Friday, March 11, 2011

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) / கண்ணுக்கினியன கண்டோம்-1

சென்ற பதிவில் "கண் படைத்த பயன்" வரிசையில் கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி திருமஞ்சனம் பற்றி எழுதி இருந்தேன். படம் எடுத்துப்போட்டிருந்த "பேனர் " படிக்க முடியவில்லை என சிலர் சொன்னதால், அடியேன் இங்கு அனைவரின் உபயோகத்துக்காகவும் பாராயணத்துக்காகவும் தமிழில் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன். எனது ஸ்நேஹிதி ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளாள். அதையும் இங்கு வெளியிட்டுள்ளேன்.

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) கோவிலில் கட்டியிருக்கும் தொங்கு பலகையில் எழுதியிருப்பதை இங்கு தமிழில் அப்படியே எழுதியுள்ளேன்.

பெருமாளின் அமைப்பு:

ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அனந்த பீடம், யோக பீடம், ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத ஹஸ்தத்துடன் குளிர கடாக்ஷிக்கும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த ந்ருஸிம்ஹனுக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது. " அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக ஸேவை சாதிக்கிறார்". மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதைக் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நக்ஷத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.

திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராஹு, நாக்கில் சனி பகவான், ஆக நவக்ரஹங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால் இது ஒரு பரிஹார ஸ்தலமாக விளங்குகிறது.
ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி ஸ்லோகம்

ஸத்ய ஞான ஸுக ஸ்வரூப மமலம் க்ஷீராப்தி மத்யே ஸ்திதம் |
யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம் ||
த்ர்யக்ஷம் சக்ர பினாக ஸாபயகரான் பிப்ராண மர்க்கச்சவிம் |
சத்ரீபூத பணீந்த்ரமிந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்
ம் பஜே ||

நவக்ரஹ தோஷங்கள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தக்கவாறு பாராயணம் செய்துகொண்டு ஸ்ரீ ந்ருஸிம்ஹன் சந்நிதியை வலம் வர தோஷ நிவ்ருத்தி அடைந்து ஸகல ஸௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

சூரியன்:

காலானல ஸமப்ரக்யம் ஷட்கோணாந்தஸ்திதம் விபும்
ஜ்வாலாமாலாதரம் தேவம் பஜே ஜ்வாலா ந்ருகேஸரிம்

சந்திரன்:

அனந்த மச்யுதம் தீரம் விஸ்வரூபம் ப்ரபும் விபும்
ந்ருஸிம்ஹம் தேவதேவேசம் தம் பஜே ஸர்வதோமுகம்

புதன்:

ஸர்வாபரண பூஷாங்கம் ஸச்சிதானந்த விக்ரஹம்
பத்மசக்ரதரம் வந்தே ஹயக்ரீவ ந்ருகேஸரிம்

சுக்ரன்:

ஸ்ரீ பூ நீளா ஸஹிதம் ஸர்வாபரண பூஷிதம்
விரூபாக்ஷம் மஹாவிஷ்ணும் பஜே பத்ர ந்ருகேஸரிம்

செவ்வாய்:

சதுஸ் சக்ரதரம் தேவம் அங்காராந்தர் பஹிஸ்திதம்
ஜ்வாலாமாலா தரம் வந்தே பஜேதுக்ர ந்ருகேஸரிம்

குரு:

வேதாந்த வேத்யம் யக்ஞேஸம் ஸர்வதேவ நமஸ்க்ருதம்
பஜாமி ஸததம் தேவம் மஹாவிஷ்ணும் ந்ருகேஸரிம்

சனி பகவான்:

அஷ்ட சக்ரதரம் தேவம் விபும் சனி ஹ்ருதிஸ்திதம்
நீலாபரண பூஷாங்கம் பாதாள ந்ருஹரிம் பஜே

ராஹு:

சக்ராஷ்டக தரம் தேவம் த்ரிநேத்ரம் சோக்ரவிக்ரஹம்
விஸ்வரூப மஜம் ஸௌம்யம் வராஹ ந்ருஹரிம் பஜே

கேது:

ஆதிமத்யாந்த ரஹிதம் ஸச்சிதானந்த ரூபிணம்
நமாமி ந்ருஸிம்ஹம் தம் ஸர்வ சத்ரு விநாஸனம்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோட காரஞ்ச பார்கவ:
யோகானந்தஸ் சத்ரவட: பாவனோ நவஹரிர் நம:

