போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான்.  கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறி தர மறுத்தான்.  கொள்ளைக்காரன் அலட்சியமாக,  “ குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன ? என்று  கூறிக் கொண்டே கிராமவாசியின்  கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான். தேங்காய்கள் வெளியே சிதறின. அதிசயப்படும்படியாக  ஒவ்வொரு தேங்காய்க்கும்  கொம்பு  முளைத்திருந்தது!  திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம்  மன்னிப்பு கேட்டு, அந்த  கிராமவாசியைப் போக விட்டான். கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில்  காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள், கொம்புகள் உள்ள அந்தத் தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில்  கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். 

No comments:
Post a Comment