“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஆகிவிட்ட பின்பும், சொந்த ஊருக்குச் செல்லும்போது கிடைக்கும் பரவசத்திற்கு நிகர் இல்லை.
சில பெரியோர்கள் "உங்க பூர்வீகம் என்ன?" என்று கேட்பதைப் பார்த்திருப்போம். ஒருவர் தாய்நாடு, சொந்த மண், சொந்த ஊர், பூர்வீகம்.. என்று சொல்லும்போது அதில்தான் எத்தனை பற்றுதல்? அந்த வார்த்தைகளில் அவர்களது பற்றுதல் வெளிப்படுகிறது. அது ஏன்? உங்க பூர்வீகம் எந்த ஊர் ? என்ன பெருமாள்? என்று யாராவது கேட்கும்பொழுது, "எங்க பூர்வீகம் ... ஊர் .... பெருமாள் " என்று சொல்லும்போதுதான் எவ்வளவு பெருமிதம்?
ஏன் இந்த இன்பப் பெருமிதம்? யோசித்துப் பார்த்தபொழுது , நமது முன்னோர்கள், முப்பாட்டனார், பாட்டனார், தந்தை, தாய் என்று அனைவரும் வாழ்ந்த ஊர், வணங்கிய பெருமாள் என்ற உணர்வு நம்மை அறியாமலே வருவதால்தான் என்று தோன்றுகிறது.
இனி,எங்கள் பூர்வீகம்,தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றிய விவரங்கள்:
தென்சிறுவளூர் - ஸ்ரோதபுரி என்றும், நவமால் சிறுவளூர் என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் : ஸ்ரீ அழகியமணவாளப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார். உற்சவர் :புஷ்பவல்லி தாயார் ஸமேத தேஹளீச பெருமாள்.
இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ளது. சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள்.
இந்த கிராமம் மிகவும் புராதனமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரிய முறைப்படி அமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மண்டலாடீஸ்வரர் என்ற சிவன் கோயிலும், சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காளி கோயிலும், சிவன் கோயிலுக்கு மேற்கே பெரிய நல்ல தண்ணீர் குளமும், அதற்கும் மேற்கே வைஷ்ணவ அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது தவிர எல்லை தேவதைகள், எல்லையம்மன், அதிஉக்ரகாளியம்மன் ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு , துருக்கிய முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூலவருக்கு கற்சுவர் எழுப்பி, பின் உற்சவ மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகனே ரங்கநாதருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தபடியால்தான் நமக்கு இன்று "ஸ்ரீ அபீதி ஸ்தவம்" என்ற ஸ்தோத்ர பொக்கிஷம் கிடைத்துள்ளது. அதே போல, திருக்கோவிலூரில் உள்ள உற்சவ மூர்த்திகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்ற பெரியோர்கள், அங்கு இருந்த உற்சவ மூர்த்தியான தேஹளீச பெருமாளை, ஸ்ரோதபுரி என்று அழைக்கப்பட்ட நம் தென்சிறுவளூரில் எழுந்தருளப் பண்ணினார்கள்.
அங்கிருந்த தேசிக சம்பிரதாய வைஷ்ணவர்கள், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாளையும், உற்சவர், ஸ்ரீ தேஹளீசரையும் மிகுந்த பக்தி ஸ்ரத்தையோடு ஆராதித்து வந்தார்கள். அதைப்பார்த்து மகிழ்ந்த, சிறந்த விஷ்ணு பக்தரும், ஸ்ரீ வேதாந்த தேசிகனின் சிஷ்யரும், செஞ்சியை ஆண்டவருமான கோபண்ணா, அந்த கிராமத்தை அவர்களுக்கே இனாமாக வழங்கினார்.
அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா தேசிகாச்சாரியார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
கோயிலின் முன்பாக கல்தூண், அதாவது கல்லினால் செய்யப்பட்ட ஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதில் மிக நேர்த்தியாக கருடனும், ஆஞ்சநேயரும் வீற்றிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஆஞ்சநேயரும், பெருமாளைப்பார்த்தபடி கருடனும் மிகுந்த அழகோடு விளங்குகிறார்கள். திருக்கார்த்திகையன்று சொக்கப்பானை ஏற்றியிருப்பார்கள் போலும்!!!
கோயிலின்உள்ளே கருடன், அனைத்து பெருமாள் கோயில்களிலும் உள்ளபடியே, பெருமாளைப்பார்த்தபடி கைகூப்பியவாறு இருக்கிறார். பெருமாள் ஸன்னிதிக்கு முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் இருவரும் நிற்கின்றனர். அதையொட்டி, பக்கத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸன்னிதி உள்ளது.
கர்ப்பக்ருஹத்தில், பெருமாள் பெயருக்கு ஏற்றாற்போல் நின்ற திருக்கோலத்தில் சிரித்த முகத்துடன் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய், மிக அழகாக, இருக்கிறார். ஹேமாம்புஜ நாயகி ஸமேத வரதராஜ பெருமாள் உற்சவமுர்த்தியாக திருவீதி புறப்பாடு, மற்றும் உற்சவங்கள் கண்டருளுகிறார். புஷ்பாலயா ஸமேத தேஹளீஸ பெருமாளும், கையில் நவநீதத்துடன் நவநீத கிருஷ்ணரும், மஹாலக்ஷ்மியும், ஸ்வாமிதேசிகனும், உற்சவமூர்த்திகளாக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, அதிசுந்தரமாகக் காக்ஷி கொடுக்கிறார்கள்.
