃த₃ப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டிவ்யஸநவிரஹிதோ மாயிகத்வாவபோ₃தா₄-
ஜ்ஜ்யோத்ஸ்நாபி₄ஸ்த்வந்நகே₂ந்தோ₃ரதி₄கஶிஶிரிதேநாத்மநா ஸஞ்சரேயம் || 7||

7. என் மனம் எப்போதும் உம்மிடம் மூழ்கியிருப்பதால், பசி, தாகம் இவற்றால் பாதிக்கப்படாமல், உமது திருவடியையே தியானித்துக் கொண்டு, பற்றற்று, விருப்பு, வெறுப்பு, இல்லாதவனாக இருக்க அருள வேண்டும். மாயையின் விளைவு என்னும் அறிவினால், சந்தோஷமும், துக்கமும் அற்றவனாக இருக்க அருள வேண்டும். உமது கால் நகங்களாகிற குளிர் நிலவின் ஒளியால் நானும் அமைதியான, குளிர்ந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

भूतेष्वेषु त्वदैक्यस्मृतिसमधिगतौ नाधिकारोऽधुना चे-
त्त्वत्प्रेम त्वत्कमैत्री जडमतिषु कृपा द्विट्सु भूयादुपेक्षा ।
अर्चायां वा समर्चाकुतुकमुरुतरश्रद्धया वर्धतां मे
त्वत्संसेवी तथापि द्रुतमुपलभते भक्तलोकोत्तमत्वम् ॥८॥

பூ₄தேஷ்வேஷு த்வதை₃க்யஸ்ம்ருதிஸமதி₄க₃தௌ நாதி₄காரோ(அ)து₄நா சே-
த்த்வத்ப்ரேம த்வத்கமைத்ரீ ஜட₃மதிஷு க்ருபா த்₃விட்ஸு பூ₄யாது₃பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்சாகுதுகமுருதரஶ்ரத்₃த₄யா வர்த₄தாம் மே
த்வத்ஸம்ஸேவீ ததா₂பி த்₃ருதமுபலப₄தே ப₄க்தலோகோத்தமத்வம் || 8||

8. உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் தாங்கள் ஐக்கியமாகி இருக்கிறீர் என்ற அறிவும், தகுதியும் எனக்கு இல்லையெனில், உமது அடியார்களிடத்தில் நேசமும், உம்மை அறியாதவர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் வெறுப்பும் எனக்கு உண்டாக வேண்டும். அதற்கும் தகுதி இல்லாவிடில், தங்களது விக்ரகத்தைப் பூஜை செய்ய ஆர்வம் உண்டாக வேண்டும். அவ்வாறு செய்வதால் பக்தர்களில் சிறந்தவனாக விளங்கும் பேறு தாமதமில்லாமல் கிடைக்கிறது.

आवृत्य त्वत्स्वरूपं क्षितिजलमरुदाद्यात्मना विक्षिपन्ती
जीवान् भूयिष्ठकर्मावलिविवशगतीन् दु:खजाले क्षिपन्ती ।
त्वन्माया माभिभून्मामयि भुवनपते कल्पते तत्प्रशान्त्यै
त्वत्पादे भक्तिरेवेत्यवददयि विभो सिद्धयोगी प्रबुद्ध: ॥९॥

ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம் க்ஷிதிஜலமருதா₃த்₃யாத்மநா விக்ஷிபந்தீ
ஜீவாந் பூ₄யிஷ்ட₂கர்மாவலிவிவஶக₃தீந் து₃:க₂ஜாலே க்ஷிபந்தீ |
த்வந்மாயா மாபி₄பூ₄ந்மாமயி பு₄வநபதே கல்பதே தத்ப்ரஶாந்த்யை
த்வத்பாதே₃ ப₄க்திரேவேத்யவத₃த₃யி விபோ₄ ஸித்₃த₄யோகீ₃ ப்ரபு₃த்₃த₄: || 9||

9. ஜகன்னாதா! உமது மாயை, உம்முடைய உண்மையான உருவத்தை மறைத்து, பூமி, நீர், காற்று என்று மாறித் தோன்றும்படி செய்கிறது. வினைப்பயனால் ஜீவாத்மாக்களைத் துன்பமென்னும் வலையில் தள்ளுகிறது. அந்த மாயை என்னைக் கீழ்ப்படுத்தாமல் இருக்க வேண்டும். உமது திருவடிகளில் பக்தியுடன் இருப்பதால் மட்டுமே அந்த மாயையை அழிக்க முடியுமென்று பிரபுத்தன் என்ற யோகி விதேக மன்னனிடம் கூறியுள்ளார்.

दु:खान्यालोक्य जन्तुष्वलमुदितविवेकोऽहमाचार्यवर्या-
ल्लब्ध्वा त्वद्रूपतत्त्वं गुणचरितकथाद्युद्भवद्भक्तिभूमा ।
मायामेनां तरित्वा परमसुखमये त्वत्पदे मोदिताहे
तस्यायं पूर्वरङ्ग: पवनपुरपते नाशयाशेषरोगान् ॥१०॥

து₃:கா₂ந்யாலோக்ய ஜந்துஷ்வலமுதி₃தவிவேகோ(அ)ஹமாசார்யவர்யா-
ல்லப்₃த்₄வா த்வத்₃ரூபதத்த்வம் கு₃ணசரிதகதா₂த்₃யுத்₃ப₄வத்₃ப₄க்திபூ₄மா |
மாயாமேநாம் தரித்வா பரமஸுக₂மயே த்வத்பதே₃ மோதி₃தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க₃: பவநபுரபதே நாஶயாஶேஷரோகா₃ந் || 10||

10. உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு எனக்கு விவேகம் ஏற்பட
வேண்டும். அதனால் சிறந்த குருவை அடைந்து, அவர் மூலம் உமது உண்மை வடிவத்தை அறிந்துகொள்ள வேண்டும். உமது கல்யாண குணங்களையும், சரித்திரங்களையும் பாடி, பக்தி பெருகி, மாயையைக் கடக்க வேண்டும். உமது திருவடியில் சரணடைந்து வணங்கி ஆனந்தமடைய வேண்டும். இதுவே, அம்மாயையை வெல்லும் முயற்சியின் ஆரம்பமாகும். குருவாயூரப்பா! என்னுடைய நோய்களைப் போக்கியருள வேண்டும். 

Thursday, May 29, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90, ஸ்ரீ நாராயணீயம் 90வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -90
விஷ்ணுவின் மகத்துவம் 

वृकभृगुमुनिमोहिन्यम्बरीषादिवृत्ते-
ष्वयि तव हि महत्त्वं सर्वशर्वादिजैत्रम् ।
स्थितमिह परमात्मन् निष्कलार्वागभिन्नं
किमपि यदवभातं तद्धि रूपं तवैव ॥१॥

வ்ருகப்₄ருகு₃முநிமோஹிந்யம்ப₃ரீஷாதி₃வ்ருத்தே-
ஷ்வயி தவ ஹி மஹத்த்வம் ஸர்வஶர்வாதி₃ஜைத்ரம் |
ஸ்தி₂தமிஹ பரமாத்மந் நிஷ்கலார்வாக₃பி₄ந்நம்
கிமபி யத₃வபா₄தம் தத்₃தி₄ ரூபம் தவைவ || 1||

1. வ்ருகாசுரன், பிருகு, அம்பரீஷன், மோஹினி ஆகியோருடைய சரித்திரத்தின் மூலம், பிரம்மா, பரமசிவன், தேவர்கள் ஆகியோரைவிட தங்களுடைய மகத்துவம் மேலானது என்று விளங்குகிறது. பரமாத்மாவே! பூர்ணப்ரும்மமான இறைவனின் வடிவங்களான பிரும்மா, விஷ்ணு, சிவன் இவர்களிடத்தில் இருந்து வேறுபடாமல், விவரிக்க முடியாததாய் உனது ஸ்வரூபம் பிரகாசிக்கிறது.

मूर्तित्रयेश्वरसदाशिवपञ्चकं यत्
प्राहु: परात्मवपुरेव सदाशिवोऽस्मिन् ।
तत्रेश्वरस्तु स विकुण्ठपदस्त्वमेव
त्रित्वं पुनर्भजसि सत्यपदे त्रिभागे ॥२॥

மூர்தித்ரயேஶ்வரஸதா₃ஶிவபஞ்சகம் யத்
ப்ராஹு: பராத்மவபுரேவ ஸதா₃ஶிவோ(அ)ஸ்மிந் |
தத்ரேஶ்வரஸ்து ஸ விகுண்ட₂பத₃ஸ்த்வமேவ
த்ரித்வம் புநர்ப₄ஜஸி ஸத்யபதே₃ த்ரிபா₄கே₃ || 2||

2. பிரம்மா, விஷ்ணு, சிவன், ஈஸ்வரன். சதாசிவம் என்று, மூர்த்திகளை ஐந்து விதமாக பக்தர்கள் கூறுகின்றனர். சதாசிவமும் பரமாத்ம வடிவான தாங்களேயாகும். ஈஸ்வரனும் வைகுண்டத்தில் உள்ள தாங்களேயாகும். மூவுலங்களிலும் தாங்களே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவுடையவராக விளங்குகின்றீர்.

तत्रापि सात्त्विकतनुं तव विष्णुमाहु-
र्धाता तु सत्त्वविरलो रजसैव पूर्ण: ।
सत्त्वोत्कटत्वमपि चास्ति तमोविकार-
चेष्टादिकञ्च तव शङ्करनाम्नि मूर्तौ ॥३॥

தத்ராபி ஸாத்த்விகதநும் தவ விஷ்ணுமாஹு-
ர்தா₄தா து ஸத்த்வவிரலோ ரஜஸைவ பூர்ண: |
ஸத்த்வோத்கடத்வமபி சாஸ்தி தமோவிகார-
சேஷ்டாதி₃கஞ்ச தவ ஶங்கரநாம்நி மூர்தௌ || 3||

3. அந்த மும்மூர்த்திகளில், ஸத்வ குணம் நிறைந்த உம்மை விஷ்ணு என்றும், சிறிது ஸத்வ குணத்துடன் ரஜோ குணம் நிறைந்தவரை பிரம்மா என்றும், சத்வ குணம் நிறைந்திருந்தும் தமோ குணங்கள் கொண்ட செய்கை உடையவரை சங்கரன் என்றும் கூறுகின்றனர்.

तं च त्रिमूर्त्यतिगतं परपूरुषं त्वां
शर्वात्मनापि खलु सर्वमयत्वहेतो: ।
शंसन्त्युपासनविधौ तदपि स्वतस्तु
त्वद्रूपमित्यतिदृढं बहु न: प्रमाणम् ॥४॥

தம் ச த்ரிமூர்த்யதிக₃தம் பரபூருஷம் த்வாம்
ஶர்வாத்மநாபி க₂லு ஸர்வமயத்வஹேதோ: |
ஶம்ஸந்த்யுபாஸநவிதௌ₄ தத₃பி ஸ்வதஸ்து
த்வத்₃ரூபமித்யதித்₃ருட₄ம் ப₃ஹு ந: ப்ரமாணம் || 4||

4. மும்மூர்த்திகளைக் காட்டிலும் மேலானவராயும், யாவராயும் தாங்கள் விளங்குகின்றீர்கள். தங்களையே சைவர்கள் வழிபாடு செய்யும்போது பரமேஸ்வரன் என்று கூறுகின்றனர். அதுவும் தங்களுடைய வடிவமே என்ற உண்மைக்குப் பல சான்றுகள் உள்ளன.

