Sunday, April 20, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51, ஸ்ரீ நாராயணீயம் 51வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -51
அகாசுர வதம்

कदाचन व्रजशिशुभि: समं भवान्
वनाशने विहितमति: प्रगेतराम् ।
समावृतो बहुतरवत्समण्डलै:
सतेमनैर्निरगमदीश जेमनै: ॥१॥

கதா₃சந வ்ரஜஶிஶுபி₄: ஸமம் ப₄வாந்
வநாஶநே விஹிதமதி: ப்ரகே₃தராம் |
ஸமாவ்ருதோ ப₃ஹுதரவத்ஸமண்ட₃லை:
ஸதேமநைர்நிரக₃மதீ₃ஶ ஜேமநை: || 1||

1. ஒரு முறை, ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டு, காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு, கன்றுகளுடனும், கோபர்களுடனும் காட்டுக்குச் சென்றீர்கள்.

विनिर्यतस्तव चरणाम्बुजद्वया-
दुदञ्चितं त्रिभुवनपावनं रज: ।
महर्षय: पुलकधरै: कलेबरै-
रुदूहिरे धृतभवदीक्षणोत्सवा: ॥२॥

விநிர்யதஸ்தவ சரணாம்பு₃ஜத்₃வயா-
து₃த₃ஞ்சிதம் த்ரிபு₄வநபாவநம் ரஜ: |
மஹர்ஷய: புலகத₄ரை: கலேப₃ரை-
ருதூ₃ஹிரே த்₄ருதப₄வதீ₃க்ஷணோத்ஸவா: || 2||

2. தாங்கள் நடந்தபோது, தங்கள் தாமரைப் பாதங்கள் பட்டு தூசி கிளம்பியது. மூவுலகங்களையும் பாவனமாக்கும் அந்த தூசியை, முனிவர்கள் மயிர்க்கூச்சலுடன் தங்கள் தேகத்தில் ஏற்றார்கள். 

प्रचारयत्यविरलशाद्वले तले
पशून् विभो भवति समं कुमारकै: ।
अघासुरो न्यरुणदघाय वर्तनी
भयानक: सपदि शयानकाकृति: ॥३॥

ப்ரசாரயத்யவிரலஶாத்₃வலே தலே
பஶூந் விபோ₄ ப₄வதி ஸமம் குமாரகை: |
அகா₄ஸுரோ ந்யருணத₃கா₄ய வர்தநீ
ப₄யாநக: ஸபதி₃ ஶயாநகாக்ருதி: || 3||

3. கோபகுமாரர்களுடன், புல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அகன் என்ற அசுரன், தங்களுக்குத் தீமை நினைத்து, மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான். 

महाचलप्रतिमतनोर्गुहानिभ-
प्रसारितप्रथितमुखस्य कानने ।
मुखोदरं विहरणकौतुकाद्गता:
कुमारका: किमपि विदूरगे त्वयि ॥४॥

மஹாசலப்ரதிமதநோர்கு₃ஹாநிப₄-
ப்ரஸாரிதப்ரதி₂தமுக₂ஸ்ய காநநே |
முகோ₂த₃ரம் விஹரணகௌதுகாத்₃க₃தா:
குமாரகா: கிமபி விதூ₃ரகே₃ த்வயி || 4||

4. அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர்.

प्रमादत: प्रविशति पन्नगोदरं
क्वथत्तनौ पशुपकुले सवात्सके ।
विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो
सुहृज्जनं विशरणमाशु रक्षितुम् ॥५॥

ப்ரமாத₃த: ப்ரவிஶதி பந்நகோ₃த₃ரம்
க்வத₂த்தநௌ பஶுபகுலே ஸவாத்ஸகே |
வித₃ந்நித₃ம் த்வமபி விவேஶித₂ ப்ரபோ₄
ஸுஹ்ருஜ்ஜநம் விஶரணமாஶு ரக்ஷிதும் || 5||

5. தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்தனர். இதையறிந்த நீர், ஆதரவற்ற நண்பர்களைக் காக்க அப்பாம்பின் வாயில் நுழைந்தீர். 

गलोदरे विपुलितवर्ष्मणा त्वया
महोरगे लुठति निरुद्धमारुते ।
द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो
विमोचयन् पशुपपशून् विनिर्ययौ ॥६॥

க₃லோத₃ரே விபுலிதவர்ஷ்மணா த்வயா
மஹோரகே₃ லுட₂தி நிருத்₃த₄மாருதே |
த்₃ருதம் ப₄வாந் வித₃லிதகண்ட₂மண்ட₃லோ
விமோசயந் பஶுபபஶூந் விநிர்யயௌ || 6||

6. அதன் வாயில் இருந்துகொண்டு தங்கள் உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டீர்கள். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. உடனே, அதனுடைய கழுத்தைக் கிழித்துக்கொண்டு, கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் பிழைப்பித்து வெளியில் வந்தீர்கள். 

क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं
महासुरप्रभवमहो महो महत् ।
विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा
नभ:स्थले ननृतुरथो जगु: सुरा: ॥७॥

க்ஷணம் தி₃வி த்வது₃பக₃மார்த₂மாஸ்தி₂தம்
மஹாஸுரப்ரப₄வமஹோ மஹோ மஹத் |
விநிர்க₃தே த்வயி து நிலீநமஞ்ஜஸா
நப₄:ஸ்த₂லே நந்ருதுரதோ₂ ஜகு₃: ஸுரா: || 7||

7. அகாசுரனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, தாங்கள் வெளியே வந்ததும் தங்களுடன் கலந்து மறைந்தது. ஆச்சர்யம்! தேவர்கள் தங்கள் புகழ் பாடி ஆடினார்கள். 

सविस्मयै: कमलभवादिभि: सुरै-
रनुद्रुतस्तदनु गत: कुमारकै: ।
दिने पुनस्तरुणदशामुपेयुषि
स्वकैर्भवानतनुत भोजनोत्सवम् ॥८॥

ஸவிஸ்மயை: கமலப₄வாதி₃பி₄: ஸுரை-
ரநுத்₃ருதஸ்தத₃நு க₃த: குமாரகை: |
தி₃நே புநஸ்தருணத₃ஶாமுபேயுஷி
ஸ்வகைர்ப₄வாநதநுத போ₄ஜநோத்ஸவம் || 8||

8. பிறகு, இடைச்சிறுவர்களுடன் உச்சிப்பொழுதில் வனபோஜனம் செய்தீர்கள். அதைக் கண்டு பிரமனும், தேவர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

विषाणिकामपि मुरलीं नितम्बके
निवेशयन् कबलधर: कराम्बुजे ।
प्रहासयन् कलवचनै: कुमारकान्
बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुत: ॥९॥

விஷாணிகாமபி முரலீம் நிதம்ப₃கே
நிவேஶயந் கப₃லத₄ர: கராம்பு₃ஜே |
ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந்
பு₃போ₄ஜித₂ த்ரித₃ஶக₃ணைர்முதா₃ நுத: || 9||

9. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் உணவு உண்டீர். தேவர்கள் தங்களைத் துதித்தனர். 

