Monday, July 31, 2017

திருநீர்மலை / ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 37

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
‘கண்ணுக்கினியன கண்டோம்’ வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது திருநீர்மலை! சென்னையிலேயே இருந்தும் திருநீர்மலையை தரிசித்தது இல்லை என்ற எனது நீண்டநாள் குறையைப் போக்கிக்கொள்ள திருநீர்மலை பயணித்தோம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு, பெருமாளை நான்கு திருக்கோலங்களில் (நின்ற, இருந்த, கிடந்த, நடந்த) ஸேவிக்கலாம். மலையின் கீழே ஒரு சன்னதியும் மலை மேலே மூன்று சன்னதிகளும் உள்ளது.

ஐந்துநிலைக் கோபுரம். தோயகிரி விமானம்.
மலை அடிவாரத்தில் நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), நின்ற திருக்கோலம். தாயார் அணிமாமலர்மங்கை தனிக்கோயில் நாச்சியார்

மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாள், ஆஞ்சனேயர், ஆண்டாள் சன்னதிகள், பன்னிரு ஆழ்வார்களும், வெளிப் பிரகாரத்தில் அணிமாமலர் மங்கைத் தாயார் சன்னதியும், ஸ்ரீராமர் சன்னதியும் உள்ளது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
சுமார் 200-250 படிகள் ஏறினால் மலைக்கோயிலை அடையலாம். மலை மேலே பெருமாள் மூன்று திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார்.
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
ஸ்ரீ சாந்த நரசிம்மர்- வீற்றிருந்த திருக்கோலம். பால நரசிம்மரையும் காணலாம். பிரஹ்லாதனை வா என்று அழைப்பதுபோல் திருக்கரங்கள்.

ஸ்ரீ ரங்கநாதர் - சயன திருக்கோலம். மாணிக்க சயனம். ஸ்ரீதேவி பூதேவி திருவடியின்கீழ் அமர்ந்திருக்கின்றனர். உற்சவர் அழகியமணவாளன் ஸ்ரீதேவி பூதேவியுடன் மிகுந்த அழகாய் இருக்கிறார். தாயார் ரங்கநாயகி தனிக்கோயில் நாச்சியார். பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களின் தவத்திற்கு இரங்கிய பெருமாள், மாணிக்க ஸயனத்தில் அரங்கநாதர் திருக்கோலத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருளினார். 

உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம்.
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
க்ஷீர புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி என்ற நான்கு புஷ்கரிணிகள் அடங்கிய மணிகர்ணிகா தடாகம். 
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
வால்மீகி இந்தத் தலத்தில் வந்து மலை மேல் உள்ள நரசிம்மர், ரங்கநாதர், த்ரிவிக்ரமப் பெருமாளை சேவித்து, பின் ஸ்ரீராமனைத் தியானம் செய்ய, ஸ்ரீ ராமர், சீதாதேவி, லக்ஷ்மணர், பரத, சத்ருக்னர் ஹனுமாரோடு காட்சி தந்து, வால்மீகியின் ப்ரார்த்தனைக்கிணங்க நீர்வண்ணராக சேவை சாதித்ததாக ஐதீகம். ராமருக்கும் தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், வால்மீகியும் இருக்கிறார். இங்குள்ள ராமர், கல்யாணராமனாகக் காட்சி தருவதால், திருமணத்தடை நீக்கும் தலமாகவும், திருமணம் கைகூடும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகின்றது.

திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியபோது, இந்த மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்ததாம். ஆறு மாதம் காத்திருந்து மங்களாசாசனம் செய்தாராம். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் பெருமாளுக்கு ‘நீர்வண்ணப்பெருமாள்’ என்றும், இந்த மலைக்கு ‘நீர்மலை’ என்று பெயர் உண்டாயிற்றாம். ஆழ்வார் தங்கியிருந்த இடம் திருமங்கை ஆழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், பாடிய பாசுரத்தில், தாயாரை "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிடுகிறார்.

அன்றாயர் குலக்கொடியோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளவி* அவுணர்க்கு
என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது* இரும்பொழில் சூழ்
நன்றாய புனல்நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் 

மாமலையாவது நீர்மலையே. - திருமங்கையாழ்வார்.

அதாவது, இத்தலத்தை தரிசித்தால், நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார். 


பூதத்தாழ்வாரோ ஸ்ரீ ரங்கத்தை வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்கிறார். 


பயின்ற தரங்கம் திருக்கோட்டி*பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே* பன்னாள் - பயின்ற
தணி திகழுஞ்சோலை அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால். - பூதத்தாழ்வார்


மங்களாசாசனம்:  திருமங்கையாழ்வார் 19  பாசுரங்கள்(1078-1087,1115,1521,1554,1660,1765,1848,2069,2673.73,2674.130)
பூதத்தாழ்வார் 1 பாசுரம் (2227).