श्रीशङ्करोऽपि भगवान् सकलेषु ताव-
त्त्वामेव मानयति यो न हि पक्षपाती ।
त्वन्निष्ठमेव स हि नामसहस्रकादि
व्याख्यात् भवत्स्तुतिपरश्च गतिं गतोऽन्ते ॥५॥

ஶ்ரீஶங்கரோ(அ)பி ப₄க₃வாந் ஸகலேஷு தாவ-
த்த்வாமேவ மாநயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வந்நிஷ்ட₂மேவ ஸ ஹி நாமஸஹஸ்ரகாதி₃
வ்யாக்₂யாத் ப₄வத்ஸ்துதிபரஶ்ச க₃திம் க₃தோ(அ)ந்தே || 5||

5. ஆதிசங்கரர் எல்லா வடிவங்களிலும் தங்களையே போற்றுகிறார். அவர் ஒரு சார்பாகப் பேசுபவர் இல்லை. தங்களுடைய ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை செய்திருக்கிறார். உம்மைக் குறித்து ஸ்தோத்திரங்களையும் செய்து இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தவர்.

मूर्तित्रयातिगमुवाच च मन्त्रशास्त्र-
स्यादौ कलायसुषमं सकलेश्वरं त्वाम् ।
ध्यानं च निष्कलमसौ प्रणवे खलूक्त्वा
त्वामेव तत्र सकलं निजगाद नान्यम् ॥६॥

மூர்தித்ரயாதிக₃முவாச ச மந்த்ரஶாஸ்த்ர-
ஸ்யாதௌ₃ கலாயஸுஷமம் ஸகலேஶ்வரம் த்வாம் |
த்₄யாநம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே க₂லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா₃த₃ நாந்யம் || 6||

6. அவர், மந்திரங்களின் ஆரம்பத்தில், காயாம்பூ போன்று பிரகாசிப்பவராகவும், அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவராகவும் தங்களைக் கூறியுள்ளார். அவர், பிரணவத்தைப் பற்றிக் கூறும்போது நிர்க்குணமான பிரம்மத்தின் தியானம் பற்றி விவரித்து, அதற்கு உண்மைப் பொருளாகக் கல்யாண குணங்களுடன் கூடிய உம்மையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும்  அவர் கூறவில்லை.

समस्तसारे च पुराणसङ्ग्रहे
विसंशयं त्वन्महिमैव वर्ण्यते ।
त्रिमूर्तियुक्सत्यपदत्रिभागत:
परं पदं ते कथितं न शूलिन: ॥७॥

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்₃ரஹே
விஸம்ஶயம் த்வந்மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்தியுக்ஸத்யபத₃த்ரிபா₄க₃த:
பரம் பத₃ம் தே கதி₂தம் ந ஶூலிந: || 7||

7. புராணங்களின் சாரத்தைக் கூறும் புராண ஸங்க்ரஹம் என்னும் நூலில் உமது மகத்துவமே கூறப்பட்டிருக்கிறது. மும்மூர்த்திகள் வசிக்கும் ஸத்யலோகத்தைவிட உயர்ந்ததாக உமது வைகுண்டம் விவரிக்கப்படுகிறது. சிவலோகத்தைப் பற்றிக் கூறவில்லை.

यत् ब्राह्मकल्प इह भागवतद्वितीय-
स्कन्धोदितं वपुरनावृतमीश धात्रे ।
तस्यैव नाम हरिशर्वमुखं जगाद
श्रीमाधव: शिवपरोऽपि पुराणसारे ॥८॥

யத் ப்₃ராஹ்மகல்ப இஹ பா₄க₃வதத்₃விதீய-
ஸ்கந்தோ₄தி₃தம் வபுரநாவ்ருதமீஶ தா₄த்ரே |
தஸ்யைவ நாம ஹரிஶர்வமுக₂ம் ஜகா₃த₃
ஶ்ரீமாத₄வ: ஶிவபரோ(அ)பி புராணஸாரே || 8||

8. பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில், பிரம்மாவிற்குத் தங்கள் வடிவத்தைப் பிரத்யக்ஷமாகக் காட்டினீர். சிவபக்தரான ஸ்ரீ மாதவாச்சாரியார், புராணஸாரம் என்ற தமது நூலில் அந்த வடிவத்திற்கே விஷ்ணு, சிவன் முதலிய பெயர் என்று கூறியிருக்கிறார்.

ये स्वप्रकृत्यनुगुणा गिरिशं भजन्ते
तेषां फलं हि दृढयैव तदीयभक्त्या।
व्यासो हि तेन कृतवानधिकारिहेतो:
स्कन्दादिकेषु तव हानिवचोऽर्थवादै: ॥९॥

யே ஸ்வப்ரக்ருத்யநுகு₃ணா கி₃ரிஶம் ப₄ஜந்தே
தேஷாம் ப₂லம் ஹி த்₃ருட₄யைவ ததீ₃யப₄க்த்யா|
வ்யாஸோ ஹி தேந க்ருதவாநதி₄காரிஹேதோ:
ஸ்கந்தா₃தி₃கேஷு தவ ஹாநிவசோ(அ)ர்த₂வாதை₃: || 9||

9. தன் சொந்த இயல்புக்கு ஏற்ப, சிவனிடம் தன்னை அர்ப்பணித்து பக்தியுடன் வழிபடுவோருக்கு அதற்குரிய பலன் கிடைக்கிறது. அதனால், வியாசர் ஸ்காந்தம் முதலிய புராணங்களில் சிவனைப் பற்றிப் பெருமையாகக் கூறி உம்மை சிறுமைப்படுத்திக் கூறினார்.

भूतार्थकीर्तिरनुवादविरुद्धवादौ
त्रेधार्थवादगतय: खलु रोचनार्था: ।
स्कान्दादिकेषु बहवोऽत्र विरुद्धवादा-
स्त्वत्तामसत्वपरिभूत्युपशिक्षणाद्या: ॥१०॥

பூ₄தார்த₂கீர்திரநுவாத₃விருத்₃த₄வாதௌ₃
த்ரேதா₄ர்த₂வாத₃க₃தய: க₂லு ரோசநார்தா₂: |
ஸ்காந்தா₃தி₃கேஷு ப₃ஹவோ(அ)த்ர விருத்₃த₄வாதா₃-
ஸ்த்வத்தாமஸத்வபரிபூ₄த்யுபஶிக்ஷணாத்₃யா: || 10||

10. அர்த்தவாதம் மூன்று வகைப்படும். உண்மைகளை உள்ளபடி கூறுவது, அனுபவத்திற்கு ஏற்பப் புகழ்ந்து துதிப்பது, வேண்டாதவற்றை நிந்தித்து, முரணாகப் பேசுவது. ஸ்காந்தத்தில் தங்களைக் குறைவாகக் கூறியது மூன்றாவது வகையாகும். அது உண்மையல்ல.

यत् किञ्चिदप्यविदुषाऽपि विभो मयोक्तं
तन्मन्त्रशास्त्रवचनाद्यभिदृष्टमेव ।
व्यासोक्तिसारमयभागवतोपगीत
क्लेशान् विधूय कुरु भक्तिभरं परात्मन् ॥११॥

யத் கிஞ்சித₃ப்யவிது₃ஷா(அ)பி விபோ₄ மயோக்தம்
தந்மந்த்ரஶாஸ்த்ரவசநாத்₃யபி₄த்₃ருஷ்டமேவ |
வ்யாஸோக்திஸாரமயபா₄க₃வதோபகீ₃த
க்லேஶாந் விதூ₄ய குரு ப₄க்திப₄ரம் பராத்மந் || 11||

11. பிரபுவே! அறிவற்ற நான் கூறியதும்கூட மந்திர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டவையே. வியாசரின் பாகவதத்தில் போற்றிப் புகழப்பட்ட பரமாத்மாவே! என் துக்கங்களைப் போக்கி, வியாதிகளை ஒழித்து, எனக்கு உறுதியான பக்தி கிடைக்க அருள வேண்டும்.

Wednesday, May 28, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 89, ஸ்ரீ நாராயணீயம் 89வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -89
வ்ருகாசுரன் கதை, ப்ருகுவை சோதித்தல் 

रमाजाने जाने यदिह तव भक्तेषु विभवो
न सद्यस्सम्पद्यस्तदिह मदकृत्त्वादशमिनाम् ।
प्रशान्तिं कृत्वैव प्रदिशसि तत: काममखिलं
प्रशान्तेषु क्षिप्रं न खलु भवदीये च्युतिकथा ॥१॥

ரமாஜாநே ஜாநே யதி₃ஹ தவ ப₄க்தேஷு விப₄வோ
ந ஸத்₃யஸ்ஸம்பத்₃யஸ்ததி₃ஹ மத₃க்ருத்த்வாத₃ஶமிநாம் |
ப்ரஶாந்திம் க்ருத்வைவ ப்ரதி₃ஶஸி தத: காமமகி₂லம்
ப்ரஶாந்தேஷு க்ஷிப்ரம் ந க₂லு ப₄வதீ₃யே ச்யுதிகதா₂ || 1||

1. லக்ஷ்மியின் நாயகனே! இவ்வுலகத்தில் தங்களது பக்தர்களுக்கு எளிதில் ஐஸ்வர்யம் கிடைப்பதில்லை. ஏனெனில் செல்வங்களால் அகங்காரம் உண்டாகிறது என்பதால் அவ்வாறு செய்கிறீர்கள் போலும். இந்திரியங்களை அடக்கும் மனநிலையைத் தந்து, பிறகு அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றீர். அந்த மனநிலையை ஏற்கெனவே பெற்றவர்களுக்கு உடனேயே அனுக்ரஹம் செய்கின்றீர். தங்கள் பக்தர்களுக்கு வீழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

सद्य: प्रसादरुषितान् विधिशङ्करादीन्
केचिद्विभो निजगुणानुगुणं भजन्त: ।
भ्रष्टा भवन्ति बत कष्टमदीर्घदृष्ट्या
स्पष्टं वृकासुर उदाहरणं किलास्मिन् ॥२॥

ஸத்₃ய: ப்ரஸாத₃ருஷிதாந் விதி₄ஶங்கராதீ₃ந்
கேசித்₃விபோ₄ நிஜகு₃ணாநுகு₃ணம் ப₄ஜந்த: |
ப்₄ரஷ்டா ப₄வந்தி ப₃த கஷ்டமதீ₃ர்க₄த்₃ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா₃ஹரணம் கிலாஸ்மிந் || 2||

2. விரைவில் சந்தோஷத்தையும், கோபத்தையும் அடையும் பிரம்மா, பரமசிவன் முதலியோரை, மக்கள் தங்கள் சொந்த இயல்புக்கு ஏற்ப வழிபடுகின்றனர். அந்தோ! அவர்கள் குறுகிய நோக்கத்தில் வீழ்ந்து விடுகின்றனர். இதற்கு வ்ருகாசுரனே தெளிவான உதாரணம்.