सुखाशनं त्विह तव गोपमण्डले
मखाशनात् प्रियमिव देवमण्डले ।
इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते
मरुत्पुरीनिलय गदात् प्रपाहि माम् ॥१०॥

ஸுகா₂ஶநம் த்விஹ தவ கோ₃பமண்ட₃லே
மகா₂ஶநாத் ப்ரியமிவ தே₃வமண்ட₃லே |
இதி ஸ்துதஸ்த்ரித₃ஶவரைர்ஜக₃த்பதே
மருத்புரீநிலய க₃தா₃த் ப்ரபாஹி மாம் || 10||

10. குருவாயூரப்பா! தேவர்களுடன் யாகத்தில் ஹவிர்பாகம் சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் ஆனந்தம் அடைகிறீர்கள் என்று தேவர்கள் கூறி துதித்தனர். உலகிற்கெல்லாம் நாயகனே! என் வியாதிகளைப் போக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். 

Saturday, April 19, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50, ஸ்ரீ நாராயணீயம் 50வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -50
பகாசுர, வத்ஸாசுர வதம்

तरलमधुकृत् वृन्दे वृन्दावनेऽथ मनोहरे
पशुपशिशुभि: साकं वत्सानुपालनलोलुप: ।
हलधरसखो देव श्रीमन् विचेरिथ धारयन्
गवलमुरलीवेत्रं नेत्राभिरामतनुद्युति: ॥१॥

தரலமது₄க்ருத் வ்ருந்தே₃ வ்ருந்தா₃வநே(அ)த₂ மநோஹரே
பஶுபஶிஶுபி₄: ஸாகம் வத்ஸாநுபாலநலோலுப: |
ஹலத₄ரஸகோ₂ தே₃வ ஶ்ரீமந் விசேரித₂ தா₄ரயந்
க₃வலமுரலீவேத்ரம் நேத்ராபி₄ராமதநுத்₃யுதி: || 1||

1. லக்ஷ்மீபதியே! வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, தாங்கள் திரிந்து மகிழ்ந்தீர்கள்.

विहितजगतीरक्षं लक्ष्मीकराम्बुजलालितं
ददति चरणद्वन्द्वं वृन्दावने त्वयि पावने ।
किमिव न बभौ सम्पत्सम्पूरितं तरुवल्लरी-
सलिलधरणीगोत्रक्षेत्रादिकं कमलापते ॥२॥

விஹிதஜக₃தீரக்ஷம் லக்ஷ்மீகராம்பு₃ஜலாலிதம்
த₃த₃தி சரணத்₃வந்த்₃வம் வ்ருந்தா₃வநே த்வயி பாவநே |
கிமிவ ந ப₃பௌ₄ ஸம்பத்ஸம்பூரிதம் தருவல்லரீ-
ஸலிலத₄ரணீகோ₃த்ரக்ஷேத்ராதி₃கம் கமலாபதே || 2||

2. மகாலக்ஷ்மியின் கைகளால் வருடப்படுவதும், உலகத்தைக் காக்கின்றதுமான தங்கள் பாதம் பட்டு, மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.

विलसदुलपे कान्तारान्ते समीरणशीतले
विपुलयमुनातीरे गोवर्धनाचलमूर्धसु ।
ललितमुरलीनाद: सञ्चारयन् खलु वात्सकं
क्वचन दिवसे दैत्यं वत्साकृतिं त्वमुदैक्षथा: ॥३॥

விலஸது₃லபே காந்தாராந்தே ஸமீரணஶீதலே
விபுலயமுநாதீரே கோ₃வர்த₄நாசலமூர்த₄ஸு |
லலிதமுரலீநாத₃: ஸஞ்சாரயந் க₂லு வாத்ஸகம்
க்வசந தி₃வஸே தை₃த்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதை₃க்ஷதா₂: || 3||

3. பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீர், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தீர்கள்.

रभसविलसत्पुच्छं विच्छायतोऽस्य विलोकयन्
किमपि वलितस्कन्धं रन्ध्रप्रतीक्षमुदीक्षितम् ।
तमथ चरणे बिभ्रद्विभ्रामयन् मुहुरुच्चकै:
कुहचन महावृक्षे चिक्षेपिथ क्षतजीवितम् ॥४॥

ரப₄ஸவிலஸத்புச்ச₂ம் விச்சா₂யதோ(அ)ஸ்ய விலோகயந்
கிமபி வலிதஸ்கந்த₄ம் ரந்த்₄ரப்ரதீக்ஷமுதீ₃க்ஷிதம் |
தமத₂ சரணே பி₃ப்₄ரத்₃விப்₄ராமயந் முஹுருச்சகை:
குஹசந மஹாவ்ருக்ஷே சிக்ஷேபித₂ க்ஷதஜீவிதம் || 4||

4. அவன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, தாங்கள் நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அவனைப் பார்த்து, அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து, அவனைக் கொன்றீர்கள்.

निपतति महादैत्ये जात्या दुरात्मनि तत्क्षणं
निपतनजवक्षुण्णक्षोणीरुहक्षतकानने ।
दिवि परिमिलत् वृन्दा वृन्दारका: कुसुमोत्करै:
शिरसि भवतो हर्षाद्वर्षन्ति नाम तदा हरे ॥५॥

நிபததி மஹாதை₃த்யே ஜாத்யா து₃ராத்மநி தத்க்ஷணம்
நிபதநஜவக்ஷுண்ணக்ஷோணீருஹக்ஷதகாநநே |
தி₃வி பரிமிலத் வ்ருந்தா₃ வ்ருʼந்தா₃ரகா: குஸுமோத்கரை:
ஶிரஸி ப₄வதோ ஹர்ஷாத்₃வர்ஷந்தி நாம ததா₃ ஹரே || 5||

5. அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

सुरभिलतमा मूर्धन्यूर्ध्वं कुत: कुसुमावली
निपतति तवेत्युक्तो बालै: सहेलमुदैरय: ।
झटिति दनुजक्षेपेणोर्ध्वं गतस्तरुमण्डलात्
कुसुमनिकर: सोऽयं नूनं समेति शनैरिति ॥६॥

ஸுரபி₄லதமா மூர்த₄ந்யூர்த்₄வம் குத: குஸுமாவலீ
நிபததி தவேத்யுக்தோ பா₃லை: ஸஹேலமுதை₃ரய: |
ஜ₂டிதி த₃நுஜக்ஷேபேணோர்த்₄வம் க₃தஸ்தருமண்ட₃லாத்
குஸுமநிகர: ஸோ(அ)யம் நூநம் ஸமேதி ஶநைரிதி || 6||

6. இடைச்சிறுவர்கள், உமது தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். தாங்கள், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தீர்கள்.