தென்சிறுவளூர் பெருமாள் அபரிமிதமான சக்தி படைத்தவர். தெய்வ குற்றம் நீங்கவும், முன்னோர்கள் சாபம் விலகவும், திருமண தடை விலகி விவாஹம் நடைபெறவும் , நல்ல படிப்பு கிடைக்கவும், சகல தொல்லைகளும் நீங்கவும், கடன் தொல்லை, வியாதி நீங்கவும், பெருமாளிடம் பிரார்த்தித்து பலனடைந்தோர் ஏராளம். தென்சிறுவளூரைப் பூர்வீகமாகக் கொண்ட நல்ல உள்ளம் படைத்த சிலரால் இத்திருக்கோயில் நல்ல முறையில் சீர்திருத்தப்பட்டு, 26 -8 -2007 அன்று ஸம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு, ஒரு மண்டபமும், திரு மடப்பள்ளியும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய ஒரு கிணறும் உள்ளது. அது தவிர, தங்கியிருந்து ஸேவிக்க விரும்புபவர்கள் சௌகர்யத்துக்கென ஒரு சிறிய ஹாலும் கட்டிவிடப்பட்டுள்ளது.
ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் மங்களாஶாஸனம் செய்து அனுக்ரஹித்தாயிற்று.
தென்சிறுவளூர் பெருமாளை ஸேவித்து பிரார்த்திக்கும் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்பது திண்ணம்.
திருக்கோயில் முகவரி :
தென்சிறுவளூர் அக்ரஹாரம், தென்சிறுவளூர்(V&P), வானூர் வட்டம் - 604 102.
இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழி விவரம் :
சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள். தென்சிறுவளூர் என்று யாரும் சொல்வதில்லை.
திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில், கொந்தமூர் என்ற இடத்தில் இறங்கி, குன்னம் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டிவனம்-குன்னம் மார்க்கத்தில் டவுன் பஸ் எண் 14 மற்றும் பாண்டி - குன்னம் மார்க்கத்தில் பஸ் எண் 226 , இந்த ஊர் வழியாகக் குன்னம் செல்கிறது. தென்சிறுவளூரில் இறங்க வேண்டும்.
சென்ற பதிவில் "கண் படைத்த பயன்" வரிசையில் கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி திருமஞ்சனம் பற்றி எழுதி இருந்தேன். படம் எடுத்துப்போட்டிருந்த "பேனர் " படிக்க முடியவில்லை என சிலர் சொன்னதால், அடியேன் இங்கு அனைவரின் உபயோகத்துக்காகவும் பாராயணத்துக்காகவும் தமிழில் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன். எனது ஸ்நேஹிதி ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளாள். அதையும் இங்கு வெளியிட்டுள்ளேன்.
ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) கோவிலில் கட்டியிருக்கும் தொங்கு பலகையில் எழுதியிருப்பதை இங்கு தமிழில் அப்படியே எழுதியுள்ளேன்.
பெருமாளின் அமைப்பு:
ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அனந்த பீடம், யோக பீடம், ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத ஹஸ்தத்துடன் குளிர கடாக்ஷிக்கும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த ந்ருஸிம்ஹனுக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது. " அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக ஸேவை சாதிக்கிறார்". மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதைக் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.
இங்கு எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நக்ஷத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.
திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராஹு, நாக்கில் சனி பகவான், ஆக நவக்ரஹங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால் இது ஒரு பரிஹார ஸ்தலமாக விளங்குகிறது.ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி ஸ்லோகம்
ஸத்ய ஞான ஸுக ஸ்வரூப மமலம் க்ஷீராப்தி மத்யே ஸ்திதம் | யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம் || த்ர்யக்ஷம் சக்ர பினாக ஸாபயகரான் பிப்ராண மர்க்கச்சவிம் | சத்ரீபூத பணீந்த்ரமிந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே || நவக்ரஹ தோஷங்கள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தக்கவாறு பாராயணம் செய்துகொண்டு ஸ்ரீ ந்ருஸிம்ஹன் சந்நிதியை வலம் வர தோஷ நிவ்ருத்தி அடைந்து ஸகல ஸௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
It is a great pleasure for me to share Lord Sri Viswaroopa Lakshmi Narasimhar's picture. By the grace of the Lord, I had a darshan of HIM in Kattavakkam, and also had a chance to see the Thirumanjanam (abishegam) of the LORD.
The Lord is gigantic and has an amazingly smiling face. The Lord is seated (VEETRIRUNDHA THIRUKOLAM) with his consort, Goddess Lakshmi on His left lap. She is embracing Him with Her right hand and holding a lotus flower on Her left hand. The Lord holds Sudharshana Chakra on His back left hand and bow-and-arrow on His back right hand. This indicates His intention of holding the bow and arrow in His subsequent incarnation as Lord Rama. His forehands show Abhaya Hastham (indicating that the Lord will come to the rescue of the devotees)and Varada Hastham(pointing towards his feet conveying to the devotees that the Lord will come to the rescue of only those who fall at his feet, i.e., total surrender)postures. He has three eyes, the third one is in His forehead and the Adhiseshaabove His head is with seven hoods. Each hood has a crowning and sparkling Nagarathnam above it.
Visit this holy temple with your family, friends and relatives and get Perumal's blessings.
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! ப்ரபோ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத் தருவீராக.
ஹனுமான் சாலீஸா
பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன். நான்கு கனிகள்: 1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.
உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.
துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.