शकुनिज: स तु नारदमेकदा
त्वरिततोषमपृच्छदधीश्वरम् ।
स च दिदेश गिरीशमुपासितुं
न तु भवन्तमबन्धुमसाधुषु ॥३॥

ஶகுநிஜ: ஸ து நாரத₃மேகதா₃
த்வரிததோஷமப்ருச்ச₂த₃தீ₄ஶ்வரம் |
ஸ ச தி₃தே₃ஶ கி₃ரீஶமுபாஸிதும்
ந து ப₄வந்தமப₃ந்து₄மஸாது₄ஷு || 3||

3. சகுனியின் பிள்ளையான வ்ருகாசுரன், எளிதில் மகிழும் தெய்வம் யார் என்று நாரதரிடம் கேட்டான். அவரும் பரமசிவனை வணங்கும்படி உபதேசித்தார். தீய எண்ணம் கொண்ட மக்களைத் தாங்கள் ஆதரிக்க மாட்டீர்கள் என்பதால் தீயவனான அவனிடம் அவ்வாறு உபதேசித்தார்.

तपस्तप्त्वा घोरं स खलु कुपित: सप्तमदिने
शिर: छित्वा सद्य: पुरहरमुपस्थाप्य पुरत: ।
अतिक्षुद्रं रौद्रं शिरसि करदानेन निधनं
जगन्नाथाद्वव्रे भवति विमुखानां क्व शुभधी: ॥४॥

தபஸ்தப்த்வா கோ₄ரம் ஸ க₂லு குபித: ஸப்தமதி₃நே
ஶிர: சி₂த்வா ஸத்₃ய: புரஹரமுபஸ்தா₂ப்ய புரத: |
அதிக்ஷுத்₃ரம் ரௌத்₃ரம் ஶிரஸி கரதா₃நேந நித₄நம்
ஜக₃ந்நாதா₂த்₃வவ்ரே ப₄வதி விமுகா₂நாம் க்வ ஶுப₄தீ₄: || 4||

4. கடுமையான தவம் செய்த வ்ருகாசுரன், சிவனைக் காணாததால் ஏழாவது நாளன்று கோபத்துடன் தனது தலையைத் துண்டித்துக் கொள்ள முயன்றபோது, பரமசிவன் அவன் முன் தோன்றினார். அசுரன், யார் தலையில் நான் கை வைக்கிறேனோ, அவன் உடனே சாம்பலாகிவிட வேண்டும் என்ற நீச்சமான, பயங்கரமான வரத்தைக் கேட்டான். உம்மிடம் பக்தி இல்லாதவர்களுக்கு எவ்வாறு நல்லறிவு உண்டாகும்?

मोक्तारं बन्धमुक्तो हरिणपतिरिव प्राद्रवत्सोऽथ रुद्रं
दैत्यात् भीत्या स्म देवो दिशि दिशि वलते पृष्ठतो दत्तदृष्टि: ।
तूष्णीके सर्वलोके तव पदमधिरोक्ष्यन्तमुद्वीक्ष्य शर्वं
दूरादेवाग्रतस्त्वं पटुवटुवपुषा तस्थिषे दानवाय ॥५॥

மோக்தாரம் ப₃ந்த₄முக்தோ ஹரிணபதிரிவ ப்ராத்₃ரவத்ஸோ(அ)த₂ ருத்₃ரம்
தை₃த்யாத் பீ₄த்யா ஸ்ம தே₃வோ தி₃ஶி தி₃ஶி வலதே ப்ருஷ்ட₂தோ த₃த்தத்₃ருஷ்டி: |
தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத₃மதி₄ரோக்ஷ்யந்தமுத்₃வீக்ஷ்ய ஶர்வம்
தூ₃ராதே₃வாக்₃ரதஸ்த்வம் படுவடுவபுஷா தஸ்தி₂ஷே தா₃நவாய || 5||

5. அந்த வ்ருகாசுரன், கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கம்  விடுவித்தவனையே துரத்துவதுபோல், சிவனிடமே அந்த வரத்தை சோதிக்க நினைத்தான். சிவனும் அசுரனிடத்தில் பயந்து, திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திக்குகளிலும் ஓடினார். எல்லா உலகங்களுக்கும் ஓடினார். பின்னர் வைகுண்டத்திற்குச் செல்ல நினைத்தார். அதைக் கண்ட தாங்கள், அசுரன் வெகுதூரத்தில் வரும்போது ஒரு சாமர்த்தியமான பிரம்மச்சாரி வேடம் பூண்டு நின்றீர்.

भद्रं ते शाकुनेय भ्रमसि किमधुना त्वं पिशाचस्य वाचा
सन्देहश्चेन्मदुक्तौ तव किमु न करोष्यङ्गुलीमङ्गमौलौ ।
इत्थं त्वद्वाक्यमूढ: शिरसि कृतकर: सोऽपतच्छिन्नपातं
भ्रंशो ह्येवं परोपासितुरपि च गति: शूलिनोऽपि त्वमेव ॥६॥

ப₄த்₃ரம் தே ஶாகுநேய ப்₄ரமஸி கிமது₄நா த்வம் பிஶாசஸ்ய வாசா
ஸந்தே₃ஹஶ்சேந்மது₃க்தௌ தவ கிமு ந கரோஷ்யங்கு₃லீமங்க₃மௌலௌ |
இத்த₂ம் த்வத்₃வாக்யமூட₄: ஶிரஸி க்ருதகர: ஸோ(அ)பதச்சி₂ந்நபாதம்
ப்₄ரம்ஶோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி ச க₃தி: ஶூலிநோ(அ)பி த்வமேவ || 6||

6. அவன் தங்களிடம் வந்ததும் அவனிடம், “அந்தப் பிசாசின் பேச்சைக் கேட்டு ஏன் அலைகின்றாய்? சந்தேகமிருந்தால் உன் தலையிலேயே கைவைத்து ன் பார்க்கவில்லை? என்று கூறினீர். அந்த வார்த்தைகளில் மயங்கிய அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு வேரற்ற மரம் போல, சாம்பலாகிக் கீழே விழுந்தான். இவ்வாறு மற்ற தெய்வங்களை வணங்குவோருக்கு வீழ்ச்சி உண்டு. பரமசிவனுக்கும் கூட இறுதியில் அடைக்கலம் அளிப்பவர் தாங்கள்தான்.

भृगुं किल सरस्वतीनिकटवासिनस्तापसा-
स्त्रिमूर्तिषु समादिशन्नधिकसत्त्वतां वेदितुम् ।
अयं पुनरनादरादुदितरुद्धरोषे विधौ
हरेऽपि च जिहिंसिषौ गिरिजया धृते त्वामगात् ॥७॥

ப்₄ருகு₃ம் கில ஸரஸ்வதீநிகடவாஸிநஸ்தாபஸா-
ஸ்த்ரிமூர்திஷு ஸமாதி₃ஶந்நதி₄கஸத்த்வதாம் வேதி₃தும் |
அயம் புநரநாத₃ராது₃தி₃தருத்₃த₄ரோஷே விதௌ₄
ஹரே(அ)பி ச ஜிஹிம்ஸிஷௌ கி₃ரிஜயா த்₄ருதே த்வாமகா₃த் || 7||

7. ஒரு சமயம், சரஸ்வதி நதிக்கரையில் வசித்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் யாரிடம் ஸத்வ குணம் இருக்கிறது என்று அறிய பிருகு என்ற முனிவரை அனுப்பினார்கள். பிரம்மலோகம் சென்ற பிருகு, பிரம்மாவிற்கு நமஸ்காரம் செய்யவில்லை. அதைக் கண்ட பிரம்மா கோபமடைந்தார். ஆயினும், கோபத்தை அடக்கிக் கொண்டார். பின்னர் பிருகு கைலாசம் சென்று அவ்வாறே நடந்து கொண்டார். சிவன் கோபம் கொண்டு அவரைக் கொல்ல முயல, பார்வதிதேவி அதைத் தடுத்தாள். பிறகு, பிருகு உம்மிடம் வந்தார்.

सुप्तं रमाङ्कभुवि पङ्कजलोचनं त्वां
विप्रे विनिघ्नति पदेन मुदोत्थितस्त्वम् ।
सर्वं क्षमस्व मुनिवर्य भवेत् सदा मे
त्वत्पादचिन्हमिह भूषणमित्यवादी: ॥८॥

ஸுப்தம் ரமாங்கபு₄வி பங்கஜலோசநம் த்வாம்
விப்ரே விநிக்₄நதி பதே₃ந முதோ₃த்தி₂தஸ்த்வம் |
ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய ப₄வேத் ஸதா₃ மே
த்வத்பாத₃சிந்ஹமிஹ பூ₄ஷணமித்யவாதீ₃: || 8||

8. தாமரைக் கண்ணனான நீர் மஹாலக்ஷ்மியின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தீர். பிருகு உம்மைக் காலால் எட்டி உதைத்தார். தாங்கள் உடனே எழுந்து மன்னிப்பு கேட்டு, அவரது கால் அடையாளக்குறி எப்போதும் உமது மார்பின் மீது அலங்காரமாக இருக்க வேண்டும் என்று கூறினீர்.

निश्चित्य ते च सुदृढं त्वयि बद्धभावा:
सारस्वता मुनिवरा दधिरे विमोक्षम् ।
त्वामेवमच्युत पुनश्च्युतिदोषहीनं
सत्त्वोच्चयैकतनुमेव वयं भजाम: ॥९॥

நிஶ்சித்ய தே ச ஸுத்₃ருட₄ம் த்வயி ப₃த்₃த₄பா₄வா:
ஸாரஸ்வதா முநிவரா த₃தி₄ரே விமோக்ஷம் |
த்வாமேவமச்யுத புநஶ்ச்யுதிதோ₃ஷஹீநம்
ஸத்த்வோச்சயைகதநுமேவ வயம் ப₄ஜாம: || 9||

9. பிருகு முனிவர் இதை சரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் கூறியதும் அவர்கள் நீரே ஸத்வ குணம் நிரம்பியவர் என்று அறிந்து உம்மிடத்திலேயே அசையாத பக்தி கொண்டு மோக்ஷமடைந்தனர். அச்சுதனே! குறையொன்றும் இல்லாத ஸத்வகுணம் நிரம்பிய உம்மை நாங்கள் வணங்குகிறோம்.

जगत्सृष्ट्यादौ त्वां निगमनिवहैर्वन्दिभिरिव
स्तुतं विष्णो सच्चित्परमरसनिर्द्वैतवपुषम् ।
परात्मानं भूमन् पशुपवनिताभाग्यनिवहं
परितापश्रान्त्यै पवनपुरवासिन् परिभजे ॥१०॥

ஜக₃த்ஸ்ருஷ்ட்யாதௌ₃ த்வாம் நிக₃மநிவஹைர்வந்தி₃பி₄ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித்பரமரஸநிர்த்₃வைதவபுஷம் |
பராத்மாநம் பூ₄மந் பஶுபவநிதாபா₄க்₃யநிவஹம்
பரிதாபஶ்ராந்த்யை பவநபுரவாஸிந் பரிப₄ஜே || 10||

10. அரசர்களின் சபையில் துதிபாடும் இசைவாணர்களைப் போல், படைப்பின் ஆரம்பத்தில் வேதங்கள் உம்மைத் துதித்தன. தாங்கள் சச்சிதானந்த ரூபமாகவும், அத்வைத ரூபமாகவும், பரமாத்மாவாகவும் இருப்பவர். கோபிகைகளுடைய நல்வினையின் குவியல். என்னுடைய எல்லா துக்கங்களையும் போக்கி அருளத் தங்களையே வேண்டுகிறேன்.