क्वचन दिवसे भूयो भूयस्तरे परुषातपे
तपनतनयापाथ: पातुं गता भवदादय: ।
चलितगरुतं प्रेक्षामासुर्बकं खलु विस्म्रृतं
क्षितिधरगरुच्छेदे कैलासशैलमिवापरम् ॥७॥

க்வசந தி₃வஸே பூ₄யோ பூ₄யஸ்தரே பருஷாதபே
தபநதநயாபாத₂: பாதும் க₃தா ப₄வதா₃த₃ய: |
சலிதக₃ருதம் ப்ரேக்ஷாமாஸுர்ப₃கம் க₂லு விஸ்ம்ர்ருதம்
க்ஷிதித₄ரக₃ருச்சே₂தே₃ கைலாஸஶைலமிவாபரம் || 7||

7. ஒரு நாள், அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களும், தாங்களும்,
யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றீர்கள். அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டீர்கள். முன்பு இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டும்போது, வெட்ட மறந்த இறக்கையுள்ள மற்றொரு பெரிய மலை போல, கைலாச மலையைப் போலத் தோற்றமளித்தது.

पिबति सलिलं गोपव्राते भवन्तमभिद्रुत:
स किल निगिलन्नग्निप्रख्यं पुनर्द्रुतमुद्वमन् ।
दलयितुमगात्त्रोट्या: कोट्या तदाऽऽशु भवान् विभो
खलजनभिदाचुञ्चुश्चञ्चू प्रगृह्य ददार तम् ॥८॥

பிப₃தி ஸலிலம் கோ₃பவ்ராதே ப₄வந்தமபி₄த்₃ருத:
ஸ கில நிகி₃லந்நக்₃நிப்ரக்₂யம் புநர்த்₃ருதமுத்₃வமந் |
த₃லயிதுமகா₃த்த்ரோட்யா: கோட்யா ததா₃(அ)(அ)ஶு ப₄வாந் விபோ₄
க₂லஜநபி₄தா₃சுஞ்சுஶ்சஞ்சூ ப்ரக்₃ருʼஹ்ய த₃தா₃ர தம் || 8||

8. இடைச்சிறுவர்கள் தண்ணீர் குடிக்கும்போது, அந்தக் கொக்கு தங்களைக் கொத்தியது. அப்போது, தாங்கள் அதற்கு நெருப்பு போல ஆனீர்கள். மறுபடியும் தங்களை விழுங்க வந்தது. தீயவர்களை அழிக்க விருப்பம் கொண்ட தாங்கள், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றீர்கள்.

सपदि सहजां सन्द्रष्टुं वा मृतां खलु पूतना-
मनुजमघमप्यग्रे गत्वा प्रतीक्षितुमेव वा ।
शमननिलयं याते तस्मिन् बके सुमनोगणे
किरति सुमनोवृन्दं वृन्दावनात् गृहमैयथा: ॥९॥

ஸபதி₃ ஸஹஜாம் ஸந்த்₃ரஷ்டும் வா ம்ருதாம் க₂லு பூதநா-
மநுஜமக₄மப்யக்₃ரே க₃த்வா ப்ரதீக்ஷிதுமேவ வா |
ஶமநநிலயம் யாதே தஸ்மிந் ப₃கே ஸுமநோக₃ணே
கிரதி ஸுமநோவ்ருந்த₃ம் வ்ருந்தா₃வநாத் க்₃ருஹமையதா₂: || 9||

9. பகாசுரன் என்ற கொக்கு வடிவில் வந்த அசுரன், தன்னுடைய சகோதரியான பூதனையைக் காண்பதற்கோ, அல்லது இனிமேல் இறக்கப்போகும் அகாசுரனை எதிர்கொள்ளவோ யமலோகம் சென்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். தாங்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினீர்கள்.

ललितमुरलीनादं दूरान्निशम्य वधूजनै-
स्त्वरितमुपगम्यारादारूढमोदमुदीक्षित: ।
जनितजननीनन्दानन्द: समीरणमन्दिर-
प्रथितवसते शौरे दूरीकुरुष्व ममामयान् ॥१०॥

லலிதமுரலீநாத₃ம் தூ₃ராந்நிஶம்ய வதூ₄ஜநை-
ஸ்த்வரிதமுபக₃ம்யாராதா₃ரூட₄மோத₃முதீ₃க்ஷித: |
ஜநிதஜநநீநந்தா₃நந்த₃: ஸமீரணமந்தி₃ர-
ப்ரதி₂தவஸதே ஶௌரே தூ₃ரீகுருஷ்வ மமாமயாந் || 10||

10. குருவாயூரில் குடி கொண்டிருக்கும் கிருஷ்ணா! தங்கள் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் தங்கள் அருகே ஓடி வந்தனர். தந்தை நந்தகோபனுக்கும், தாய் யசோதைக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் தாங்கள், என் நோய்களைப் போக்கி அருள வேண்டும்.

Friday, April 18, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49, ஸ்ரீ நாராயணீயம் 49வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -49
பிருந்தாவனம் செல்ல தீர்மானித்தல்

भवत्प्रभावाविदुरा हि गोपास्तरुप्रपातादिकमत्र गोष्ठे ।
अहेतुमुत्पातगणं विशङ्क्य प्रयातुमन्यत्र मनो वितेनु: ॥१॥

ப₄வத்ப்ரபா₄வாவிது₃ரா ஹி கோ₃பாஸ்தருப்ரபாதாதி₃கமத்ர கோ₃ஷ்டே₂ |
அஹேதுமுத்பாதக₃ணம் விஶங்க்ய ப்ரயாதுமந்யத்ர மநோ விதேநு: || 1||

1. தங்கள் பெருமையை உணராமல், இடையர்கள் மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணி, வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்.

तत्रोपनन्दाभिधगोपवर्यो जगौ भवत्प्रेरणयैव नूनम् ।
इत: प्रतीच्यां विपिनं मनोज्ञं वृन्दावनं नाम विराजतीति ॥२॥

தத்ரோபநந்தா₃பி₄த₄கோ₃பவர்யோ ஜகௌ₃ ப₄வத்ப்ரேரணயைவ நூநம் |
இத: ப்ரதீச்யாம் விபிநம் மநோஜ்ஞம் வ்ருந்தா₃வநம் நாம விராஜதீதி || 2||

2. உபநந்தன் என்ற இடையன், தங்கள் பிரேரணையினால், மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளதாகக் கூறினான்.

बृहद्वनं तत् खलु नन्दमुख्या विधाय गौष्ठीनमथ क्षणेन ।
त्वदन्वितत्वज्जननीनिविष्टगरिष्ठयानानुगता विचेलु: ॥३॥

ப்₃ருஹத்₃வநம் தத் க₂லு நந்த₃முக்₂யா விதா₄ய கௌ₃ஷ்டீ₂நமத₂ க்ஷணேந |
த்வத₃ந்விதத்வஜ்ஜநநீநிவிஷ்டக₃ரிஷ்ட₂யாநாநுக₃தா விசேலு: || 3||

3. நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். யசோதை தங்களைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர்.