நாங்கள் வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்றதால், சொர்க்கவாசல் மிதித்து, அழகிய மணவாளனின் கருடசேவையையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். மாடவீதியில் தேசிகன் சன்னதியும் ஹனுமார் சன்னதியும் உள்ளது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
அனைவரும் காண வேண்டிய திருக்கோயில்! சிறப்புமிக்க இந்த திருக்கோயிலில் நான்கு நிலைகளில் பெருமாளை சேவித்து, திருவீதி உலாவும் காணக்கிடைத்த திருப்தியுடன் சென்னை திரும்பினோம். 

உற்சவங்கள்: பௌர்ணமி கிரிவலம், ரதசப்தமி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, பவித்ரோத்சவம், வசந்தோற்சவம்.

வழி: சென்னையிலிருந்து சுமார் 22 
கி.மீ., தூரத்தில்,  சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து பேருந்தில் இக்கோயிலை அடையலாம். பேருந்து கோவில் வாசல் வரை செல்கிறது. காரில் செல்வதானால், G.S.T. ரோடில் பல்லாவரம் கடந்ததும்  PONDS கம்பெனி வரும், அதற்கு எதிரே போகும் ரோடில் திரும்பி மேற்கே பயணித்தால் திருநீர்மலை செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி:
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்,
திருநீர்மலை - 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.

Sunday, July 30, 2017

சிங்கப்பெருமாள் கோவில் / ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 36

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்,
சென்னையின் புறநகரில் உள்ள நரசிம்மர் கோவில்களில் சிங்கப்பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தம். அபிமான ஸ்தலம். பல்லவர் காலத்துக் குடவரைக் கோயில்.

பாடலாத்ரி என்கிற இந்தத் தலத்தில் சிவந்த குன்றின் குகைக்குள் பெருமாள் இருப்பதால் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’ என்றும், ‘அத்ரி’ என்பதற்கு ‘மலை’ என்றும் பொருள்.

மூலவர் பாடலாத்ரி நரசிம்மர். பெரிய மூர்த்தி. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரங்களும், கீழ் வலது திருக்கரம் அபயமுத்திரையுடனும், இடது திருக்கரத்தை மடியில் வைத்தபடியும் சேவை சாதிக்கிறார். வலது காலை மடித்து வைத்துக் கொண்டு, இடது திருவடியைத் தாமரை மலர்மேல் வைத்துக் கொண்டு ப்ரணவ கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. பொதுவாக நரசிம்மர் இடதுகாலை மடித்து வைத்தும் வலது காலை ஊன்றியும் இருப்பார். ‘த்ரிநேத்ரதாரியாய்’ (மூன்று கண்களுடன்) திருமார்பில் மஹாலஷ்மியோடு, ஸாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாம மாலைகள் தரித்து அமர்ந்திருக்கிறார். இப்பெருமாளுக்கு மூன்று நேத்ரங்கள் (கண்கள்) அமையப் பெற்றுள்ளது சிறப்பு. பட்டாச்சாரியார், பெருமாளின் நெற்றியிலுள்ள திருநாமத்தை சற்றே தூக்கி மூன்றாவது கண்ணை சேவிக்கச் சொல்கிறார். விசேஷமான த்ரிநேத்ர தரிசனம் கண்டோம். 

உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரஹ்லாதவரதர்.

தாயாரின் திருப்பெயர் அஹோபிலவல்லித் தாயார். தனிக்கோயில் நாச்சியார். 

தீர்த்தம் சுத்த புஷ்கரணி, தல விருக்ஷம் பாரிஜாதம்.

தலவரலாறு: ஜாபாலி முனிவரின் தவத்தை மெச்சி, அவர் வேண்டுகோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்ர நரசிம்மராக அவருக்கு இந்த குகையினுள் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்,
கோவில் முகப்பில் சுதையில் தசாவதாரக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்,
மலையின் குகைக்குள் பெருமாள் இருப்பதால், பெருமாளை வலம் வரவேண்டுமென்றால் குன்றையும் சேர்த்தே ப்ரதக்ஷணம் செய்ய வேண்டும். பெருமாள் பர்வதமே திருமேனியாகக் கொண்டுள்ளார். அதனால் பெருமாளை வலம் வந்தால் மலையையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் இங்கு கிரிப்ரதக்ஷணம் விசேஷம். குறிப்பிட்ட தினம் என்று இல்லாமல், எல்லா நாட்களிலும் மக்கள் கிரிவலம் வருகிறார்கள். பானகம் சமர்ப்பித்து நரசிம்மரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு கிடைக்கும் தோசைப் பிரசாதம் மிகவும் பிரசித்தம். 