Tuesday, May 27, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88, ஸ்ரீ நாராயணீயம் 88வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -88
ஸந்தானகோபாலம்

प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां
काङ्क्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् ।
धातु: शापाद्धिरण्यान्वितकशिपुभवान् शौरिजान् कंसभग्ना-
नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथा: पूर्वपुत्रान् मरीचे: ॥१॥

ப்ராகே₃வாசார்யபுத்ராஹ்ருதிநிஶமநயா ஸ்வீயஷட்ஸூநுவீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபு₄வி ப₃லிம் ப்ராப்ய தேநார்சிதஸ்த்வம் |
தா₄து: ஶாபாத்₃தி₄ரண்யாந்விதகஶிபுப₄வாந் ஶௌரிஜாந் கம்ஸப₄க்₃நா-
நாநீயைநாந் ப்ரத₃ர்ஶ்ய ஸ்வபத₃மநயதா₂: பூர்வபுத்ராந் மரீசே: || 1||

1. தங்கள் குரு சாந்தீபனியின் இறந்த குழந்தைகளைப் பிழைக்கச் செய்து குருதக்ஷிணையாகத் தாங்கள் கொடுத்ததைக் கேட்ட தேவகி, தன்னுடைய இறந்த ஆறு குழந்தைகளையும் பார்க்க விரும்பினாள். அதைக்கேட்ட தாங்கள் ஸுதலலோகத்திற்குச் சென்றீர். மகாபலி தங்களை வரவேற்றுப் பூஜித்தான். மரீசியின் பிள்ளைகள், பிரும்மதேவரின் சாபத்தால், ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்களே வசுதேவரின் மூலம் தேவகிக்கு பிள்ளைகளாகப் பிறந்தபோது கம்ஸன் அவர்களைக் கொன்றான். அவர்களை ஸுதலலோகத்திலிருந்து அழைத்து வந்து தேவகியிடம் காட்டிப் பின்னர் வைகுண்டத்திற்கு அனுப்பினீர்.

श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं
बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् ।
युगपत्त्वमनुग्रहीतुकामो
मिथिलां प्रापिथं तापसै: समेत: ॥२॥

ஶ்ருததே₃வ இதி ஶ்ருதம் த்₃விஜேந்த்₃ரம்
ப₃ஹுலாஶ்வம் ந்ருபதிம் ச ப₄க்திபூர்ணம் |
யுக₃பத்த்வமநுக்₃ரஹீதுகாமோ
மிதி₂லாம் ப்ராபித₂ம் தாபஸை: ஸமேத: || 2||

2. பக்தியில் சிறந்த ஸ்ருததேவன் என்ற அந்தணரையும், பஹுலாஸ்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹம் செய்ய விரும்பி, முனிவர்களுடன் மிதிலைக்குச் சென்றீர்.

गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेत-
मेकेन भूरिविभवैर्विहितोपचार: ।
अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यै-
स्तुल्यं प्रसेदिथ ददथ च मुक्तिमाभ्याम् ॥३॥

க₃ச்ச₂ந் த்₃விமூர்திருப₄யோர்யுக₃பந்நிகேத-
மேகேந பூ₄ரிவிப₄வைர்விஹிதோபசார: |
அந்யேந தத்₃தி₃நப்₄ருதைஶ்ச ப₂லௌத₃நாத்₃யை-
ஸ்துல்யம் ப்ரஸேதி₃த₂ த₃த₃த₂ ச முக்திமாப்₄யாம் || 3||

3. ஒரே மாதிரியான இரண்டு உருவங்கள் எடுத்துக்கொண்டு ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் வீட்டிற்கும் சென்றீர். அரசன் விலையுயர்ந்த பொருட்களாலும், அந்தணன் அன்றைய தினம் பெறப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றாலும் பூஜித்தனர். இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மோக்ஷம் அளித்தீர்கள்.

भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वम्
को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाप्यसोढा: ।
जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं
तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये ॥४॥

பூ₄யோ(அ)த₂ த்₃வாரவத்யாம் த்₃விஜதநயம்ருதிம் தத்ப்ரலாபாநபி த்வம்
கோ வா தை₃வம் நிருந்த்₄யாதி₃தி கில கத₂யந் விஶ்வவோடா₄ப்யஸோடா₄: |
ஜிஷ்ணோர்க₃ர்வம் விநேதும் த்வயி மநுஜதி₄யா குண்டி₂தாம் சாஸ்ய பு₃த்₃தி₄ம்
தத்த்வாரூடா₄ம் விதா₄தும் பரமதமபத₃ப்ரேக்ஷணேநேதி மந்யே || 4||

4. துவாரகையில் ஒரு பிராமணனுக்குக் குழந்தைகள் பிறந்து பின் இறந்தன. அழுது புலம்பிய தந்தையிடம் விதியை யாராலும் தடுக்க முடியாது என்று உலகத்திற்கே நாயகனான நீர் கூறினீர். அர்ஜுனனுடைய கர்வத்தையும், உம்மை சாதாரண மனிதன் என்று நினைத்த அவனது எண்ணத்தையும் போக்கவே அவ்வாறு செய்தீர். அவனுக்குத் தங்கள் ஸ்தானமான வைகுண்டத்தைக் காட்டி, தாங்கள் பரமாத்ம ஸ்வரூபம் என்ற எண்ணத்தை அவனுக்கு அளித்தீர்.

नष्टा अष्टास्य पुत्रा: पुनरपि तव तूपेक्षया कष्टवाद:
स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थ: ।
मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं
श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुत: सन्निवेक्ष्ये कृशानुम् ॥५॥

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புநரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத₃:
ஸ்பஷ்டோ ஜாதோ ஜநாநாமத₂ தத₃வஸரே த்₃வாரகாமாப பார்த₂: |
மைத்ர்யா தத்ரோஷிதோ(அ)ஸௌ நவமஸுதம்ருதௌ விப்ரவர்யப்ரரோத₃ம்
ஶ்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமநுபஹ்ருதஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருஶாநும் || 5||

5. இவ்வாறு அந்த பிராமணனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தும் தாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் பேசினார்கள். அப்போது துவாரகைக்கு அர்ஜுனன் வந்தான். அந்நேரத்தில், அந்த பிராமணனுக்கு ஒன்பதாவது குழந்தையும் பிறந்து இறந்ததால் அவன் அழுது அரற்றினான். அதைக்கேட்ட அர்ஜுனன், “இறந்த குழந்தைகளை மீட்டு வருவேன், இல்லாவிடில் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்” என்று சபதம் செய்தான்.

मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै
रुन्धान: सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे ।
याम्यामैन्द्रीं तथाऽन्या: सुरवरनगरीर्विद्ययाऽऽसाद्य सद्यो
मोघोद्योग: पतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत् ॥६॥

மாநீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்₃விஜநிலயக₃தோ பா₃ணஜாலைர்மஹாஸ்த்ரை
ருந்தா₄ந: ஸூதிகே₃ஹம் புநரபி ஸஹஸா த்₃ருஷ்டநஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்₃ரீம் ததா₂(அ)ந்யா: ஸுரவரநக₃ரீர்வித்₃யயா(அ)(அ)ஸாத்₃ய ஸத்₃யோ
மோகோ₄த்₃யோக₃: பதிஷ்யந் ஹுதபு₄ஜி ப₄வதா ஸஸ்மிதம் வாரிதோ(அ)பூ₄த் || 6||

6. அந்த பிராமணனுக்குப் பத்தாவது குழந்தை பிறக்க இருக்கும் சமயம், அர்ஜுனன் தங்களிடம் ஏதும் சொல்லாமல், அந்த பிராமணனுடைய வீட்டிற்குச் சென்று, பிரசவ அறையைச் சுற்றி பெரிய அஸ்திரங்களாலும், அம்புகளாலும் பாதுகாப்புச் சுவர் எழுப்பினான். ஆனால் குழந்தை பிறந்து இறந்ததுமில்லாமல் அதனுடைய உடலும் காணாமல் போனது. தனது யோக சக்தியால் அர்ஜுனன், யமலோகம், இந்திரலோகம், தேவலோகம் ஆகிய எல்லா உலகங்களிலும் தேடியும் அக்குழந்தை கிடைக்கவில்லை. அதனால் சபதம் செய்தபடி தீயில் விழ முற்பட்டபோது, தாங்கள் புன்முறுவலுடன் அவனைத் தடுத்தீர்.

सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो
लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् ।
चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां
पारे त्वं प्राददर्श: किमपि हि तमसां दूरदूरं पदं ते ॥७॥

ஸார்த₄ம் தேந ப்ரதீசீம் தி₃ஶமதிஜவிநா ஸ்யந்த₃நேநாபி₄யாதோ
லோகாலோகம் வ்யதீதஸ்திமிரப₄ரமதோ₂ சக்ரதா₄ம்நா நிருந்த₄ந் |
சக்ராம்ஶுக்லிஷ்டத்₃ருஷ்டிம் ஸ்தி₂தமத₂ விஜயம் பஶ்ய பஶ்யேதி வாராம்
பாரே த்வம் ப்ராத₃த₃ர்ஶ: கிமபி ஹி தமஸாம் தூ₃ரதூ₃ரம் பத₃ம் தே || 7||

7. தேரில் ஏறி அர்ஜுனனுடன் வேகமாய் மேற்கு திசையை நோக்கிச் சென்றீர். லோகாலோகம் என்ற மலையைத் தாண்டி இருளாக இருந்தது. சக்ராயுதத்தின் ஒளியால் அந்த இருளைப் போக்கினீர். அந்த ஒளியைப் பார்க்க முடியாத அர்ஜுனனுக்கு, காரண ஜலத்திற்கப்பால், அக்ஞானம் என்னும் இருளால் பாதிக்கப்படாததும், விவரிக்கமுடியாததுமான தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைக் காட்டினீர்.

तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यै-
रावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामलं श्रीमदङ्गम् ।
मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां
त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम् ॥८॥

தத்ராஸீநம் பு₄ஜங்கா₃தி₄பஶயநதலே தி₃வ்யபூ₄ஷாயுதா₄த்₃யை-
ராவீதம் பீதசேலம் ப்ரதிநவஜலத₃ஶ்யாமலம் ஶ்ரீமத₃ங்க₃ம் |
மூர்தீநாமீஶிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த₂ம் ஶ்ருதீநாம்
த்வாமேவ த்வம் பராத்மந் ப்ரியஸக₂ஸஹிதோ நேமித₂ க்ஷேமரூபம் || 8||

8. ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பவரும், தெய்வீகமான ஆபரணங்கள் அணிந்தவரும், தெய்வீகமான ஆயுதங்கள் ஏந்தியவரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் தாங்கியிருப்பவரும், கார்மேகம் போன்ற நீல வண்ணத்துடன் காட்சி அளிப்பவரும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவரும், வேதங்களின் ஸாரமாகவும், பரமபுருஷனாகவும் இருக்கும் தங்களையே அங்கு கண்டு, நண்பனான அர்ஜுனனுடன் சேர்ந்து தாங்களும் நமஸ்காரம் செய்தீர்.

युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया
विभिन्नौ सन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् ।
नयेतं द्रागेतानिति खलु वितीर्णान् पुनरमून्
द्विजायादायादा: प्रणुतमहिमा पाण्डुजनुषा ॥९॥

யுவாம் மாமேவ த்₃வாவதி₄கவிவ்ருதாந்தர்ஹிததயா
விபி₄ந்நௌ ஸந்த்₃ரஷ்டும் ஸ்வயமஹமஹார்ஷம் த்₃விஜஸுதாந் |
நயேதம் த்₃ராகே₃தாநிதி க₂லு விதீர்ணாந் புநரமூந்
த்₃விஜாயாதா₃யாதா₃: ப்ரணுதமஹிமா பாண்டு₃ஜநுஷா || 9||

9. “ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அதனுள்ளே மறைந்திருக்கும் மற்றொன்றாகவும் (பரமாத்மாவாகவும், ஜீவாத்மாவாகவும்) இரண்டாகப் பிரிந்து இருவேறு உருவங்களுடன் இருக்கும் உங்கள் இருவரையும் ஒன்றாகக் காண வேண்டும் என்பதற்காக நானே பிராமணக் குழந்தைகளை எடுத்துக் கொண்டேன். அவர்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று வைகுண்டத்தில் காணப்பட்ட பகவான் கூறினார். உடனே அர்ஜுனன் உமது மகிமையைப் புகழ்ந்து பாடினான். பிறகு, அக்குழந்தைகளையும் எடுத்து வந்து பிராமணரிடம் கொடுத்தீர்.

एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण-
न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभि: प्रीणयन्नेणनेत्रा: ।
भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्ण:
पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासी: ॥१०॥

ஏவம் நாநாவிஹாரைர்ஜக₃த₃பி₄ரமயந் வ்ருஷ்ணிவம்ஶம் ப்ரபுஷ்ண-
ந்நீஜாநோ யஜ்ஞபே₄தை₃ரதுலவிஹ்ருதிபி₄: ப்ரீணயந்நேணநேத்ரா: |
பூ₄பா₄ரக்ஷேபத₃ம்பா₄த் பத₃கமலஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண:
பூர்ணம் ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத்₃யது₃ஷு மநுஜதாரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ: || 10||

10. இவ்வாறு பலவிதமான லீலைகளால் உலகத்தை மகிழ்வித்தும், வ்ருஷ்ணி வம்சத்தைப் பேணிக் காத்தும், பல யாகங்களைச் செய்து கொண்டும், நிகரேதும் இல்லாத விளையாட்டுக்களால் பெண்களை மகிழ்வித்துக் கொண்டும் விளங்கினீர். பூர்ணப்ரம்மமாகிய தாங்கள், பூபாரத்தைப் போக்கும் காரியத்தில், தங்களுடைய தாமரை போன்ற பாதங்களை அண்டியவர்களுக்கு முக்தி அளித்து, யாதவர்களிடையே மனித வடிவில் தோன்றிப் பிரகாசித்தீர்.

प्रायेण द्वारवत्यामवृतदयि तदा नारदस्त्वद्रसार्द्र-
स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् ।
भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव
प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽऽस्ते बदर्याम् ॥११॥

ப்ராயேண த்₃வாரவத்யாமவ்ருதத₃யி ததா₃ நாரத₃ஸ்த்வத்₃ரஸார்த்₃ர-
ஸ்தஸ்மால்லேபே₄ கதா₃சித்க₂லு ஸுக்ருதநிதி₄ஸ்த்வத்பிதா தத்த்வபோ₃த₄ம் |
ப₄க்தாநாமக்₃ரயாயீ ஸ ச க₂லு மதிமாநுத்₃த₄வஸ்த்வத்த ஏவ
ப்ராப்தோ விஜ்ஞாநஸாரம் ஸ கில ஜநஹிதாயாது₄நா(அ)(அ)ஸ்தே ப₃த₃ர்யாம் || 11||

11. உமது வழிபாட்டில் மூழ்கிய நாரதர் பெரும்பாலும் துவாரகையிலேயே தங்கியிருந்தார். அப்போது, பெருமைக்குரிய உமது தந்தை வசுதேவர், அவரிடமிருந்து ஆத்ம ஞானத்தைப் பெற்றார். அறிவில் சிறந்தவரும், பக்தர்களுக்குள் முதன்மையானவருமான உத்தவர் உம்மிடமிருந்து தத்துவ ஞானத்தைப் பெற்றார். உலகநன்மைக்காக இன்றும் உத்தவர் பத்ரியில் வசிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-
स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।
आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:
स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥

ஸோ(அ)யம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ₄ யத்ர ஸௌஹார்த₃பீ₄தி-
ஸ்நேஹத்₃வேஷாநுராக₃ப்ரப்₄ருதிபி₄ரதுலைரஶ்ரமைர்யோக₃பே₄தை₃: |
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருதபத₃மகு₃ஸ்ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவநபுரபதே ப₄க்திபூர்த்யை ச பூ₄யா: || 12||

12. மேன்மை மிகுந்த இந்த கிருஷ்ணாவதாரம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. நட்பு, பயம், அன்பு, காதல், வெறுப்பு, இணைப்பு போன்ற பல வழிவகைகள் மூலம் மக்கள் எல்லா துக்கங்களையும் போக்கிக்கொண்டு உலக பந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். குருவாயூரப்பா! உலகின் கவலைகளை நீக்கி, அடியேனும் முழு பக்தி பெற வகை செய்தருளிக் காக்க வேண்டும்.

Monday, May 26, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87, ஸ்ரீ நாராயணீயம் 87வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -87
குசேலோபாக்யானம்

कुचेलनामा भवत: सतीर्थ्यतां गत: स सान्दीपनिमन्दिरे द्विज: ।
त्वदेकरागेण धनादिनिस्स्पृहो दिनानि निन्ये प्रशमी गृहाश्रमी ॥१॥

குசேலநாமா ப₄வத: ஸதீர்த்₂யதாம் க₃த: ஸ ஸாந்தீ₃பநிமந்தி₃ரே த்₃விஜ: |
த்வதே₃கராகே₃ண த₄நாதி₃நிஸ்ஸ்ப்ருஹோ தி₃நாநி நிந்யே ப்ரஶமீ க்₃ருஹாஶ்ரமீ || 1||

1. ஸாந்தீபனி முனிவரிடம் தாங்கள் குருகுலம் பயின்றபோது, குசேலர் என்ற பிராமணர் தங்களுடன் பயின்றார். கிருஹஸ்தனான அவர் உம் ஒருவரிடத்திலேயே பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார்.

समानशीलाऽपि तदीयवल्लभा तथैव नो चित्तजयं समेयुषी ।
कदाचिदूचे बत वृत्तिलब्धये रमापति: किं न सखा निषेव्यते ॥२॥

ஸமாநஶீலா(அ)பி ததீ₃யவல்லபா₄ ததை₂வ நோ சித்தஜயம் ஸமேயுஷீ |
கதா₃சிதூ₃சே ப₃த வ்ருத்திலப்₃த₄யே ரமாபதி: கிம் ந ஸகா₂ நிஷேவ்யதே || 2||

2. அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். ஆனால் ஆசையற்ற நிலையை அடையவில்லை. ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள்.

इतीरितोऽयं प्रियया क्षुधार्तया जुगुप्समानोऽपि धने मदावहे ।
तदा त्वदालोकनकौतुकाद्ययौ वहन् पटान्ते पृथुकानुपायनम् ॥३॥

இதீரிதோ(அ)யம் ப்ரியயா க்ஷுதா₄ர்தயா ஜுகு₃ப்ஸமாநோ(அ)பி த₄நே மதா₃வஹே |
ததா₃ த்வதா₃லோகநகௌதுகாத்₃யயௌ வஹந் படாந்தே ப்ருது₂காநுபாயநம் || 3||

3. பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் ஒரு பிடி அவலை முடிந்துகொண்டு, தங்களுக்குக் காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

गतोऽयमाश्चर्यमयीं भवत्पुरीं गृहेषु शैब्याभवनं समेयिवान् ।
प्रविश्य वैकुण्ठमिवाप निर्वृतिं तवातिसम्भावनया तु किं पुन: ॥४॥

க₃தோ(அ)யமாஶ்சர்யமயீம் ப₄வத்புரீம் க்₃ருஹேஷு ஶைப்₃யாப₄வநம் ஸமேயிவாந் |
ப்ரவிஶ்ய வைகுண்ட₂மிவாப நிர்வ்ருதிம் தவாதிஸம்பா₄வநயா து கிம் புந: || 4||

4. ஆச்சர்யம் மிக்க தங்களது நகரத்தை அடைந்தார். தங்கள் மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். தாங்கள் அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார்.

प्रपूजितं तं प्रियया च वीजितं करे गृहीत्वाऽकथय: पुराकृतम् ।
यदिन्धनार्थं गुरुदारचोदितैरपर्तुवर्ष तदमर्षि कानने ॥५॥

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம் கரே க்₃ருஹீத்வா(அ)கத₂ய: புராக்ருதம் |
யதி₃ந்த₄நார்த₂ம் கு₃ருதா₃ரசோதி₃தைரபர்துவர்ஷ தத₃மர்ஷி காநநே || 5||

5. அன்புடன் வரவேற்கப்பட்ட அவருக்கு உமது மனைவி விசிறி வீசினாள். தாங்கள் அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தீர்கள். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினீர்கள்.

त्रपाजुषोऽस्मात् पृथुकं बलादथ प्रगृह्य मुष्टौ सकृदाशिते त्वया ।
कृतं कृतं नन्वियतेति संभ्रमाद्रमा किलोपेत्य करं रुरोध ते ॥६॥

த்ரபாஜுஷோ(அ)ஸ்மாத் ப்ருது₂கம் ப₃லாத₃த₂ ப்ரக்₃ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா₃ஶிதே த்வயா |
க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்₄ரமாத்₃ரமா கிலோபேத்ய கரம் ருரோத₄ தே || 6||

6. கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டீர். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி உம்முடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்).

भक्तेषु भक्तेन स मानितस्त्वया पुरीं वसन्नेकनिशां महासुखम् ।
बतापरेद्युर्द्रविणं विना ययौ विचित्ररूपस्तव खल्वनुग्रह: ॥७॥

ப₄க்தேஷு ப₄க்தேந ஸ மாநிதஸ்த்வயா புரீம் வஸந்நேகநிஶாம் மஹாஸுக₂ம் |
ப₃தாபரேத்₃யுர்த்₃ரவிணம் விநா யயௌ விசித்ரரூபஸ்தவ க₂ல்வநுக்₃ரஹ: || 7||

7. பக்தர்களுக்கு அடியவனான தங்களால் குசேலர் மிகவும் உபசரிக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு உம்முடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். தாங்கள் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் விதமே மிக ஆச்சர்யமாகும்!