अनोमनोज्ञध्वनिधेनुपालीखुरप्रणादान्तरतो वधूभि: ।
भवद्विनोदालपिताक्षराणि प्रपीय नाज्ञायत मार्गदैर्घ्यम् ॥४॥

அநோமநோஜ்ஞத்₄வநிதே₄நுபாலீகு₂ரப்ரணாதா₃ந்தரதோ வதூ₄பி₄: |
ப₄வத்₃விநோதா₃லபிதாக்ஷராணி ப்ரபீய நாஜ்ஞாயத மார்க₃தை₃ர்க்₄யம் || 4||

4. வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், உமது அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை.

निरीक्ष्य वृन्दावनमीश नन्दत्प्रसूनकुन्दप्रमुखद्रुमौघम् ।
अमोदथा: शाद्वलसान्द्रलक्ष्म्या हरिन्मणीकुट्टिमपुष्टशोभम् ॥५॥

நிரீக்ஷ்ய வ்ருந்தா₃வநமீஶ நந்த₃த்ப்ரஸூநகுந்த₃ப்ரமுக₂த்₃ருமௌக₄ம் |
அமோத₃தா₂: ஶாத்₃வலஸாந்த்₃ரலக்ஷ்ம்யா ஹரிந்மணீகுட்டிமபுஷ்டஶோப₄ம் || 5||

5. பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தைக் கண்டீர்கள். பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும் கண்டு ஆனந்தம் அடைந்தீர்கள்.

नवाकनिर्व्यूढनिवासभेदेष्वशेषगोपेषु सुखासितेषु ।
वनश्रियं गोपकिशोरपालीविमिश्रित: पर्यगलोकथास्त्वम् ॥६॥

நவாகநிர்வ்யூட₄நிவாஸபே₄தே₃ஷ்வஶேஷகோ₃பேஷு ஸுகா₂ஸிதேஷு |
வநஶ்ரியம் கோ₃பகிஶோரபாலீவிமிஶ்ரித: பர்யக₃லோகதா₂ஸ்த்வம் || 6||

6. புது வீடுகள் கட்டப்பட்டு இடையர்கள் அங்கு குடியேறினர். தாங்களும் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தீர்கள்.

अरालमार्गागतनिर्मलापां मरालकूजाकृतनर्मलापाम् ।
निरन्तरस्मेरसरोजवक्त्रां कलिन्दकन्यां समलोकयस्त्वम् ॥७॥

அராலமார்கா₃க₃தநிர்மலாபாம் மராலகூஜாக்ருதநர்மலாபாம் |
நிரந்தரஸ்மேரஸரோஜவக்த்ராம் கலிந்த₃கந்யாம் ஸமலோகயஸ்த்வம் || 7||

7. அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடன் வளைந்து செல்லும் சுத்தமான நீரை உடைய களிந்தனின் பெண்ணான யமுனையைக் கண்டீர்கள்.

मयूरकेकाशतलोभनीयं मयूखमालाशबलं मणीनाम् ।
विरिञ्चलोकस्पृशमुच्चशृङ्गैर्गिरिं च गोवर्धनमैक्षथास्त्वम् ॥८॥

மயூரகேகாஶதலோப₄நீயம் மயூக₂மாலாஶப₃லம் மணீநாம் |
விரிஞ்சலோகஸ்ப்ருஶமுச்சஶ்ருங்கை₃ர்கி₃ரிம் ச கோ₃வர்த₄நமைக்ஷதா₂ஸ்த்வம் || 8||

8. அழகாக அகவும் மயில்கள் நிறைந்ததும், பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டு, வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு கூடிய கோவர்த்தனம் என்னும் மலையையும் கண்டீர்கள்.

समं ततो गोपकुमारकैस्त्वं समन्ततो यत्र वनान्तमागा: ।
ततस्ततस्तां कुटिलामपश्य: कलिन्दजां रागवतीमिवैकाम् ॥९॥

ஸமம் ததோ கோ₃பகுமாரகைஸ்த்வம் ஸமந்ததோ யத்ர வநாந்தமாகா₃: |
ததஸ்ததஸ்தாம் குடிலாமபஶ்ய: கலிந்த₃ஜாம் ராக₃வதீமிவைகாம் || 9||

9. தாங்கள் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறீர்களோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தீர்கள்.

तथाविधेऽस्मिन् विपिने पशव्ये समुत्सुको वत्सगणप्रचारे ।
चरन् सरामोऽथ कुमारकैस्त्वं समीरगेहाधिप पाहि रोगात् ॥१०॥

ததா₂விதே₄(அ)ஸ்மிந் விபிநே பஶவ்யே ஸமுத்ஸுகோ வத்ஸக₃ணப்ரசாரே |
சரந் ஸராமோ(அ)த₂ குமாரகைஸ்த்வம் ஸமீரகே₃ஹாதி₄ப பாஹி ரோகா₃த் || 10||

10. பசுக்களுக்கு ஏற்ற அக்காட்டில், பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தீர்கள். குருவாயூரப்பா! என்னைப் பிணியிலிருந்து காக்க வேண்டும்.

Thursday, April 17, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48, ஸ்ரீ நாராயணீயம் 48வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -48
நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

मुदा सुरौघैस्त्वमुदारसम्मदै-
रुदीर्य दामोदर इत्यभिष्टुत: ।
मृदुदर: स्वैरमुलूखले लग-
न्नदूरतो द्वौ ककुभावुदैक्षथा: ॥१॥

முதா₃ ஸுரௌகை₄ஸ்த்வமுதா₃ரஸம்மதை₃-
ருதீ₃ர்ய தா₃மோத₃ர இத்யபி₄ஷ்டுத: |
ம்ருது₃த₃ர: ஸ்வைரமுலூக₂லே லக₃-
ந்நதூ₃ரதோ த்₃வௌ ககுபா₄வுதை₃க்ஷதா₂: || 1||

1. தேவர்கள் தங்களை ஆனந்தமுடன் துதித்து “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்று அழைத்தனர். உரலில் கட்டப்பட்ட நீர் அருகில் இரண்டு மரங்களைக் கண்டீர். 

कुबेरसूनुर्नलकूबराभिध:
परो मणिग्रीव इति प्रथां गत: ।
महेशसेवाधिगतश्रियोन्मदौ
चिरं किल त्वद्विमुखावखेलताम् ॥२॥

குபே₃ரஸூநுர்நலகூப₃ராபி₄த₄:
பரோ மணிக்₃ரீவ இதி ப்ரதா₂ம் க₃த: |
மஹேஶஸேவாதி₄க₃தஶ்ரியோந்மதௌ₃
சிரம் கில த்வத்₃விமுகா₂வகே₂லதாம் || 2||

2. குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்கால், உம்மை மறந்து, உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். 