பிற சன்னதிகள்: தாயார், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள்

பிரதக்ஷிணம் வரும்போது அழிஞ்சல் மரம் என்னும் மரத்தைக் காணலாம். திருமணமாகாதவர்களும், குழந்தைப்பேறு இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் வஸ்திரத்திலிருந்து ஒரு நூலிழையை எடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தலத்தில் உள்ள அழிஞ்சல் மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி வழிபட்டு,  
ஸ்ரீ நரசிம்மருக்கு   அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும். 
TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்,
உற்சவங்கள்: பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜை, நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி மாதம் பிரம்மோற்சவம். விழாவின் 7ம் நாள் தேர்த் திருவிழா, ராமானுஜர் ஜெயந்தி, திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, தெப்போற்சவம், பவித்ரோத்சவம், சித்ராபவுர்ணமி.

வழி:  சென்னை- செங்கல்பட்டு சாலையில் 
சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு. சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 

முகவரி:

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்,
சிங்கப்பெருமாள் கோவில் - 603 202
செங்கல்பட்டு, 
காஞ்சிபுரம் மாவட்டம்

Saturday, July 29, 2017

செட்டிபுண்ணியம் - ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 35

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டிபுண்ணியம். செட்டிபுண்ணியம் தேவநாதப் பெருமாள் கோயிலில் உள்ள யோக ஹயக்ரீவர் மிகவும் பிரசித்தம். தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே மக்கள் கூறுகின்றனர்.

பழமையான இந்தக் கோயிலில் மூலவர் வரதராஜப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி. திருவஹீந்திரபுரத்தில் உள்ள அதே பெருமாள். உற்சவர், தேவநாதப் பெருமாள் மற்றும் யோக ஹயக்ரீவர். ஆனந்தநிலைய விமானம்.

இங்குள்ள யோக ஹயக்ரீவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு சக்ரதாரியாக யோகநிலையில் சேவை சாதிக்கிறார். வரப்ரசாதி. யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுகிறார்கள். இந்தத் தலத்திற்கு வந்து அக்ஷராப்யாஸம் செய்ய பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். படிக்கும் மாணவர்கள், பரீக்ஷைக்கு முன் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, ஹயக்ரீவரின் கடாக்ஷத்தைப் பெற்றால் படிப்பில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் உண்டாகும் என்பது நம்பிக்கை. பேச முடியாதவர்கள் தேன் நிவேதனம் செய்து தினமும் சாப்பிட்டு வர பேசும் சக்தியை ஹயக்ரீவர் அருள்வார் என்பதும் நம்பிக்கை. இந்தக் கோவில் திருமணத் தடை, தொழிலில் தடை போன்றவற்றிற்கும் பரிகார ஸ்தலமாய் விளங்குகிறது. ஸ்தல விருக்ஷம் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் நூல், வேண்டுதல்கள் எழுதிய காகிதங்கள்
 முதலியவற்றைக் கட்டி, படிப்பிற்கும், குழந்தைப் பேற்றுக்கும் வேண்டிக் கொள்கிறார்கள். 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
தனி சன்னதியில் ஸீதா லக்ஷ்மண ஹநுமத் ஸமேதராக கோதண்டராமர். இத்தலத்து ராமரது கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுவது விசேஷம். தாடகா வதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினாராம்.

தாயார் ஹேமாம்புஜ நாயகி தனிக்கோயில் நாச்சியார். ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளும் உள்ளது.

தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும் திருவஹீந்திரபுரத்தில் இருந்தும், ஸ்ரீ ராமர் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்தும் இங்கு கொண்டு வரப்பட்டதாக பலகைக் குறிப்பு கூறுகிறது. 1920-ல் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட வெண்கல மணி, விரிசல் இருப்பதால் தற்போது உபயோகப்படுத்துவது  இல்லையாம்.

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
கோவில் வாசலில் பச்சைப்பசேலென்று காய்கறிகள், கீரை வகைகள் விற்கப்படுவதையும் காணலாம்.

உற்சவங்கள்: ஹயக்ரீவ ஐயந்தி, ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புதன், வியாழன் விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

முகவரி:
அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்), செட்டிபுண்ணியம் - 603 204,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டம்

Friday, July 28, 2017

பொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்கள் / கண்ணுக்கினியன கண்டோம் - 34

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
பொன்விளைந்த களத்தூர் என்னும் திருத்தலம் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். அபிமான ஸ்தலம். பொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.

ஸ்வாமி தேசிகன் யாத்திரையாக திருவஹீந்திபுரம் செல்லும் வழியில் களத்தூரில் தங்கியிருந்தார். அவர் ஆராதிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதும் அவர் வழக்கம். களத்தூருக்கு வந்த அன்று, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ண எதுவும் கிடைக்காததால், தீர்த்தத்தையே நிவேதனம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார். அன்று இரவு அந்த ஊர் நிலங்களை ஒரு வெள்ளைக் குதிரை மேய்ந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைத் துரத்த, அந்தக் குதிரை, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த ஸ்வாமி தேசிகனிடம், ஊர் மக்கள் குதிரை மேய்ந்த விஷயத்தைக் கூற, ஸ்வாமி தேசிகனுக்கு அது சாதாரணக் குதிரை அல்ல, சாக்ஷாத்  ஹயக்ரீவரே என்று புரிந்தது. உடனே நிலத்துக்குச் சென்று பார்த்ததில் அந்தக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொன்மணிகள் விளைந்திருப்பதைக் கண்டார். மக்களிடம் இவையனைத்தும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கிக்கூறி பின்னர் ஸ்வாமி தேசிகன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது வரலாறு. வயலில் (களத்தில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தலவரலாறு.

பொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், அருகே உள்ள பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். பொன்பதர்க்கூடம் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.


பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில். 

ஸ்ரீ ல
க்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.
ஐந்துநிலை ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம். ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம். அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
அருகே ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் சேவை சாதிப்பது விசேஷம். ஸ்ரீ கோதண்ட(பட்டாபி) ராமர் திருக்கோயிலில் ஸ்ரீபட்டாபி(கோதண்ட)ராமர் (மூலவர்) அமர்ந்த திருக்கோலத்திலும், உற்சவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற திருக்கோலத்திலும், ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர் (மூலவர்) ஸயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கிறார்கள்.

உற்சவரும் மிக அழகாக இருக்கிறார். மூலவர் ஸ்ரீ பட்டாபிராமர், சீதாபிராட்டியை இடது மடியில் அமர்த்தியபடி, பட்டாபிஷேகக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். பொதுவாக ஸ்ரீராமருக்கு வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணனும் இருப்பார்கள் என்றும் இங்கே பட்டாபிஷேகக் கோலம் என்பதால் ஸ்ரீராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லட்சுமணரும் இருக்கின்றார்கள் என்றும், இந்தத் திருக்கோலம் அரியது என்றும் பட்டர் சொன்னார். அருகில், ஆஞ்சநேயரும் உள்ளார். உத்ஸவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார். இதே கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள். உத்ஸவ மூர்த்தி சீதா, லக்ஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீராமர்.


ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அபய வேங்கடவரதர் சன்னதியும் உள்ளது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆதிசேஷன், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள் சன்னதிகளும் உள்ளது. 

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

இந்த ஊரில் உள்ள ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தம்.

உற்சவங்கள்: ஸ்ரீராமநவமி உத்ஸவம், நரசிம்ம ஜெயந்தி
ஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 8 am-11 am and 5 pm-7.30 pm


வழி:

செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது. 

முகவரி: 
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்
பொன்விளைந்த களத்தூர் (வழி) செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு 603 405

Thursday, July 27, 2017

பொன்பதர்க்கூடம் - சதுர்புஜ ராமர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 33

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பொன்விளைந்தகளத்தூர் என்ற திருத்தலத்திலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ தொலைவில், பொன்பதர்க்கூடம் என்னும் தலம் இருக்கிறது. இரண்டு தலங்களையும் ஒரே நாளில் சேவிக்கலாம். பொன்விளைந்த களத்தூர் வழியாகவே செல்ல வேண்டும் என்றாலும், பொன்பதர்க்கூடம் கோவில் சீக்கிரமே சாத்தி விடுவார்கள் என்று கேள்விப்பட்டதால், நாங்கள் முதலில் பொன்பதர்க்கூடம் சென்றோம். பிறகு திரும்பும் வழியில் பொன்விளைந்த களத்தூரிலும் சேவித்தோம்

பொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம். பொன்விளைந்த களத்தூர் பற்றி அறிய இங்கே சொடுக்கவும். 

பொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ சதுர்புஜ ராமர் புஷ்பக விமானத்தின்கீழ் அமர்ந்த திருக்கோலத்தில் சங்கு, சக்ர, அபய, வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கிறார். தேவராஜ புஷ்கரிணி. தேவராஜ மகரிஷி ஸ்ரீராமரை மகாவிஷ்ணுவாகத் தரிசிக்க ஆசைப்பட்டுத் தவமிருந்தார். அவர் தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீராமர் அவருக்கு மகாவிஷ்ணுவாகத் தரிசனம் தந்தார். தேவராஜ மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, அதே திருக்கோலத்தில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீராமர் மகாவிஷ்ணு ரூபத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவதால், பெருமாளுக்கு ஸ்ரீசதுர்புஜ கோதண்டராமர் என்று திருநாமம். 
ராமர், மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்ததால் மார்பில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.  உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்ரத்துடன் கோதண்டமும் பாணமும் ஏந்திக்கொண்டு இளைய பெருமாள், சீதாபிராட்டி, அனுமனுடன் சேவை சாதிக்கிறார். உற்சவமூர்த்தியின் விரல்கள், நகம், கைரேகை , முழந்தாள், நரம்புகள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷம். உற்சவர் இடது திருவடியை சற்றே முன்புறமாக மடித்த நிலையில் இருப்பது மற்றொரு விசேஷம். வில்லை ஊன்றி அதை முறிப்பதற்குத் தயாராக இருப்பது போல் உள்ளது. பவ்ய ஆஞ்சனேயர். வாய் பொத்தி பவ்யமாகக் காட்சி தருகிறார். 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
திருமணத் தடை நீக்கும் சன்னதி. பிரிந்த தம்பதியர் கூடவும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகவும், ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.