Suryan:
Kaalanala Samapragyam Shatkonaanthasthitham Vibhum
Jwaala Maala Dharam Devam Bhaje Jwaala Nrukesarim
Chandran:
Anantham Achyutham Theeram Vishwaroopam Prabhum Vibhum
Nrisimham Deva Devesam Tham Bhaje Sarvathomukham

Budhan:
Sarvaabharana Bhooshangam Satchithananda Vigraham
Padma Chakra Dharam Vande Hayagriva Nrukesarim

Sukran:
Sri Bhu Neela Sahitham Sarvaabharana Bhooshitham
Virupaaksham Mahavishnum Bhaje Badra Nrukesarim

Chevvai:
Chathus Chakradharam Devam Angaaraanthar Bahisthitham
Jwaala Maala Dharam Vande Bhajedugra Nrukesarim

Guru:
Vedantha Vedhyam Yagnesam Sarva Deva Namaskrutham
Bhajaami Sathatham Devam Mahavishnum Nrukesarim

Sani:
Ashta Chakra Dharam Devam Vibhum Sani Hrudisthitham
Neelabharana Bhooshangam Paadhaala Nruharim Bhaje

Rahu:
Chakraashtaka Dharam Devam Trinethram shograVigraham
Vishwaroopa Bhajam Sowmyam Varaha Nruharim Bhaje

Kethu:
Adhimathyaantha Rahitham Satchithaananda Roopinam
Namaami Nrusimhan Tham Sarva Shathru Vinaasanam

Jwala Ahobila Malola Kroda Kaaranja Bhargava:
Yogananda Kshathravada Paavano Navaharim Nama:

மேலும் விவரங்களுக்கு:
http://www.naraharikrupa.com/ & http://www.narahari.in/

Sunday, January 30, 2011

KATTAVAKKAM SRI VISWAROOPA LAKSHMI NARASIMHAR

Picture of a banner in the temple


It is a great pleasure for me to share Lord Sri Viswaroopa Lakshmi Narasimhar's picture. By the grace of the Lord, I had a darshan of HIM in Kattavakkam, and also had a chance to see the Thirumanjanam (abishegam) of the LORD.


The Lord is gigantic and has an amazingly smiling face. The Lord is seated (VEETRIRUNDHA THIRUKOLAM) with his consort, Goddess Lakshmi on His left lap. She is embracing Him with Her right hand and holding a lotus flower on Her left hand. The Lord holds Sudharshana Chakra on His back left hand and bow-and-arrow on His back right hand. This indicates His intention of holding the bow and arrow in His subsequent incarnation as Lord Rama.
His forehands show Abhaya Hastham (indicating that the Lord will come to the rescue of the devotees) and Varada Hastham(pointing towards his feet conveying to the devotees that the Lord will come to the rescue of only those who fall at his feet, i.e., total surrender) postures. He has three eyes, the third one is in His forehead and the Adhisesha above His head is with seven hoods. Each hood has a crowning and sparkling Nagarathnam above it.

Visit this holy temple with your family, friends and relatives and get Perumal's blessings.


For upcoming events & more details visit http://www.naraharikrupa.com/ & http://www.narahari.in/

Post adapted from Shri.K.S.Jegannathan's "Narasimha darshanam"

Tuesday, January 4, 2011

HANUMAN CHALISA

HANUMAD JAYANTHI WISHES TO ALL !!!
ஹனுமத் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !!!

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! ப்ரபோ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத் தருவீராக.

ஹனுமான் சாலீஸா

பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன். நான்கு கனிகள்: 1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள். எட்டுவித சித்திகள்: 1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல் 3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல் ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மன்ஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

நன்றி : http://temple.dinamalar.com/

Thursday, August 12, 2010

ஸ்ரீ பக்ஷிராஜன் பதிகம்


கவிக்கொண்டல் நரசிம்ஹாச்சாரியார் அந்தாதி போன்ற பிரபந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். அவர் இயற்றிய இந்தப்பதிகம் ( செய்யுள் வடிவம்) பக்ஷிராஜன் பெருமையைப் பற்றிக் கூறும் எளிய செய்யுட்கள் . " மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற விரும்பு" , "அகங்கொள் *கவலை யகற்று" என்பதன் பொருள்: *ஒருவர்க்குக் கவலை உண்டாவது கல்வியின்மை, செல்வம் இன்மை, பொருள் இன்மை, மக்கட்பேறின்மை, தன்நோய், சுற்றத்துநோய், தந்த பொருள் வாராமை, வழக்கு முதலியவைகளால் ஆகும் . அவைகளில் எது வந்திடினும் அகற்றாய் என்பதாம். அனைவரும் படித்து பயன் பெறுக. இன்புறுக.