सुरापगायां किल तौ मदोत्कटौ
सुरापगायद्बहुयौवतावृतौ ।
विवाससौ केलिपरौ स नारदो
भवत्पदैकप्रवणो निरैक्षत ॥३॥

ஸுராபகா₃யாம் கில தௌ மதோ₃த்கடௌ
ஸுராபகா₃யத்₃ப₃ஹுயௌவதாவ்ருதௌ |
விவாஸஸௌ கேலிபரௌ ஸ நாரதோ₃
ப₄வத்பதை₃கப்ரவணோ நிரைக்ஷத || 3||

3. கங்கையில் மது அருந்திவிட்டு அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதைத் தங்கள் பக்தரான நாரதர் பார்த்தார்.

भिया प्रियालोकमुपात्तवाससं
पुरो निरीक्ष्यापि मदान्धचेतसौ ।
इमौ भवद्भक्त्युपशान्तिसिद्धये
मुनिर्जगौ शान्तिमृते कुत: सुखम् ॥४॥

பி₄யா ப்ரியாலோகமுபாத்தவாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மதா₃ந்த₄சேதஸௌ |
இமௌ ப₄வத்₃ப₄க்த்யுபஶாந்திஸித்₃த₄யே
முநிர்ஜகௌ₃ ஶாந்திம்ருதே குத: ஸுக₂ம் || 4||

4. நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். உம்மிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். மன அமைதியில்லாமல் சுகம் எப்படி உண்டாகும்?

युवामवाप्तौ ककुभात्मतां चिरं
हरिं निरीक्ष्याथ पदं स्वमाप्नुतम् ।
इतीरेतौ तौ भवदीक्षणस्पृहां
गतौ व्रजान्ते ककुभौ बभूवतु: ॥५॥

யுவாமவாப்தௌ ககுபா₄த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத₂ பத₃ம் ஸ்வமாப்நுதம் |
இதீரேதௌ தௌ ப₄வதீ₃க்ஷணஸ்ப்ருஹாம்
க₃தௌ வ்ரஜாந்தே ககுபௌ₄ ப₃பூ₄வது: || 5||

5. “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், தங்களைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர். 

अतन्द्रमिन्द्रद्रुयुगं तथाविधं
समेयुषा मन्थरगामिना त्वया ।
तिरायितोलूखलरोधनिर्धुतौ
चिराय जीर्णौ परिपातितौ तरू ॥६॥

அதந்த்₃ரமிந்த்₃ரத்₃ருயுக₃ம் ததா₂வித₄ம்
ஸமேயுஷா மந்த₂ரகா₃மிநா த்வயா |
திராயிதோலூக₂லரோத₄நிர்து₄தௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ || 6||

6. தாங்கள் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்றீர்கள். மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு சென்றீர்கள். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. 

अभाजि शाखिद्वितयं यदा त्वया
तदैव तद्गर्भतलान्निरेयुषा ।
महात्विषा यक्षयुगेन तत्क्षणा-
दभाजि गोविन्द भवानपि स्तवै: ॥७॥

அபா₄ஜி ஶாகி₂த்₃விதயம் யதா₃ த்வயா
ததை₃வ தத்₃க₃ர்ப₄தலாந்நிரேயுஷா |
மஹாத்விஷா யக்ஷயுகே₃ந தத்க்ஷணா-
த₃பா₄ஜி கோ₃விந்த₃ ப₄வாநபி ஸ்தவை: || 7||

7. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். தங்களைத் துதித்து நமஸ்கரித்தனர்.

इहान्यभक्तोऽपि समेष्यति क्रमात्
भवन्तमेतौ खलु रुद्रसेवकौ ।
मुनिप्रसादाद्भव्दङ्घ्रिमागतौ
गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम् ॥८॥

இஹாந்யப₄க்தோ(அ)பி ஸமேஷ்யதி க்ரமாத்
ப₄வந்தமேதௌ க₂லு ருத்₃ரஸேவகௌ |
முநிப்ரஸாதா₃த்₃ப₄வ்த₃ங்க்₄ரிமாக₃தௌ
க₃தௌ வ்ருணாநௌ க₂லு ப₄க்திமுத்தமாம் || 8||

8. இவ்வுலகில், மற்ற தெய்வங்களைப் பூஜிக்கிறவனும், இறுதியில் உம்மையே அடைகிறான். நாரதரின் ஆசியால் தங்களைத் தொழுது, தங்களிடம் பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர். 

ततस्तरूद्दारणदारुणारव-
प्रकम्पिसम्पातिनि गोपमण्डले ।
विलज्जितत्वज्जननीमुखेक्षिणा
व्यमोक्षि नन्देन भवान् विमोक्षद: ॥९॥

ததஸ்தரூத்₃தா₃ரணதா₃ருணாரவ-
ப்ரகம்பிஸம்பாதிநி கோ₃பமண்ட₃லே |
விலஜ்ஜிதத்வஜ்ஜநநீமுகே₂க்ஷிணா
வ்யமோக்ஷி நந்தே₃ந ப₄வாந் விமோக்ஷத₃: || 9||

9. மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். வெட்கமடைந்த யசோதையின் முகத்தைக் கண்ட நந்தகோபர், பிறவித் தளைகளில் இருந்து அனைவரையும் விடுவிக்கும் தங்களை, கயிற்றிலிருந்து விடுவித்தார்.

महीरुहोर्मध्यगतो बतार्भको
हरे: प्रभावादपरिक्षतोऽधुना ।
इति ब्रुवाणैर्गमितो गृहं भवान्
मरुत्पुराधीश्वर पाहि मां गदात् ॥१०॥

மஹீருஹோர்மத்₄யக₃தோ ப₃தார்ப₄கோ
ஹரே: ப்ரபா₄வாத₃பரிக்ஷதோ(அ)து₄நா |
இதி ப்₃ருவாணைர்க₃மிதோ க்₃ருஹம் ப₄வாந்
மருத்புராதீ₄ஶ்வர பாஹி மாம் க₃தா₃த் || 10||

10. “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் தங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். குருவாயூரப்பா! நோய்களில் இருந்து என்னைக் காக்கவேண்டும். 

Wednesday, April 16, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 47, ஸ்ரீ நாராயணீயம் 47வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -47
யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத்தல்

एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् ।
स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ ॥१॥

ஏகதா₃ த₃தி₄விமாத₂காரிணீம் மாதரம் ஸமுபஸேதி₃வாந் ப₄வாந் |
ஸ்தந்யலோலுபதயா நிவாரயந்நங்கமேத்ய பபிவாந் பயோத₄ரௌ || 1||

1. யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தபொழுது, பால் குடிக்க ஆசை ஏற்பட்டதால், தாங்கள் அவள் மடியின்மீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தீர்கள். 

अर्धपीतकुचकुड्मले त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे ।
दुग्धमीश दहने परिस्रुतं धर्तुमाशु जननी जगाम ते ॥२॥

அர்த₄பீதகுசகுட்₃மலே த்வயி ஸ்நிக்₃த₄ஹாஸமது₄ராநநாம்பு₃ஜே |
து₃க்₃த₄மீஶ த₃ஹநே பரிஸ்ருதம் த₄ர்துமாஶு ஜநநீ ஜகா₃ம தே || 2||

2. தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் நீர் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை உம்மை விட்டுச் சென்றாள். 

सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभारपरिभूतचेतसा।
मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया ॥३॥

ஸாமிபீதரஸப₄ங்க₃ஸங்க₃தக்ரோத₄பா₄ரபரிபூ₄தசேதஸா|
மந்த₂த₃ண்ட₃முபக்₃ருஹ்ய பாடிதம் ஹந்த தே₃வ த₃தி₄பா₄ஜநம் த்வயா || 3||

3. பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், தாங்கள் கோபம் கொண்டு மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தீர்கள். 

उच्चलद्ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समाद्रुता ।
त्वद्यशोविसरवद्ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ ॥४॥

உச்சலத்₃த்₄வநிதமுச்சகைஸ்ததா₃ ஸந்நிஶம்ய ஜநநீ ஸமாத்₃ருதா |
த்வத்₃யஶோவிஸரவத்₃த₃த₃ர்ஶ ஸா ஸத்₃ய ஏவ த₃தி₄ விஸ்த்ருதம் க்ஷிதௌ || 4||

4. பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, உலகெங்கும் பரவிய உமது புகழைப் போல், கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள்.

वेदमार्गपरिमार्गितं रुषा त्वमवीक्ष्य परिमार्गयन्त्यसौ ।
सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे ॥५॥

வேத₃மார்க₃பரிமார்கி₃தம் ருஷா த்வமவீக்ஷ்ய பரிமார்க₃யந்த்யஸௌ |
ஸந்த₃த₃ர்ஶ ஸுக்ருதிந்யுலூக₂லே தீ₃யமாநநவநீதமோதவே || 5||

5. முனிவர்களால் வேதமார்க்கமாய்த் தேடப்படும் உம்மைக் காணாமல் யசோதை தேடினாள். பிறகு, உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்த தங்களைக் கண்டாள். 

त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा ।
रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे ॥६॥

த்வாம் ப்ரக்₃ருஹ்ய ப₃த பீ₄திபா₄வநாபா₄ஸுராநநஸரோஜமாஶு ஸா |
ரோஷரூஷிதமுகீ₂ ஸகீ₂புரோ ப₃ந்த₄நாய ரஶநாமுபாத₃தே₃ || 6||

6. பயத்தைப் பிரதிபலிக்கும் முகத்தாமரையை உடைய தங்களைக் கையில் பிடித்து, கோபத்துடன் உம்மைக் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள். 

बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छती ।
सा नियुज्य रशनागुणान् बहून् द्व्यङ्गुलोनमखिलं किलैक्षत ॥७॥

ப₃ந்து₄மிச்ச₂தி யமேவ ஸஜ்ஜநஸ்தம் ப₄வந்தமயி ப₃ந்து₄மிச்ச₂தீ |
ஸா நியுஜ்ய ரஶநாகு₃ணாந் ப₃ஹூந் த்₃வ்யங்கு₃லோநமகி₂லம் கிலைக்ஷத || 7||

7. பந்தங்களாகிற கட்டுக்களை அறுக்கும் உம்மைக் கயிற்றால் கட்ட நினைத்தாள். ஆச்சர்யம்! பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், உம்மைக் கட்ட இரண்டங்குலம் கயிறு குறைவாக இருக்கக் கண்டாள்.

विस्मितोत्स्मितसखीजनेक्षितां स्विन्नसन्नवपुषं निरीक्ष्य ताम् ।
नित्यमुक्तवपुरप्यहो हरे बन्धमेव कृपयाऽन्वमन्यथा: ॥८॥

விஸ்மிதோத்ஸ்மிதஸகீ₂ஜநேக்ஷிதாம் ஸ்விந்நஸந்நவபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்யமுக்தவபுரப்யஹோ ஹரே ப₃ந்த₄மேவ க்ருபயா(அ)ந்வமந்யதா₂: || 8||

8. தாயின் தோழிகள் பரிகாசமாய்ப் பார்ப்பதையும், தாயின் உடல் வியர்ப்பதையும் கண்ட பற்றற்றவரான தாங்கள், கருணை கொண்டு கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டீர்கள். 

स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा।
प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिथा: ॥९॥

ஸ்தீ₂யதாம் சிரமுலூக₂லே க₂லேத்யாக₃தா ப₄வநமேவ ஸா யதா₃|
ப்ராகு₃லூக₂லபி₃லாந்தரே ததா₃ ஸர்பிரர்பிதமத₃ந்நவாஸ்தி₂தா₂: || 9||

9. “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி யசோதை வீட்டிற்குள் சென்றாள். அவன் சென்றவுடன், முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினீர்கள்.

यद्यपाशसुगमो विभो भवान् संयत: किमु सपाशयाऽनया ।
एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात् ॥१०॥

யத்₃யபாஶஸுக₃மோ விபோ₄ ப₄வாந் ஸம்யத: கிமு ஸபாஶயா(அ)நயா |
ஏவமாதி₃ தி₃விஜைரபி₄ஷ்டுதோ வாதநாத₂ பரிபாஹி மாம் க₃தா₃த் || 10||

10. பிரபுவே! பாசமற்றவர்களால் சுலபமாக அடையக்கூடிய தாங்கள், பாசம் உள்ள யசோதையால் ஏன் கட்டப்பட்டீர்கள்? தேவர்களால் துதிக்கப்படும் குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்களிலிருந்து காப்பாற்றி அருள் புரிவீராக.

Tuesday, April 15, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 46, ஸ்ரீ நாராயணீயம் 46வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -46
கண்ணன் வாயில் யசோதை பிரபஞ்சம் பார்த்தது 

अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये ।
परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी ॥१॥

அயி தே₃வ புரா கில த்வயி ஸ்வயமுத்தாநஶயே ஸ்தநந்த₄யே |
பரிஜ்ரும்ப₄ணதோ வ்யபாவ்ருதே வத₃நே விஶ்வமசஷ்ட வல்லவீ || 1||

1. முன்பு ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டீர்கள். அப்போது, யசோதை தங்கள் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள்.

पुनरप्यथ बालकै: समं त्वयि लीलानिरते जगत्पते ।
फलसञ्चयवञ्चनक्रुधा तव मृद्भोजनमूचुरर्भका: ॥२॥

புநரப்யத₂ பா₃லகை: ஸமம் த்வயி லீலாநிரதே ஜக₃த்பதே |
ப₂லஸஞ்சயவஞ்சநக்ருதா₄ தவ ம்ருத்₃போ₄ஜநமூசுரர்ப₄கா: || 2||

2. உலகத்திற்கெல்லாம் தலைவனே! இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினீர்கள். அதனால், கோபம் கொண்ட அவர்கள், தாங்கள் மண் தின்றதாகக் கூறினர்.