தர்மிஷ்டர் என்னும் மகான், இங்கு உள்ள தேவராஜ புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமரை வழிபட்டு, தனது சரும நோய் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம். சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம் என்கின்றனர்.

லட்சுமி நாராயணர், ஆழ்வார் ஆசார்யர்கள் சன்னதிகளும் உள்ளது.

உற்சவங்கள்: ஸ்ரீராமநவமி உத்ஸவம், பங்குனி பிரம்மோற்சவம்.
ஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை.
மகர சங்கராந்தி அன்று ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம், பின்னர் பாரிவேட்டை

கோயில் திறந்திருக்கும் நேரம்: 7.30 am-8.30 am , 5 pm-6 pm

வழி:
செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் வழியாக இந்த கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, 
ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது. 

முகவரி:
அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,
பி.வி.களத்தூர் வழி,
பொன்பதர்க்கூடம் - 603 405.
காஞ்சிபுரம் மாவட்டம்

Tuesday, July 25, 2017

காக்களூர் - ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 32

காக்களூர், திருவள்ளூர் அருகே 3 கி.மீ தூரத்தில் ருக்கிறது. இங்கு உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மிகவும் ப்ரசித்தி பெற்றது. 

மூலவர் ஸ்ரீ வீர ஆஞ்சனேயர். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருண்டு இருக்கிறது. வாலின் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. ஒரு கரம் அபய முத்திரையுடனும், இன்னொரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியும் இருக்கிறார். இரண்டு கைகளிலும் கங்கணம். வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த ஆஞ்சனேயரை ஸ்ரீ வ்யாசராஜர் பிரதிஷ்டை செய்தாராம். ஸ்ரீ வ்யாஸராஜர் பல ஆஞ்சனேயர் ஆலயங்களை அமைத்தார். அவர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேய மூர்த்திகளுக்கு தனிச் சிறப்புக்கள் உண்டு. வால் சுருண்டு தலைக்கு மீது இருக்கும். வாலில் மணி கட்டப்பட்டு இருக்கும். ஒரு கரம் அபய முத்திரையுடனும், இன்னொரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியும் இருப்பார். இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும் என்று அர்ச்சகர் சொன்னார். விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து புண்ணிய யாத்திரையாக வந்த ஸ்ரீ வ்யாஸராஜர், இங்கு வந்தபோது இவ்வாலயத்தை அமைத்தார் என்று கூறுகிறார்கள். ஸ்ரீ ராகவேந்திரர் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து, 14 ஆண்டுகள் தங்கியிருந்து பூஜை செய்து, ஸ்லோகங்கள் இயற்றி இருக்கிறார் என்றும் அர்ச்சகர் சொன்னார்.

கர்ப்பக்ருஹமும் ஒரு முக மண்டபமும் மட்டுமே உள்ள சிறிய கோவில். இந்த கோவிலின் பூஜைகளை மத்வ மத சம்ப்ரதாயத்தின்படி செய்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் வாசலில் ஒரு வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து வளர்ந்திருக்கிறது. இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அங்கிருந்தே ஆஞ்சனேயரிடம் நம் வேண்டுகோளை வைத்து பிரார்த்தனை செய்து, பின்னர் ஆலயத்துக்குள் சென்று அவரை வணங்கினால் வேண்டியது நடக்கும் என்று நம்பிக்கை. மரத்தினடியில் நாகப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சன்னதியை அடுத்து ஒரு சிறிய விநாயகர் சன்னதியும் உள்ளது. 
இந்த ஊரிலேயே ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.

உற்சவங்கள்: ஹனுமத் ஜெயந்தி
கோயில் திறந்திருக்கும் நேரம்: 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.

வழி:
திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து புறநகர் ரயிலில் புட்லூர் ஸ்டேஷனில் இறங்கி இந்தக் கோவிலை அடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் கிடைக்கும்.

முகவரி:
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் திருக்கோயில், 
காக்களூர் 602003
திருவள்ளூர் மாவட்டம்.

Monday, July 24, 2017

தென்னாங்கூர் - ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 31

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
தென்னாங்கூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. தென்னாங்கூர் கிராமமே மிகவும் பசுமையாக இருக்கிறது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோவில்தான் என்றால் அது மிகையில்லை. மிகவும் அழகாக, தூய்மையாக இருக்கிறது.

ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் சீடர் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், மிகுந்த கலைநயத்துடன் வியக்கத்தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. பூரி ஜகன்னாதர் கோவிலின் பாணியில் கருவறை கோபுரம் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த கோபுரமும் அதன்மேல் தங்க கலசமும், அதன்மேல் சுதர்சன சக்கரமும், மஞ்சள்நிறக்கொடியும் பார்க்கும்போது பிரம்மாண்டமாய் இருக்கிறது. 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
மூலவர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ ருக்மாயியுடன் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அப்படி ஓர் அழகு!! தாயார் ரகுமாயியும் மீண்டும், மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகு!! கண்ணுக்கினியன கண்டோம்!! உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜ பெருமாள். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயிலில் பகவானைப் பார்க்கும்போது வைகுந்தத்தில் பகவானைப் பார்ப்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

கண்ணன் என்றாலே அலங்காரப்ரியன். பாண்டுரங்கனுக்குத் தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்கிறார்கள். ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ வேணுகோபாலன், ஸ்ரீ ராமர், வெண்ணை அலங்காரம், ராஜஸ்தான் தலைப்பாகையுடன் ராஜகோபாலன் அலங்காரம், காளிங்க நர்த்தனம் என்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம்.

தல விருக்ஷம் தமால மரம். இந்த மரம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ கிருஷ்ண பகவான்  இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பார் எனவும், கோபிகைகளும் ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வடக்கே சாக்ஷி கோபால் என்னும் ஊரில் இந்த மரத்தினடியில்தான் ஸ்ரீ க்ருஷ்ணர் தன் பக்தனுக்கு சாக்ஷி சொன்னாராம்.  வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இந்த விருக்ஷம் தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.  ப்ரார்த்தனை செய்துகொண்டு இம்மரத்தை 12 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்தால் திருமணம், குழந்தைப்பேறு சித்திக்கின்றது என்று மரத்தினடியில் உள்ள குறிப்பு கூறுகின்றது.
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
அர்த்தமண்டபம், மஹாமண்டபம் போன்ற மண்டபங்களும் இருக்கிறது. மண்டபங்களில் பைபர்கிளாசில் கலை வேலைப்பாடுகளுடன் கண்ணனின் லீலைகளை அழகிய வண்ண ஓவியங்களாக அமைத்திருக்கிறார்கள். முன் மண்டபத்தில் விதம் விதமான அலங்காரங்களைப் படங்களாக வைத்திருக்கிறார்கள். மேற்கூரைகளிலும் இதுபோன்று ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. நந்தவனத்தை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். கோவிலும் மிகத் தூய்மையாக உள்ளது. 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
நாம சங்கீர்த்தனம் முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது என்பதால், இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு அருகிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் உள்ளது. மலயத்வஜ பாண்டியன் குழந்தைப்பேறு வேண்டி இந்தத் தலத்தில் யாகம் செய்தபோது யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் ஐதீகம். அதனால் இந்தத் தலம் மீனாக்ஷியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

கோவிலுக்குப் பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது. அங்கு ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது. 


உற்சவங்கள்/ திருவிழா: கருட சேவை, புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேர், கிருஷ்ண ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, விஷுக்கனி.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

வழி:
பேருந்து வசதிகள் உள்ளன. காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பேருந்துகளும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். வந்தவாசியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் செல்லலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது.

முகவரி:
அருள்மிகு ரகுமாயி ஸமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் - 604 408. 
திருவண்ணாமலை மாவட்டம்.

Sunday, July 23, 2017

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்
முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.

அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, "நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்" என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.

வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்" என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.

Saturday, July 22, 2017

பூவிருந்தவல்லி - திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் / கண்ணுக்கினியன கண்டோம் - 30

பூந்தமல்லி என்னும் பூவிருந்தவல்லி, சென்னையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இங்கு அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கச்சி நம்பிகளுக்காக, வரதராஜரும் , ரங்கநாதரும், திருவேங்கடத்தானும் ஒரே இடத்தில் எழுந்தருளிய திருத்தலமாகும். 
புஷ்பபுரி க்ஷேத்ரம். ஐந்து நிலை ராஜகோபுரம். ஸ்வேதராஜ புஷ்கரிணி. ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜப் பெருமாள். தாயார் ஸ்ரீ புஷ்பவல்லி. இந்த தலத்தில் பெருமாள் வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடனேயே எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்குள்ள வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் சேவை சாதிக்கிறார். தாயார் புஷ்பவல்லி என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். தாயார் மல்லிகைப் பூவில் இருந்து தோன்றியதால், பூவிருந்தவல்லி என்ற பெயர் இந்த ஸ்தலத்திற்கு ஏற்பட்டதாம். தனிக் கோயில் நாச்சியார். தலவிருக்ஷம் மல்லிவனம். திருக்கச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர் தொண்டு செய்ததால், புஷ்பமங்கலம் என்றும், தற்போது பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஸ்ரீனிவாச பெருமாளும் ஆண்டாளும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். அருகிலேயே கோசாலை அமைந்துள்ளது. ஒய்யாளி மண்டபமும் உள்ளது. அதில் அழகான ஓவியங்கள் உள்ளது. இத்தலத்தில் அரச மரம், வேப்பமரமும் பின்னிப் பிணைந்த பீடம் உள்ளது. அதில் நாகரும், அருகில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன் சன்னிதியும் உள்ளது. இந்தக் கிருஷ்ணனை அஷ்டமி தினங்களில் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. திருக்கோயிலின் உள்ளே ரங்கநாதருக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் தனிச் சன்னிதி இருக்கிறது. ஆஞ்சநேயர் கைகூப்பிய வண்ணம் சிறிய கற்சன்னதியில் தரிசனம் தருகிறார். பெருமாளை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 