यदि ह्ययाचिष्यमदास्यदच्युतो वदामि भार्यां किमिति व्रजन्नसौ ।
त्वदुक्तिलीलास्मितमग्नधी: पुन: क्रमादपश्यन्मणिदीप्रमालयम् ॥८॥

யதி₃ ஹ்யயாசிஷ்யமதா₃ஸ்யத₃ச்யுதோ வதா₃மி பா₄ர்யாம் கிமிதி வ்ரஜந்நஸௌ |
த்வது₃க்திலீலாஸ்மிதமக்₃நதீ₄: புந: க்ரமாத₃பஶ்யந்மணிதீ₃ப்ரமாலயம் || 8||

8. பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் பகவான் கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்கத் தங்களது புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார்.

किं मार्गविभ्रंश इति भ्रंमन् क्षणं गृहं प्रविष्ट: स ददर्श वल्लभाम् ।
सखीपरीतां मणिहेमभूषितां बुबोध च त्वत्करुणां महाद्भुताम् ॥९॥

கிம் மார்க₃விப்₄ரம்ஶ இதி ப்₄ரம்மந் க்ஷணம் க்₃ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த₃த₃ர்ஶ வல்லபா₄ம் |
ஸகீ₂பரீதாம் மணிஹேமபூ₄ஷிதாம் பு₃போ₃த₄ ச த்வத்கருணாம் மஹாத்₃பு₄தாம் || 9||

9. க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். தங்கள் கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

स रत्नशालासु वसन्नपि स्वयं समुन्नमद्भक्तिभरोऽमृतं ययौ ।
त्वमेवमापूरितभक्तवाञ्छितो मरुत्पुराधीश हरस्व मे गदान् ॥१०॥

ஸ ரத்நஶாலாஸு வஸந்நபி ஸ்வயம் ஸமுந்நமத்₃ப₄க்திப₄ரோ(அ)ம்ருதம் யயௌ |
த்வமேவமாபூரிதப₄க்தவாஞ்சி₂தோ மருத்புராதீ₄ஶ ஹரஸ்வ மே க₃தா₃ந் || 10||

10. ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் உம்மிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார். பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றும் குருவாயூரப்பனே! என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.

Sunday, May 25, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86, ஸ்ரீ நாராயணீயம் 86வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -86
ஸால்வ வதம், மகாபாரத யுத்தம்

साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं
विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरुंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् ।
प्रद्युम्नस्तं निरुन्धन्निखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं
तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समर: सप्तविंशत्यहान्त: ॥१॥

ஸால்வோ பை₄ஷ்மீவிவாஹே யது₃ப₃லவிஜிதஶ்சந்த்₃ரசூடா₃த்₃விமாநம்
விந்த₃ந் ஸௌப₄ம் ஸ மாயீ த்வயி வஸதி குரும்ஸ்த்வத்புரீமப்₄யபா₄ங்க்ஷீத் |
ப்ரத்₃யும்நஸ்தம் நிருந்த₄ந்நிகி₂லயது₃ப₄டைர்ந்யக்₃ரஹீது₃க்₃ரவீர்யம்
தஸ்யாமாத்யம் த்₃யுமந்தம் வ்யஜநி ச ஸமர: ஸப்தவிம்ஶத்யஹாந்த: || 1||

1. ஸால்வன் என்ற அரசன், ருக்மிணி கல்யாணம் நடந்த சமயத்தில் யாதவ சேனைகளால் தோற்கடிக்கப்பட்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து ‘ஸௌபம்’ என்ற விமானத்தைப் பெற்றான். தாங்கள் ராஜஸூய யாகத்திற்காகச் சென்றிருந்தபோது துவாரகையை முற்றுகையிட்டான். பிரத்யும்னன் அவனை எதிர்த்துப் போரிட்டான். த்யுமான் என்ற ஸால்வனின் மந்திரியையும் கொன்றான். இருபத்தியேழு நாட்கள் அந்த யுத்தம் நடந்தது.

तावत्त्वं रामशाली त्वरितमुपगत: खण्डितप्रायसैन्यं
सौभेशं तं न्यरुन्धा: स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते ।
मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत्त्वयापि क्षणार्धं
नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत् ॥२॥

தாவத்த்வம் ராமஶாலீ த்வரிதமுபக₃த: க₂ண்டி₃தப்ராயஸைந்யம்
ஸௌபே₄ஶம் தம் ந்யருந்தா₄: ஸ ச கில க₃த₃யா ஶார்ங்க₃மப்₄ரம்ஶயத்தே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீத₃பி தவ புரதஸ்தத்த்வயாபி க்ஷணார்த₄ம்
நாஜ்ஞாயீத்யாஹுரேகே ததி₃த₃மவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீ₄த் || 2||

2. தாங்கள் பலராமனுடன் துவாரகைக்கு விரைந்து வந்து, எல்லா படைகளையும் அழித்து, ஸால்வனையும் எதிர்த்தீர். அவன் தன்னுடைய கதையால் உம்முடைய வில்லைக் கீழே தள்ளினான். தங்கள் தந்தையான வசுதேவரைப் போல ஒரு உருவம் செய்து அதனைக் கொன்றான். தாங்கள் அவனது மாயையை க்ஷணநேரம் அறியவில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் வியாசர் அதை மறுத்திருக்கிறார்.

क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रे-
णोत्कृत्ते दन्तवक्त्र: प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते ।
कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं
सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतार: ॥३॥

க்ஷிப்த்வா ஸௌப₄ம் க₃தா₃சூர்ணிதமுத₃கநிதௌ₄ மங்க்ஷு ஸால்வே(அ)பி சக்ரே-
ணோத்க்ருத்தே த₃ந்தவக்த்ர: ப்ரஸப₄மபி₄பதந்நப்₄யமுஞ்சத்₃க₃தா₃ம் தே |
கௌமோத₃க்யா ஹதோ(அ)ஸாவபி ஸுக்ருதநிதி₄ஶ்சைத்₃யவத்ப்ராபதை₃க்யம்
ஸர்வேஷாமேஷ பூர்வம் த்வயி த்₄ருதமநஸாம் மோக்ஷணார்தோ₂(அ)வதார: || 3||

3. ஸால்வனுடைய ‘ஸௌபம்’ என்ற விமானத்தை, கதையால் உடைத்து, கடலில் எறிந்தீர். ஸால்வனின் தலையை சக்ராயுதத்தால் அறுத்தீர். தந்தவக்த்ரன் கதையைத் தங்கள்மேல் எறிந்து தாக்கினான். உம்முடைய கௌமோதகீ என்ற கதையால் அவனைக் கொன்றீர். சிசுபாலனைப் போல அவனும் தங்களுடன் ஐக்கியமானான். முற்பிறவியில் உம்மிடத்திலேயே மனதைச் செலுத்திய எல்லாருக்கும் மோக்ஷம் அளிப்பதற்காகவே இந்த அவதாரம் எடுத்திருக்கிறீர்.

त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयताया:
क्रन्दन्त्या याज्ञसेन्या: सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् ।
अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदीचिन्तितोऽथ
प्राप्त: शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते ॥४॥

த்வய்யாயாதே(அ)த₂ ஜாதே கில குருஸத₃ஸி த்₃யூதகே ஸம்யதாயா:
க்ரந்த₃ந்த்யா யாஜ்ஞஸேந்யா: ஸகருணமக்ருதா₂ஶ்சேலமாலாமநந்தாம் |
அந்நாந்தப்ராப்தஶர்வாம்ஶஜமுநிசகிதத்₃ரௌபதீ₃சிந்திதோ(அ)த₂
ப்ராப்த: ஶாகாந்நமஶ்நந் முநிக₃ணமக்ருதா₂ஸ்த்ருப்திமந்தம் வநாந்தே || 4||

4. தாங்கள் துவாரகை சென்றதும், கௌரவர்களின் சபையில், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. (பாண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றனர்). பலபேர் முன்னிலையில், துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியைப் பற்றி இழுத்து வந்து, துகிலுரித்து மானபங்கப்படுத்தினான். கதியற்ற திரௌபதி தங்களை வேண்டிக் கதறி அழுதாள். தாங்கள் கணக்கிலடங்காத வஸ்திரங்கள் அளித்து அவளுக்கு உதவினீர்கள். பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது, ஒரு நாள் அனைவரும் உண்டபின், துர்வாசர் தனது கூட்டத்தினருடன் உணவுண்ண வந்தார். உணவில்லாததால் திரௌபதி மிகவும் பயந்து தங்களைத் துதித்து வேண்டினாள். தாங்கள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த கீரையைச் சாப்பிட்டு, முனிவருக்கும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் உண்ட திருப்தி கிடைக்கச் செய்தீர்கள்.

युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृत: फल्गुनेन त्वमेक:
कौरव्ये दत्तसैन्य: करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् ।
भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण
व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभू: ॥५॥

யுத்₃தோ₄த்₃யோகே₃(அ)த₂ மந்த்ரே மிலதி ஸதி வ்ருத: ப₂ல்கு₃நேந த்வமேக:
கௌரவ்யே த₃த்தஸைந்ய: கரிபுரமக₃மோ தூ₃த்யக்ருத் பாண்ட₃வார்த₂ம் |
பீ₄ஷ்மத்₃ரோணாதி₃மாந்யே தவ க₂லு வசநே தி₄க்க்ருதே கௌரவேண
வ்யாவ்ருண்வந் விஶ்வரூபம் முநிஸத₃ஸி புரீம் க்ஷோப₄யித்வாக₃தோ(அ)பூ₄: || 5||

5. யுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அர்ஜுனன் தங்களைத் துணையாகவும், துரியோதனன் தங்களுடைய சைன்யத்தையும் விரும்பினார்கள். அவ்வாறே அளித்துவிட்டு, ஹஸ்தினாபுரத்திற்கு சமாதானத் தூது சென்றீர். பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் தங்கள் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தாலும், துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கேயே தங்களது விஸ்வரூபத்தைக் காட்டி ஹஸ்தினாபுரத்தை நடுங்கச் செய்தீர். பிறகு துவாரகை சென்றீர்.

जिष्णोस्त्वं कृष्ण सूत: खलु समरमुखे बन्धुघाते दयालुं
खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा ।
को वध्य: कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा
धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम् ॥६॥

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத: க₂லு ஸமரமுகே₂ ப₃ந்து₄கா₄தே த₃யாலும்
கி₂ந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித₃மயி ஸகே₂ நித்ய ஏகோ(அ)யமாத்மா |
கோ வத்₄ய: கோ(அ)த்ர ஹந்தா ததி₃ஹ வத₄பி₄யம் ப்ரோஜ்ஜ்₂ய மய்யர்பிதாத்மா
த₄ர்ம்யம் யுத்₃த₄ம் சரேதி ப்ரக்ருதிமநயதா₂ த₃ர்ஶயந் விஶ்வரூபம் || 6||

6. அர்ஜுனனின் தேரோட்டியாக வந்த தாங்கள், யுத்தத்தின் துவக்கத்தில் தன்னுடைய உறவினர்களை வதம் செய்ய விரும்பாமல் மனம் வருந்திய அர்ஜுனனைக் கண்டீர். அவனுக்கு, “ நண்பனே! ஆத்மா என்பது என்றும் அழிவில்லாதது. கொல்பவன், கொல்லப்படுகிறவன் என்பவர் இங்கே யார்? எனவே, கொல்வதைப் பற்றிய பயத்தை விட்டு, என்னிடத்தில் சரணடைந்து, நேர்மையான யுத்தத்தைச் செய்” என்று அவனுக்கு உபதேசம் செய்து, அவனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டி, அவனைத் தன் நிலைமையை அடையச் செய்தீர்.

भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते
नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे ।
निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन् क्रोधशाली-
वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागा: ॥७॥

ப₄க்தோத்தம்ஸே(அ)த₂ பீ₄ஷ்மே தவ த₄ரணிப₄ரக்ஷேபக்ருத்யைகஸக்தே
நித்யம் நித்யம் விபி₄ந்த₃த்யயுதஸமதி₄கம் ப்ராப்தஸாதே₃ ச பார்தே₂ |
நிஶ்ஶஸ்த்ரத்வப்ரதிஜ்ஞாம் விஜஹத₃ரிவரம் தா₄ரயந் க்ரோத₄ஶாலீ-
வாதா₄வந் ப்ராஞ்ஜலிம் தம் நதஶிரஸமதோ₂ வீக்ஷ்ய மோதா₃த₃பாகா₃: || 7||

7. பூபாரத்தைப் போக்கும் தங்கள் நோக்கத்தில், தங்கள் பக்தரான பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் அரசர்களை வதம் செய்தார். அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து மிகவும் சோர்வடைந்தான். அதைக் கண்ட தாங்கள், போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்ற தங்கள் பிரதிக்ஞையை மீறி சுதர்சன சக்கரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோபத்துடன் பீஷ்மரை நோக்கி ஓடினீர். தங்களைக் கண்டதும் பீஷ்மர் தலைவணங்கியதைக் கண்டு சந்தோஷித்து, அவரைத் தாக்காமல் திரும்பினீர்.

युद्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं
वक्षस्याधत्त चक्रस्थगितरविमहा: प्रार्दयत्सिन्धुराजम् ।
नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं
तत्रे त्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत् ॥८॥

யுத்₃தே₄ த்₃ரோணஸ்ய ஹஸ்திஸ்தி₂ரரணப₄க₃த₃த்தேரிதம் வைஷ்ணவாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத₄த்த சக்ரஸ்த₂கி₃தரவிமஹா: ப்ரார்த₃யத்ஸிந்து₄ராஜம் |
நாகா₃ஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதிமவநமயந் கேவலம் க்ருத்தமௌலிம்
தத்ரே த்ராபி பார்த₂ம் கிமிவ நஹி ப₄வாந் பாண்ட₃வாநாமகார்ஷீத் || 8||

8. துரோணருடன் போர் புரிந்தபோது, நரகாசுரனின் பிள்ளையான பகதத்தன், நான்கு தந்தமுள்ள யானைமீது ஏறிவந்து வைஷ்ணவாஸ்திரத்தை ஏவினான். அதைத் தங்கள் மார்பில் தாங்கிக் கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினீர். தங்களுடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து, அர்ஜுனனைக் கொண்டு ஜயத்ரதனைக் கொன்றீர். கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவினான். தாங்கள் கால் கட்டைவிரலால் பூமியை அழுத்தி, அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அறுக்கும்படி செய்தீர். பாண்டவர்களின் நலனுக்காக நீர் எதைத்தான் செய்யவில்லை?

युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ-
न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा ।
यज्ञघ्नं वल्कलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते
सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यात: पुरीं ते ॥९॥

யுத்₃தா₄தௌ₃ தீர்த₂கா₃மீ ஸ க₂லு ஹலத₄ரோ நைமிஶக்ஷேத்ரம்ருச்ச₂-
ந்நப்ரத்யுத்தா₂யிஸூதக்ஷயக்ருத₃த₂ ஸுதம் தத்பதே₃ கல்பயித்வா |
யஜ்ஞக்₄நம் வல்கலம் பர்வணி பரித₃லயந் ஸ்நாததீர்தோ₂ ரணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ₄மது₃ர்யோத₄நரணமஶமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே || 9||

9. போர் ஆரம்பித்தபோது தீர்த்தயாத்திரை சென்ற பலராமன், நைமிசாரண்யம் சென்றார். தன்னை மதிக்காத ஸூதபௌராணிகரைக் கொன்றார். அந்த ஸ்தானத்தில் அவருடைய மகனை நியமித்தார். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் யாகங்களுக்கு இடையூறு செய்த வல்வலன் என்ற அசுரனைக் கொன்றார். பின்னர், தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு குருக்ஷேத்ரம் வந்தார். பீமனும் துரியோதனனும் நீண்ட சண்டை செய்வதைப் பார்த்து துவாரகைக்குச் சென்றார்.

संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या
तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे ।
उच्छित्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे
रक्षन्नङ्गुष्ठमात्र: किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम् ॥१०॥

ஸம்ஸுப்தத்₃ரௌபதே₃யக்ஷபணஹததி₄யம் த்₃ரௌணிமேத்ய த்வது₃க்த்யா
தந்முக்தம் ப்₃ராஹ்மமஸ்த்ரம் ஸமஹ்ருத விஜயோ மௌலிரத்நம் ச ஜஹ்ரே |
உச்சி₂த்யை பாண்ட₃வாநாம் புநரபி ச விஶத்யுத்தராக₃ர்ப₄மஸ்த்ரே
ரக்ஷந்நங்கு₃ஷ்ட₂மாத்ர: கில ஜட₂ரமகா₃ஶ்சக்ரபாணிர்விபோ₄ த்வம் || 10||

10. துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் பிள்ளைகளைக் கொன்று விட்டான். தங்கள் உத்தரவின்பேரில் அர்ஜுனன் அவன் மீது விடுத்த பிரம்மாஸ்திரம், அவனுடைய சிரோமணியைத் துன்புறுத்தித் திரும்பி வந்தது. அஸ்வத்தாமன், பாண்டவ வம்சத்தை வேரோடு அழிக்க, மீண்டும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவை எரிக்கத் தொடங்கியது. தாங்கள் கட்டைவிரல் அளவுள்ள உருவமெடுத்து சுதர்சன சக்கரத்துடன் உத்தரையின் கருப்பைக்குள் பிரவேசித்து அந்த சிசுவைக் காத்தீர்.

धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युस्स भीष्म-
स्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् ।
संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं
स्म्प्राप्तो द्वरकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥११॥

த₄ர்மௌக₄ம் த₄ர்மஸூநோரபி₄த₃த₄த₃கி₂லம் ச₂ந்த₃ம்ருத்யுஸ்ஸ பீ₄ஷ்ம-
ஸ்த்வாம் பஶ்யந் ப₄க்திபூ₄ம்நைவ ஹி ஸபதி₃ யயௌ நிஷ்கலப்₃ரஹ்மபூ₄யம் |
ஸம்யாஜ்யாதா₂ஶ்வமேதை₄ஸ்த்ரிபி₄ரதிமஹிதைர்த₄ர்மஜம் பூர்ணகாமம்
ஸ்ம்ப்ராப்தோ த்₃வரகாம் த்வம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 11||

11. விரும்பிய நேரத்தில் மரணத்தை அடையும் சக்தியைப் பெற்ற பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு அனைத்து தர்மங்களையும் உபதேசித்தார். தீவிரமான பக்தியுடன் உம்மையே பார்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார். பின்னர், யுதிஷ்டிரர் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்யத் துணை புரிந்து, அவரது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, துவாரகை திரும்பினீர். குருவாயூரப்பனே! எல்லா வியாதிகளில் இருந்தும் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.

Saturday, May 24, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85, ஸ்ரீ நாராயணீயம் 85வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -85
ஜராஸந்த வதம், சிசுபால மோக்ஷம் 

ततो मगधभूभृता चिरनिरोधसंक्लेशितं
शताष्टकयुतायुतद्वितयमीश भूमीभृताम् ।
अनाथशरणाय ते कमपि पूरुषं प्राहिणो-
दयाचत स मागधक्षपणमेव किं भूयसा ॥१॥

ததோ மக₃த₄பூ₄ப்₄ருதா சிரநிரோத₄ஸம்க்லேஶிதம்
ஶதாஷ்டகயுதாயுதத்₃விதயமீஶ பூ₄மீப்₄ருதாம் |
அநாத₂ஶரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ-
த₃யாசத ஸ மாக₃த₄க்ஷபணமேவ கிம் பூ₄யஸா || 1||

1. ஜராஸந்தன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களை சிறையில் அடைத்தான். வெகுகாலமாய் அடைபட்டிருந்த அவர்கள், உம்மிடத்தில் யாரோ ஒருவனைத் தூதுவனாக அனுப்பினார்கள். அவனும் மகத தேசத்து அரசனான ஜராஸந்தனை அழிக்கும்படி உம்மிடம் வேண்டினான்.

यियासुरभिमागधं तदनु नारदोदीरिता-
द्युधिष्ठिरमखोद्यमादुभयकार्यपर्याकुल: ।
विरुद्धजयिनोऽध्वरादुभयसिद्धिरित्युद्धवे
शशंसुषि निजै: समं पुरमियेथ यौधिष्ठिरीम् ॥२॥

யியாஸுரபி₄மாக₃த₄ம் தத₃நு நாரதோ₃தீ₃ரிதா-
த்₃யுதி₄ஷ்டி₂ரமகோ₂த்₃யமாது₃ப₄யகார்யபர்யாகுல: |
விருத்₃த₄ஜயிநோ(அ)த்₄வராது₃ப₄யஸித்₃தி₄ரித்யுத்₃த₄வே
ஶஶம்ஸுஷி நிஜை: ஸமம் புரமியேத₂ யௌதி₄ஷ்டி₂ரீம் || 2||

2. தாங்கள் மகத நாட்டிற்கு யுத்தம் செய்ய புறப்பட்டபோது, யுதிஷ்டிரர் ராஜஸூய யாகம் நடத்த இருப்பதாக நாரதர் தெரிவித்தார். இவ்விரண்டில் எதை முதலில் செய்வது என்று கலங்கினீர். அப்போது உத்தவர், ராஜஸூய யாகம் எதிரிகளை ஜயித்த பின்னர் நடத்தப்பட வேண்டியதாகும். ஆதலால் இவ்விரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் என்று கூறினார். உடனே யாதவப் படைகளோடு பாண்டவர்களின் தலைநகரான இந்திரப்ரஸ்தம் சென்றீர்.

अशेषदयितायुते त्वयि समागते धर्मजो
विजित्य सहजैर्महीं भवदपाङ्गसंवर्धितै: ।
श्रियं निरुपमां वहन्नहह भक्तदासायितं
भवन्तमयि मागधे प्रहितवान् सभीमार्जुनम् ॥३॥

அஶேஷத₃யிதாயுதே த்வயி ஸமாக₃தே த₄ர்மஜோ
விஜித்ய ஸஹஜைர்மஹீம் ப₄வத₃பாங்க₃ஸம்வர்தி₄தை: |
ஶ்ரியம் நிருபமாம் வஹந்நஹஹ ப₄க்ததா₃ஸாயிதம்
ப₄வந்தமயி மாக₃தே₄ ப்ரஹிதவாந் ஸபீ₄மார்ஜுநம் || 3||

3. தங்களது எல்லா மனைவியருடனும் இந்திரப்ரஸ்தம் சென்றீர். தங்களது அருட்பார்வையால் பலம் பெற்ற சகோதரர்களுடன், யுதிஷ்டிரர் அனைத்து நாடுகளையும் ஜயித்து, அளவற்ற பொருட்களைப் பெற்றார். பிறகு, பக்தர்களுக்கு அடியவனான தங்களை, பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் ஜராஸந்தனிடம் அனுப்பினார்.