अयि ते प्रलयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिण: ।
मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा ॥३॥

அயி தே ப்ரலயாவதௌ₄ விபோ₄ க்ஷிதிதோயாதி₃ஸமஸ்தப₄க்ஷிண: |
ம்ருது₃பாஶநதோ ருஜா ப₄வேதி₃தி பீ₄தா ஜநநீ சுகோப ஸா || 3||

3. பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் தாங்கள் உண்கிறீர்கள். அப்படிப்பட்ட தங்களுக்கு, மண் தின்றதால் வியாதி எப்படி வரும்? யசோதை, மண் தின்றதால் தங்களுக்கு வியாதி வரும் என்று பயந்து கோபம் கொண்டாள்.  

अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता ।
इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन् ॥४॥

அயி து₃ர்விநயாத்மக த்வயா கிமு ம்ருத்ஸா ப₃த வத்ஸ ப₄க்ஷிதா |
இதி மாத்ருகி₃ரம் சிரம் விபோ₄ விததா₂ம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் || 4||

4. “அடங்காதவனே! மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். தாங்கள் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தீர்கள்.

अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् ।
इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारय: ॥५॥

அயி தே ஸகலைர்விநிஶ்சிதே விமதிஶ்சேத்₃வத₃நம் விதா₃ர்யதாம் |
இதி மாத்ருவிப₄ர்த்ஸிதோ முக₂ம் விகஸத்பத்₃மநிப₄ம் வ்யதா₃ரய: || 5||

5. “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தங்கள் திருவாயைத் திறந்து காட்டினீர்.

अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव ।
पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृश: ॥६॥

அபி ம்ருல்லவத₃ர்ஶநோத்ஸுகாம் ஜநநீம் தாம் ப₃ஹு தர்பயந்நிவ |
ப்ருதி₂வீம் நிகி₂லாம் ந கேவலம் பு₄வநாந்யப்யகி₂லாந்யதீ₃த்₃ருஶ: || 6||

6. உமது வாயில் சிறிதேனும் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தீர்கள்.

कुहचिद्वनमम्बुधि: क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् ।
मनुजा दनुजा: क्वचित् सुरा ददृशे किं न तदा त्वदानने ॥७॥

குஹசித்₃வநமம்பு₃தி₄: க்வசித் க்வசித₃ப்₄ரம் குஹசித்₃ரஸாதலம் |
மநுஜா த₃நுஜா: க்வசித் ஸுரா த₃த்₃ருஶே கிம்ʼ ந ததா₃ த்வதா₃நநே || 7||

7. உமது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள். 

कलशाम्बुधिशायिनं पुन: परवैकुण्ठपदाधिवासिनम् ।
स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे ॥८॥

கலஶாம்பு₃தி₄ஶாயிநம் புந: பரவைகுண்ட₂பதா₃தி₄வாஸிநம் |
ஸ்வபுரஶ்ச நிஜார்ப₄காத்மகம் கதிதா₄ த்வாம் ந த₃த₃ர்ஶ ஸா முகே₂ || 8||

8. உம் வாயில், உம்மைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உம்முடைய வாயில் எதைத்தான் காணவில்லை? எத்தனை விதமாகத் தான் காணவில்லை? 

विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधानन: ।
अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत् ॥९॥

விகஸத்₃பு₄வநே முகோ₂த₃ரே நநு பூ₄யோ(அ)பி ததா₂விதா₄நந: |
அநயா ஸ்பு₂டமீக்ஷிதோ ப₄வாநநவஸ்தா₂ம் ஜக₃தாம் ப₃தாதநோத் || 9||

9. உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் தங்களையும், தங்கள் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள். 

धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् ।
स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम् ॥१०॥

த்₄ருததத்த்வதி₄யம் ததா₃ க்ஷணம் ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயந் |
ஸ்தநமம்ப₃ தி₃ஶேத்யுபாஸஜந் ப₄க₃வந்நத்₃பு₄தபா₃ல பாஹி மாம் || 10||


10. தாங்கள் பரமாத்மா என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மறுபடி அன்பினால், அவள் மகன் என்ற நினைவு வரும்படிச் செய்தீர்கள். எனக்குப் பால் கொடு என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்தீர்கள். அப்படிப்பட்ட அதிசயமான, ஆச்சர்யமான குழந்தையே! என்னைக் காப்பாற்றுவீராக.

Monday, April 14, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45, ஸ்ரீ நாராயணீயம் 45வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam
த³ஶகம் -45
பால லீலை

अयि सबल मुरारे पाणिजानुप्रचारै:
किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ ।
चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा-
श्रवणकुतुकभाजौ चेरतुश्चारुवेगात् ॥१॥

அயி ஸப₃ல முராரே பாணிஜாநுப்ரசாரை:
கிமபி ப₄வநபா₄கா₃ந் பூ₄ஷயந்தௌ ப₄வந்தௌ |
சலிதசரணகஞ்ஜௌ மஞ்ஜுமஞ்ஜீரஶிஞ்ஜா-
ஶ்ரவணகுதுகபா₄ஜௌ சேரதுஶ்சாருவேகா₃த் || 1||

1. பலராமனுடன் இருக்கும் முராரியே! நீங்கள் இருவரும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாடினீர்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தீர்கள்.

मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ
वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ ।
भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ
मतिमहरतमुच्चै: पश्यतां विश्वनृणाम् ॥२॥

ம்ருது₃ ம்ருது₃ விஹஸந்தாவுந்மிஷத்₃த₃ந்தவந்தௌ
வத₃நபதிதகேஶௌ த்₃ருஶ்யபாதா₃ப்₃ஜதே₃ஶௌ |
பு₄ஜக₃லிதகராந்தவ்யாலக₃த்கங்கணாங்கௌ
மதிமஹரதமுச்சை: பஶ்யதாம் விஶ்வந்ருணாம் || 2||

2. இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினீர்கள். கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டீர்கள்.

अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे
किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ ।
वलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी
किमिव न विदधाथे कौतुकं वासुदेव ॥३॥

அநுஸரதி ஜநௌகே₄ கௌதுகவ்யாகுலாக்ஷே
கிமபி க்ருதநிநாத₃ம் வ்யாஹஸந்தௌ த்₃ரவந்தௌ |
வலிதவத₃நபத்₃மம் ப்ருஷ்ட₂தோ த₃த்தத்₃ருஷ்டீ
கிமிவ ந வித₃தா₄தே₂ கௌதுகம் வாஸுதே₃வ || 3||

3. கிருஷ்ணா! அனைவரும் ஆசை கொண்டு தங்களைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினீர்கள். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தீர்கள்.

द्रुतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ
दिवि मुनिभिरपङ्कै: सस्मितं वन्द्यमानौ ।
द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ
मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च ॥४॥

த்₃ருதக₃திஷு பதந்தாவுத்தி₂தௌ லிப்தபங்கௌ
தி₃வி முநிபி₄ரபங்கை: ஸஸ்மிதம் வந்த்₃யமாநௌ |
த்₃ருதமத₂ ஜநநீப்₄யாம் ஸாநுகம்பம் க்₃ருஹீதௌ
முஹுரபி பரிரப்₃தௌ₄ த்₃ராக்₃யுவாம் சும்பி₃தௌ ச || 4||

4. நீங்கள் இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டீர்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள்.