திருக்கச்சி நம்பிகள் வைசிய குலத்தைச் சேர்ந்தவர். வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் கஜேந்திரதாசர். இவர்தான் பிற்காலத்தில் திருக்கச்சி நம்பிகள் என்று பெயர் பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார். இவர் தந்தை தன் பிள்ளைகள் நால்வருக்கும் தனது ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தார். முதல் மூன்று பிள்ளைகளும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர். கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். தந்தையார் அது பற்றிக் கேட்டபோது,"கலங்காப் பெருநகரில் சேகரித்து வைத்தேன்" என்றார். அதாவது பரமபதத்தில் மறுமை செல்வம் சேர்த்து வைத்தார் என்று பொருள். பரம்பொருளின் திருவடி கைங்கர்யத்திலேயே எண்ணம் கொண்டவராக விளங்கினார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார். பலவித பூச்செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அங்கு பூக்கும் பூக்களைப் பறித்து மாலையாக்கி, பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நடந்தே சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். இவர் காஞ்சி வரதருக்கு ஆலவட்டக் கைங்கர்யம் தவறாது செய்து வந்தார். இவரது கைங்கர்யத்தில் மகிழ்ந்த வரதராஜ பெருமாள், தன்னுடன் நேரில் பேசும் பாக்கியத்தை நம்பிகளுக்குத் தந்தருளினார். எவருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் கிடைத்ததில் நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

நம்பிகளுக்கு வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் தளர்ச்சியினால், காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் கவலையுற்றார். அப்போது வரதராஜ பெருமாள், அவர்முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், திருமலை வேங்கடத்தானும் காட்சி கொடுத்து, பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக எழுந்தருளி நித்திய சேவை சாதிப்பதாக அருளினார்கள்.

உற்சவங்கள்/ திருவிழா: ஒவ்வொரு பெருமாளுக்கும் தனிதனி பிரம்மோற்சவம், விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி, திருக்கச்சிநம்பியின் அவதார விழா

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6.30 am - 4.30 pm - 8.30 pm. திருவிழாக் காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது

பேருந்து: சென்னையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

முகவரி:
அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்
பூந்தமல்லி, 

சென்னை - 56

Friday, July 21, 2017

ஆவணியாபுரம் - ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 29



ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 
திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்

ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். 

சிறிய பர்வதம். மலை சிங்கத்தைப் போன்று கம்பீரமாக இருக்கின்றது.   மலை ஏறும் வழியில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அதில் ஒரு குரங்கு குழாயைத் திறந்து தண்ணீர் அருந்தும் காட்சியை ரசித்துக் கொண்டே ஏறினோம். 
ஆவணியாபுரம் பஞ்ச திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 

சன்னதிகள் மலையின் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும்,  ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழே குகை போன்ற கர்ப்பக்ருஹத்தில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் சிம்ம முகத்துடன் சேவை சாதிக்கிறார். சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நவநரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கர்ப்பக்ருஹத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும்,  மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். கீழ்மலையில் உள்ள சன்னதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய நிலையில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
கீழ்மலையில், லட்சுமி நரசிம்மர் சன்னதியும், அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும், தாயார் சன்னதி அருகே பஞ்சநரசிம்மர் சன்னதியும், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சியளிக்கின்றனர். மேல் மலையில், வெங்கடாசலபதி பெருமாளுக்கு தனி சன்னதியும், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர்,  அமிர்தவல்லி தாயார் சன்னதியும் உள்ளது. 

பக்தர்கள், திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் நவநரசிம்மரை வழிபட்டுப் பிரார்த்திக்கின்றனர். அவ்வாறு குழந்தைப்பேறு பெற்ற பக்தர்கள் துலாபாரம் செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிட்ட தானியங்களின் முதல் அறுவடையினை லட்சுமி நரசிம்மருக்கு நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கின்றனர். இப்பெருமாளின் சன்னதியில் நெய்தீபமேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.   

உற்சவங்கள்/ திருவிழா: திருக்கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் ஊஞ்சல் உற்சவம், நரசிம்ம ஜெயந்தி, விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6AM–12 PM; 3–8 PM

பேருந்து: சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, வந்தவாசி முதலிய  இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 

முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
ஆவணியாபுரம், திருவண்ணாமலை-604504.