ஸ்ரீ
பக்ஷிராஜன் பதிகம்
(
காப்பு நேரிசை வெண்பா)

மனதால்
நினைக்கவொணா மாவேகம் கொண்டாய்
வினதைதன்
மைந்த விமலா - உனதாம்
அரும்புகழைப்
பாட அருள்வாயே காப்பாய்
வருவழுக்க
ளின்றி வர.

(
அவைடக்கம்)

ஆழிநீர்
தன்னை அளப்பான் முயலுதல்போல்
தாழ்
மதியன் சற்றும் தயங்காமல் - ஏழ்பாரும்
போற்று
மிறையா மெழிற்பக்ஷி ராஜன்சீர்
தூற்ற
முயன்றேன் துணிந்து.

நூல்

1. சீரார் நறையூர் திகழ்புள் ளதிபதியே

பேரார் சுகமே பெருமா - ஓரா

மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற

வினதை சுதனே விரும்பு.


2. வினதை சுதனே விமலா வெளியேன்

மனதிற்குடிகொள் மகிபா- உனதாம்

அருளைத்தருவாய் அமலா புகழ்சேர்

பொருளே கருணை புரிந்து.


3. திருவார் திருமால் திகழ்வா கனமே

ஒருவா ஒளிசேர் உயர்வே -தருவாய்

மனதின் விருப்பை மகிழ்ந்தே விரைவில்

வினதா சுதனே மிக.


4. திருமாலமருந் திகழ்வா கனமே

ஒருமா முதலே உனதாம் - அருளைத்

தருவாயெனக்குத் தயை செய் வினதை

திருமா மகனே தினம்.


5. விககா விமலா மிகு வேகமுளாய்

சுகமே கவலை களிப்பாய் -தகவே

ஒழிப்பாய் எனதுள்ளுறைவாய் மனமே

கொழிக்கக் குதுகலம் யான் கொண்டு.


6. விகங்க அரசே விமலா எனதாம்

அகங்கொள் கவலை அகற்றாய் - மிகவே

தொழுதேன் உனையே துயர் தீர் எனக்கிப்

பொழுதே எனதன்பு பூண்டு.


7. அப்பனே புள்ளின் அரசனே உன்றனக்கே

தப்பாது சென்னிதனைத் தாழ்த்தினேன் - ஒப்பில்

விகங்கம மாலே வினதா சுதனே

அகங்கொள் *கவலை யகற்று.


8. பொற்சிறகார் வேகமிகு புள்ளரசே ஞாலத்தோர்

கற்கின்ற நாமக் ககமாலே - எற்கு

நலந்தருவா யென்றும் நவின்றிடுவேன்
உன்பேர்
வலந்தருவாய் என்பக்கல் வந்து.

9. பன்னக வைரி பலமார் சிறைகொண்ட

மின்வேக மேவும் விமலனே - பன்னு
பதத்திரி மாலே பரமா களிக்க
இதத்தினைச் செய்யின் றெனக்கு.


10. வலமார் சிறைகொண்ட மாலே யமுதக்

கலசம் கொணர்ந்த சுகமே - சலசம்
உறைதேவி மார்பன் உவக்கும் ஒருவா
குறை தவிர்ப்பாய் என்துதியைக் கொண்டு.


(நூற்பயன்)

பன்னு பக்ஷிராஜன் துதி பாடுவார் பக்தியுடன்
இன்னிலத்தில் நன்றே இருந்திடுவர்:- மன்னும்
உயர்செல்வம் பெற்றிடுவர் ஓங்குபுகழ் வாய்ந்தே
அயர்வில் அமரருமாவார்.

Wednesday, July 28, 2010

STOTRAS ON SRI ANJANEYAR (KAMBARAMAYANAM )


பள்ளியில் படிக்கும் காலத்தில் மனப்பாடச் செய்யுளாக இருந்த போது மனப்பாடம் செய்யக் கஷ்டப்பட்டவை!!!!! இப்போது ஸ்லோகம் என்றதும் எளிதாக வருகிறதே எப்படி? வயதுதான் காரணமோ?

கம்பராமாயணத்தில் ஸ்ரீ அனுமனைப்பற்றிய பாடல்கள்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்
க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்
யலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவ
ன் ம்மை அளித்துக் காப்பான்.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத்
தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு
கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்
மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன்.

சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.

அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி.

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே.

Monday, July 12, 2010

MADHURASHTAKAM

Sri Vallabhacharya was one of the greatest sage- philosophers of India, and was one of the foremost followers of Bhakthi Marga. He saw The Lord everywhere. In his poem "Madhurashtakam", he narrates the sweetness of Lord Krishna and sweetness in all His activities.

Madhurashtakam
By Sri Vallabhacharya

Adharam madhuram vadanam madhuram
Nayanam madhuram hasitam madhuram
Hrdayam madhuram gamanam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Vacanam madhuram caritam madhuram
Vasanam madhuram valitam madhuram
Calitam madhuram bhramitam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Venur madhuro renur madhurah
Panir madhurah padau madhurau
Nrtyam madhuram sakhyam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Gitam madhuram pitam madhuram
Bhuktam madhuram suptam madhuram
Rupam madhuram tilakam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Karanam madhuram taranam madhuram
Haranam madhuram ramanam madhuram
Vamitam madhuram samitam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Gunja madhura mala madhura
Yamuna madhura vici madhura
Salilam madhuram kamalam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Gopi madhura lila madhura
Yuktam madhuram bhuktam madhuram
Hrstam madhuram sistam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Gopa madhura gavo madhura
Yastir madhura srstir madhura
Dalitam madhuram phalitam madhuram
Madhuradhi-pater akhilam madhuram

Translation:

Sweet are the lips, sweet the face,
Sweet the eyes, sweet the smile,
Sweet the heart and sweet the motion –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the words, sweet the deeds,
Sweet the clothes, sweet the pose,
Sweet the gait and sweet the roaming –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the flute, sweet the foot-dust,
Sweet the hands, sweet the feet,
Sweet the dancing, sweet the friendship –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the singing, sweet the yellow cloth,
Sweet the eating, sweet the sleeping,
Sweet the beauty, sweet the tilak –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the deeds, sweet the liberation,
Sweet the stealing, sweet the water-sports,
Sweet the oblations, sweet the tranquility –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the gunja-berry necklace, sweet the flower garland,
Sweet the Yamuna River, sweet the ripples,
Sweet the water, sweet the lotuses,
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the gopis, sweet the pastimes,
Sweet the union, sweet the food,
Sweet the delight, sweet the courtesy –
Complete is the sweetness of the Lord of Sweetness!

Sweet the gopas, sweet the cows,
Sweet the staff, sweet the creation,
Sweet the trampling, sweet the fruitfulness –
Complete is the sweetness of the Lord of Sweetness!

The above translation is found in the book, ‘The Miracle Plays of Mathura’, by Norvin Hein, New Haven and London, Yale University Press, 1972.

Monday, July 5, 2010

ஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள்


பீமே நித்யம் பவ ஜலநிதௌ மஜ்ஜதாம் மாநவாநாம்
ஆலம்பார்த்தம் வ்ருஷகிரிபதி: த்வத் நிதேசாத் ப்ரயுங்க்தே
ப்ரஜ்ஞா ஸாரம் ப்ரக்ருதி மஹதா மூல பாகேந ஜூஷ்டம்
சாகா பேதை: ஸுபகம் அநகம் சாச்வதம் சாஸ்த்ர பாணிம்

விளக்கம் – தயா தேவியே! சேதனர்கள் (மனிதர்கள்) சம்ஸாரம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கியுள்ளனர். உன்னுடைய நாதன் ஸ்ரீனிவாசன், உனது கட்டளைக்கு ஏற்ப, சாஸ்த்ரம் என்னும் தனது அழகான திருக்கரத்தை, இந்த உலகில் உள்ள சேதனர்கள் உய்யும்பொருட்டும், அவர்களைக் கரையேற்றும்பொருட்டும் நீட்டுகிறான். அந்த திருக்கரம் மிகவும் பெருமை உடையது. தோஷமற்றது. அதுவே வேதத்தின் சாரம். ஓம்காரத்தின்( ப்ரணவத்தின்) வடிவம். அனைத்து சாகைகளின் மந்த்ரமாக அது விளங்குகிறது. எவன் ஒருவன் அந்தத் திருக்கரத்தைப்பிடித்துக்கொள்கிறானோ, அவன் சம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைத்து மோக்ஷத்தை அடைகிறான். - ஸ்ரீமத்ஆண்டவன் அனுக்ரஹ பாஷணம் (76-வது திருநக்ஷத்ர தினம்)