स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं
तरलमति यशोदा स्तन्यदा धन्यधन्या ।
कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते
दशनमुकुलहृद्यं वीक्ष्य वक्त्रं जहर्ष ॥५॥

ஸ்நுதகுசப₄ரமங்கே தா₄ரயந்தீ ப₄வந்தம்
தரலமதி யஶோதா₃ ஸ்தந்யதா₃ த₄ந்யத₄ந்யா |
கபடபஶுப மத்₄யே முக்₃த₄ஹாஸாங்குரம் தே
த₃ஶநமுகுலஹ்ருத்₃யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ || 5||

5. யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், தங்களை எடுத்துப் பாலூட்டினாள். மிகவும் பேறு பெற்றவளானாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய தங்களது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள்.

तदनुचरणचारी दारकैस्साकमारा-
न्निलयततिषु खेलन् बालचापल्यशाली ।
भवनशुकविडालान् वत्सकांश्चानुधावन्
कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभू: ॥६॥

தத₃நுசரணசாரீ தா₃ரகைஸ்ஸாகமாரா-
ந்நிலயததிஷு கே₂லந் பா₃லசாபல்யஶாலீ |
ப₄வநஶுகவிடா₃லாந் வத்ஸகாம்ஶ்சாநுதா₄வந்
கத₂மபி க்ருதஹாஸைர்கோ₃பகைர்வாரிதோ(அ)பூ₄: || 6||

6. பிறகு, தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினீர்கள். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினீர்கள். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு தங்களைத் தடுத்தனர்.

हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो
विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्य: ।
विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या
मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन् ॥७॥

ஹலத₄ரஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவஶபதிதநேத்ராஸ்தத்ர தத்ரைவ கோ₃ப்ய: |
விக₃லிதக்₃ருஹக்ருத்யா விஸ்ம்ருதாபத்யப்₄ருத்யா
முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸந் || 7||

7. முரன் என்ற அசுரனைக் கொன்றவனே! பலராமனுடன் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் தங்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து உம்மையே நினைத்து, பரவசமாக ஆனார்கள்.

प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन्
कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् ।
सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन्
क्वचन नवविपक्वं दुग्धमप्यापिबस्त्वम् ॥८॥

ப்ரதிநவநவநீதம் கோ₃பிகாத₃த்தமிச்ச₂ந்
கலபத₃முபகா₃யந் கோமலம் க்வாபி ந்ருʼத்யந் |
ஸத₃யயுவதிலோகைரர்பிதம் ஸர்பிரஶ்நந்
க்வசந நவவிபக்வம் து₃க்₃த₄மப்யாபிப₃ஸ்த்வம் || 8||

8. கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினீர்கள். அழகாய் ஆடினீர்கள். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டீர்கள். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தீர்கள்.

मम खलु बलिगेहे याचनं जातमास्ता-
मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे ।
इति विहितमति: किं देव सन्त्यज्य याच्ञां
दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन ॥९॥

மம க₂லு ப₃லிகே₃ஹே யாசநம் ஜாதமாஸ்தா-
மிஹ புநரப₃லாநாமக்₃ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி: கிம் தே₃வ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
த₃தி₄க்₄ருதமஹரஸ்த்வம் சாருணா சோரணேந || 9||

9. கிருஷ்ணா! வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவரைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினீர்கள்.

तव दधिघृतमोषे घोषयोषाजनाना-
मभजत हृदि रोषो नावकाशं न शोक: ।
हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं
स मम शमय रोगान् वातगेहाधिनाथ ॥१०॥

தவ த₃தி₄க்₄ருதமோஷே கோ₄ஷயோஷாஜநாநா-
மப₄ஜத ஹ்ருதி₃ ரோஷோ நாவகாஶம் ந ஶோக: |
ஹ்ருத₃யமபி முஷித்வா ஹர்ஷஸிந்தௌ₄ ந்யதா₄ஸ்த்வம்
ஸ மம ஶமய ரோகா₃ந் வாதகே₃ஹாதி₄நாத₂ || 10||

10. கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை நீங்கள் திருடினாலும், இடைப்பெண்கள் தங்களிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. அவர்கள் மனதையும் திருடி, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினீர். அவ்விதமான குருவாயூரப்பா! என்னுடைய வாதநோயைப் போக்குவீராக.

ஸ்லோகங்கள் 11, 12 அனந்தராம தீக்ஷிதர் எழுதிய உரையில் இல்லை. 
शाखाग्रे विधुं विलोक्य फलमित्य्म्बां च तातं मुहु:
संप्रार्थ्याथ तदा तदीयवचसा प्रोत्क्षिप्तबाहौ त्वयि।
चित्रं देव शशी स ते कर्मगात् किं ब्रूमहे संपत:
ज्योतिर्मण्डलपूरिताखिलवपु: प्रागा विराड्रूपताम् ॥ ११॥

ஶாகா₂க்₃ரே விது₄ம் விலோக்ய ப₂லமித்ய்ம்பா₃ம் ச தாதம் முஹு:
ஸம்ப்ரார்த்₂யாத₂ ததா₃ ததீ₃யவசஸா ப்ரோத்க்ஷிப்தபா₃ஹௌ த்வயி|
சித்ரம் தே₃வ ஶஶீ ஸ தே கர்மகா₃த் கிம் ப்₃ரூமஹே ஸம்பத:
ஜ்யோதிர்மண்ட₃லபூரிதாகி₂லவபு: ப்ராகா₃ விராட்₃ரூபதாம் ||  11||

11. ஒரு நாள்,  மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து  தங்கள் பெற்றோரிடம் கேட்டீர்கள். அவர்கள் வேடிக்கையாக  நீயே கூப்பிடு, அது வரும் என்றார்கள். நீங்கள் கூப்பிட, நிலவு நேராக தங்களின் கைகளில் வந்தது. தாங்கள் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினீர்

किं किं बतेदमिति संभ्रम भाजमेनं
ब्रह्मार्णवे क्षणममुं परिमज्ज्य तातम् ।
मायां पुनस्तनय-मोहमयीं वितन्वन्
आनन्दचिन्मय जगन्मय पाहि रोगात् ॥१२॥

கிம் கிம் ப₃தேத₃மிதி ஸம்ப்₄ரம பா₄ஜமேநம்
ப்₃ரஹ்மார்ணவே க்ஷணமமும் பரிமஜ்ஜ்ய தாதம் |
மாயாம் புநஸ்தநய-மோஹமயீம் விதந்வந்
ஆநந்த₃சிந்மய ஜக₃ந்மய பாஹி ரோகா₃த் || 12||

12. திகைப்புடன் தங்கள் தந்தை நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால் தாங்கள் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினீர்கள். தேவனே! நோய்களில் இருந்து என்னைக் காப்பாற்றும்.