Thursday, July 20, 2017

கண்ணன் கதைகள் (63) - எது மதுரம்?

ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள். 

தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார்.   கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.

பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.  

Wednesday, July 19, 2017

கண்ணன் கதைகள் (62) - மீனவன்

குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள். 

அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.

அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, "மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.

Tuesday, July 18, 2017

கண்ணன் கதைகள் (61) - சீசா



வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி  மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு  அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான்.  சிறுவன் அவளிடம் வந்து, "நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா  என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா?  நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்" என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.

தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள்.  இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை.

Monday, July 17, 2017

THILLAIVILAGAM - SRI VEERA KOTHANDARAMAR TEMPLE / கண்ணுக்கினியன கண்டோம் -28

Google image

Apart from Divya Desams(108), there are famous Vishnu Temples known as Abhimana Desams(29) and Purana Desams(20). Thillaivilagam is an Abimana sthalam.

Thillaivilagam is one among the Pancha Rama Kshetrams. It is about 20 km south-west of Thiruthuraipoondi. Thillaivilangam, Vaduvur, Paruthiyur, Mudikondan, Adambar are the five kshetrams known as Pancha Rama Kshetras. All the 5 located in Thiruvarur District.


Moolavar : Veera Kothandarama facing east in Standing Posture alongwith Sita, Lakshmana and Dasa Anjaneya.

Sri Veera Kothandaramar Temple is a beautiful shrine located at Thillaivilagam. Garudazhwar stands opposite to the sanctum sanctorum. 



This is a kshetra where Panchaloka idols are the presiding deities (moolavar). Kothanda Ramar is seen with His consort Sita, Lakshmana and Hanuman. Lord Rama is so beautiful. Moolavar is about 4 ½ feet tall and stands (Nindra thirukkolam ) majestically with a beautiful smile. HE is seen holding a bow in His left hand and an arrow with the inscription ‘Ramasaram’ in His right hand. Lakshmana stands to the left and Goddess Sita is in Kalyana Kolam to the right of the Lord. Anjaneya is seen near Sita in Dasa (humble) posture with his right hand closing His mouth. 

DISTINCTIVE FEATURES:
The priest shows karpoora aarthi and narrates the distinctive features of Rama. Kothandarama graces us in ‘Tribangi’ Seva (a rare three different curves posture), in the neck, hip and leg. He shows us the close look of Rama’s hands. I was awestruck!! We were able to see HIS distinctive sharp fingers, nerves, ring and sharp nails just like a human hand. In HIS right hand HE holds a special arrow known as ‘Rama Saram’. The arrow has an inscription ‘Rama Saram’ in it. It is said that Rama used this special arrow only thrice, during Kakasura vadham, Vaali vadham and Ravana vadham. The priest also says that in other kshetras Rama holds the arrow named 'ardha chandra banam'. Rama is holding the bow in his left hand. We can clearly see the knee cap, the green nerves and moles on the legs of the Lord. On His left leg, there is a Raksha which is said to be tied by mother Kausalya when Rama was young to protect HIM from evil forces!!! There is a santhanakrishnan idol also.

Legend: This is said to be the place of Bharadwaja Maharishi. After defeating Ravana, Lord Rama on His way to Ayodhya, stayed here in Bharadwajar’s ashram. Rama asks Hanuman to go before and convey to Bharatha that they are on the way to Ayodhya. Hanuman accepts it humbly and hence seen in the Dasa posture.

About the temple: It is said Rama came in the dream of Velu Thevar and asked him to construct a temple for HIM. After that Velu thevar started digging at various places. These Pancha Loka idols of this temple were found buried while digging the ground to the west of the temple. The temple is also built by Velu thevar. The Bhattar and his father are performing selfless service at the temple.


There are beautiful paintings on the walls of the temple.
There are three pushkarinis named Rama theertham on the back side of the temple, Sita theertham and Hanuman theertham. Adjacent to this temple, there is a Nataraja temple and hence the name Thillaivilagam.
Festivals: Rama Navami, Hanumad Jayanthi, Krishna Jayanthi, Navarathri, Vaikunta ekadasi. ‘Deer Vahana’ Procession on the 11th day of Rama Navami is a special feature. Rama Pattabhibhisekam is performed during the Ramanavami Utsavam and on that day, Lord is seen with a special crown.

Aadi Amavasai and Thai Amavasai days are sacred at this temple. Couples who bathe in the temple tank on either of these two days are believed to be blessed with children.

Our route:  Mannargudi - Thiruthuraipoondi - Muthupet via car.

Temple timings: 8 am -12 pm and 5 pm - 8 pm

Address:
Arulmigu Veera Kothandaramaswamy Thirukkoil
Thillaivilagam - 614 706

Tiruvarur Dist.