गिरिव्रजपुरं गतास्तदनु देव यूयं त्रयो
ययाच समरोत्सवं द्विजमिषेण तं मागधम् ।
अपूर्णसुकृतं त्वमुं पवनजेन संग्रामयन्
निरीक्ष्य सह जिष्णुना त्वमपि राजयुद्ध्वा स्थित: ॥४॥

கி₃ரிவ்ரஜபுரம் க₃தாஸ்தத₃நு தே₃வ யூயம் த்ரயோ
யயாச ஸமரோத்ஸவம் த்₃விஜமிஷேண தம் மாக₃த₄ம் |
அபூர்ணஸுக்ருதம் த்வமும் பவநஜேந ஸம்க்₃ராமயந்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வமபி ராஜயுத்₃த்₄வா ஸ்தி₂த: || 4||

4. தாங்கள், பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் கிரிவ்ரஜம் என்ற ஜராஸந்தனின் நகரை அடைந்தீர்கள். பிராம்மண வேஷம் பூண்டு ஜராஸந்தனிடம் யுத்தம் செய்ய ஒரு போட்டியை யாசித்தீர்கள். புண்ணியம் செய்யாத ஜராஸந்தனை பீமனோடு போரிடும்படி செய்தீர். அரசகுலத்தைச் சேர்ந்த அவர்கள் மோதுவதை அர்ஜுனனுடன் பார்த்துக் கொண்டிருந்தீர்.

अशान्तसमरोद्धतं बिटपपाटनासंज्ञया
निपात्य जररस्सुतं पवनजेन निष्पाटितम् ।
विमुच्य नृपतीन् मुदा समनुगृह्य भक्तिं परां
दिदेशिथ गतस्पृहानपि च धर्मगुप्त्यै भुव: ॥५॥

அஶாந்தஸமரோத்₃த₄தம் பி₃டபபாடநாஸம்ஜ்ஞயா
நிபாத்ய ஜரரஸ்ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீந் முதா₃ ஸமநுக்₃ருஹ்ய ப₄க்திம் பராம்
தி₃தே₃ஶித₂ க₃தஸ்ப்ருஹாநபி ச த₄ர்மகு₃ப்த்யை பு₄வ: || 5||

5. முடிவடையாத, நீண்ட அந்த யுத்தத்தில், ஜராஸந்தன் மூர்க்கமாகப் போரிட்டான். அப்போது, ஒரு குச்சியை இரண்டாக முறித்துக் கீழே போட்டு குறிப்பால் பீமனுக்கு உணர்த்தினீர். பீமனும் ஜராஸந்தனைக் இரண்டாகக் கிழித்துக் கொன்றான். பின்னர், சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தீர். அவர்களுக்கு பக்தியை அளித்து, பற்றற்றிருந்த அவர்களை தர்மத்துடன் அவரவர்கள் நாட்டை ஆளும்படிக் கட்டளையிட்டீர்.

प्रचक्रुषि युधिष्ठिरे तदनु राजसूयाध्वरं
प्रसन्नभृतकीभवत्सकलराजकव्याकुलम् ।
त्वमप्ययि जगत्पते द्विजपदावनेजादिकं
चकर्थ किमु कथ्यते नृपवरस्य भाग्योन्नति: ॥६॥

ப்ரசக்ருஷி யுதி₄ஷ்டி₂ரே தத₃நு ராஜஸூயாத்₄வரம்
ப்ரஸந்நப்₄ருதகீப₄வத்ஸகலராஜகவ்யாகுலம் |
த்வமப்யயி ஜக₃த்பதே த்₃விஜபதா₃வநேஜாதி₃கம்
சகர்த₂ கிமு கத்₂யதே ந்ருபவரஸ்ய பா₄க்₃யோந்நதி: || 6||

6. தர்மபுத்திரர் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினார். எல்லா அரசர்களும் மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். தாங்களும், யாகத்திற்கு வந்திருந்த அந்தணர்களின் பாதத்தை அலம்பி, பட்டுத் துணியால் துடைத்துப் பணிவிடைகள் செய்தீர். தர்மபுத்திரரின் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன்?!

तत: सवनकर्मणि प्रवरमग्र्यपूजाविधिं
विचार्य सहदेववागनुगत: स धर्मात्मज: ।
व्यधत्त भवते मुदा सदसि विश्वभूतात्मने
तदा ससुरमानुषं भुवनमेव तृप्तिं दधौ ॥७॥

தத: ஸவநகர்மணி ப்ரவரமக்₃ர்யபூஜாவிதி₄ம்
விசார்ய ஸஹதே₃வவாக₃நுக₃த: ஸ த₄ர்மாத்மஜ: |
வ்யத₄த்த ப₄வதே முதா₃ ஸத₃ஸி விஶ்வபூ₄தாத்மநே
ததா₃ ஸஸுரமாநுஷம் பு₄வநமேவ த்ருப்திம் த₃தௌ₄ || 7||

7. வந்தவர்களில் சிறந்த ஒருவரைப் பூஜிப்பது அந்த யாகத்தின் முக்கியமான அம்சமாகும். அப்போது தர்மர் யாரைப் பூஜிப்பது என்று யோசித்தார். சகாதேவனுடைய ஆலோசனைப்படி உம்மைத் தேர்ந்தெடுத்தனர். தர்மபுத்திரரும், உலக மக்கள் அனைவரிடத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் தங்களைப் பூஜித்து மகிழ்ச்சியடைந்தார். அப்போது உலகத்திலுள்ளவர்களும், தேவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

तत: सपदि चेदिपो मुनिनृपेषु तिष्ठत्स्वहो
सभाजयति को जड: पशुपदुर्दुरूटं वटुम् ।
इति त्वयि स दुर्वचोविततिमुद्वमन्नासना-
दुदापतदुदायुध: समपतन्नमुं पाण्डवा: ॥८॥

தத: ஸபதி₃ சேதி₃போ முநிந்ருபேஷு திஷ்ட₂த்ஸ்வஹோ
ஸபா₄ஜயதி கோ ஜட₃: பஶுபது₃ர்து₃ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து₃ர்வசோவிததிமுத்₃வமந்நாஸநா-
து₃தா₃பதது₃தா₃யுத₄: ஸமபதந்நமும் பாண்ட₃வா: || 8||

8. தங்களைப் பூஜிப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, சிசுபாலன் ஆசனத்திலிருந்து எழுந்து, “ எந்த முட்டாள், மட்டமான இந்தச் சிறிய இடையனான கிருஷ்ணனை மதித்துத் தேர்ந்தெடுப்பான்? என்று கூறினான். ஆயுதம் ஏந்திக்கொண்டு, பல கெட்ட வார்த்தைகளைக் கூறினான். அதைக் கேட்ட பாண்டவர்கள் சிசுபாலனை எதிர்த்தனர்.

निवार्य निजपक्षगानभिमुखस्यविद्वेषिण-
स्त्वमेव जहृषे शिरो दनुजदारिणा स्वारिणा ।
जनुस्त्रितयलब्धया सततचिन्तया शुद्धधी-
स्त्वया स परमेकतामधृत योगिनां दुर्लभाम् ॥९॥

நிவார்ய நிஜபக்ஷகா₃நபி₄முக₂ஸ்யவித்₃வேஷிண-
ஸ்த்வமேவ ஜஹ்ருஷே ஶிரோ த₃நுஜதா₃ரிணா ஸ்வாரிணா |
ஜநுஸ்த்ரிதயலப்₃த₄யா ஸததசிந்தயா ஶுத்₃த₄தீ₄-
ஸ்த்வயா ஸ பரமேகதாமத்₄ருத யோகி₃நாம் து₃ர்லபா₄ம் || 9||

9. பாண்டவர்களைத் தடுத்து, எதிர்த்த சிசுபாலனின் தலையை, சக்ராயுதத்தால் தாங்களே அறுத்தீர். மூன்று ஜன்மாக்களிலும் தங்களையே நினைத்ததால் தூய்மை பெற்ற அந்த சிசுபாலன், தங்களோடு ஐக்கியமானான். யோகிகளுக்குக் கூட அத்தகைய பேறு கிடைக்காது!

तत: सुमहिते त्वया क्रतुवरे निरूढे जनो
ययौ जयति धर्मजो जयति कृष्ण इत्यालपन्।
खल: स तु सुयोधनो धुतमनास्सपत्नश्रिया
मयार्पितसभामुखे स्थलजलभ्रमादभ्रमीत् ॥१०॥

தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே₄ ஜநோ
யயௌ ஜயதி த₄ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபந்|
க₂ல: ஸ து ஸுயோத₄நோ து₄தமநாஸ்ஸபத்நஶ்ரியா
மயார்பிதஸபா₄முகே₂ ஸ்த₂லஜலப்₄ரமாத₃ப்₄ரமீத் || 10||

10. ராஜஸூய யாகமும் நிறைவடைந்தது. எல்லா மக்களும் தர்மபுத்திரரை வாழ்த்திக் கொண்டே சென்றார்கள். அதைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், மயனால் நிர்மாணிக்கப்பட்ட சபைக்கு வந்தான். முன் மண்டபத்தில், தரையை ஜலம் போலவும், ஜலத்தைத் தரை போலவும் நிர்மாணித்திருந்ததால், துரியோதனன் வேறுபாடு தெரியாமல் குழம்பித் திகைத்தான்.

तदा हसितमुत्थितं द्रुपदनन्दनाभीमयो-
रपाङ्गकलया विभो किमपि तावदुज्जृम्भयन् ।
धराभरनिराकृतौ सपदि नाम बीजं वपन्
जनार्दन मरुत्पुरीनिलय पाहि मामामयात् ॥११॥

ததா₃ ஹஸிதமுத்தி₂தம் த்₃ருபத₃நந்த₃நாபீ₄மயோ-
ரபாங்க₃கலயா விபோ₄ கிமபி தாவது₃ஜ்ஜ்ரும்ப₄யந் |
த₄ராப₄ரநிராக்ருதௌ ஸபதி₃ நாம பீ₃ஜம் வபந்
ஜநார்த₃ந மருத்புரீநிலய பாஹி மாமாமயாத் || 11||

11. வேறுபாடு தெரியாமல் துரியோதனன் சறுக்கி விழுந்தான். அவனைப் பார்த்து திரௌபதியும், பீமனும் சிரித்தார்கள். தங்கள் கடைக்கண் பார்வையால் அவர்களை அதிகமாய் உரத்துச் சிரிக்கச் செய்தீர்கள். பூமியின் பாரத்தைப் போக்குவதற்குத் தாங்கள் விதைத்த விதையாக அச்செயல் அமைந்தது. தீயவர்களுக்குத் துன்பத்தைத் தருபவனே! குருவாயூரப்பனே! நோயிலிருந்து அடியேனைக் காக்க வேண்டும்.