Wednesday, August 29, 2012

திருவிண்ணகர் / ஒப்பிலியப்பனுடன் ஒப்பில்லா ஒரு நாள் / ஒப்பிலியப்பன் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-7


தொகுப்பு சுற்றுப்பயணம் (package tour) பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறோம். இது தொகுப்பு தரிசனம் (package of darshans).

அதென்ன தொகுப்பு தரிசனம்?

என் அம்மா, வெகு வருடங்களுக்கு முன்பு உப்பிலியப்பனுக்கு பெரிய திருமஞ்சனம் வேண்டிக் கொண்டிருந்தார். அவருக்குக் குடும்பத்தில் எல்லாரும் ஸேவிக்க வேண்டும் என்று ஆசை. ரொம்ப வருடங்கள் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக சென்ற வருடம் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில், மதுரகவியாழ்வார் திரு நக்ஷத்திரத்தன்று ஏற்பாடாயிற்று.


வந்த உடனேயே பதிவிட நினைத்தேன். அனைத்தும் அவன் திருவுள்ளப்படி தானே நடக்கிறது? மிகவும் தாமதமாக இன்று பதிவிட்டதும் நல்லதற்குத் தான். ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு ஆவணி மாதத்தில் ‘பவித்ரோற்சவம்’ நடைபெறுகிறது.  இந்த விழா, திருவோண நட்சத்திரத்தன்று (ஓணம் பண்டிகை) முடிவடைகிறது. அன்று சூரிய உதயத்தின்போது கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார் பெருமாள். இதை ‘உதய கருட சேவை’ என்கிறார்கள். கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் தட்சிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடி திரும்புகிறார். அதன்பின் திருவோண பூஜை நடக்கிறது.

ஒரு வருடம் கழித்து இந்தப் பதிவு இன்று, திருவோணம், ஓணம் பண்டிகையன்று அமைந்திருப்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

மறுபடியும் ஒப்பிலியப்பனுடன் இருந்த அந்த ஒரு நாளை மனக்கண்ணில் கொண்டு வந்து எழுதியது, மறுபடியும் ஸேவித்தது போல் உள்ளது. என்னுடைய மனோரதமும் நிறைவேறியது.

எது நடக்க வேண்டுமோ அது அவன் திருவுள்ளப்படி தானே நடக்கும்! எல்லாரும் அவரவர்கள் இடங்களில் இருந்து ஒப்பிலியப்பன் கோயில் சென்றடைந்தோம்.

கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது ராஜ கோபுரம். 




முதல் நாள் - உப்பிலியப்பன் கல்யாண உற்சவம் , கருட ஸேவை, டோலை (ஊஞ்சல் ஸேவை



தன் மகளை ஒரு பொழுதும் பிரியக்கூடாது என மார்க்கண்டேயர் கேட்டுக்கொண்டதால், தாயாருடன் திருவீதி புறப்பாடு. 


இரண்டாம் நாள் - விஸ்வரூப தரிசனம் , பெரிய திருமஞ்சனம், பெருமாளுக்கு தங்க கவசம் சாற்றுதல், ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை , வடை மாலை, பள்ளியறை சேவை. எல்லா ஸேவையும் ஸேவிக்கப்பெற்றது எங்கள் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். 

இனி, இந்த திவ்யதேசம் பற்றி:

திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்). மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர்: ஒப்பிலியப்பன்(ஒப்பில்லாதவன்), ஸ்ரீனிவாசன் என்ற திருநாமம். திருப்பதி வேங்கடாசலபதியைப் போன்ற தோற்றத்துடன் நின்ற திருக்கோலம்.

பெருமாளின் வலது ஹஸ்தத்தில் சரம ஸ்லோகத்தின் பகுதியான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்பது வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. வைணவ ஸம்பிரதாயத்தில் உயர்வாகப் பேசப்படும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் அழகிய ஹஸ்தம்." என்னையே சரணடை" என்று சரணாகதி மார்க்கத்தை உணர்த்தும் ஹஸ்தம்.

தாயார்: பூமி தேவி , பூமி நாச்சியார் என்று திருநாமம். பெருமாளுக்கு வலது புறம், கீழே மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் திருக்கல்யாணக்கோலம். தனிச்சன்னிதி இல்லை.

பெருமாளுக்கு இடதுபுறம் மார்க்கண்டேயர் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்.

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. 

விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.


ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

ம்ருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர், மகாலக்ஷ்மி தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்தார். திருத்துழாய் வனத்தில், பூமியில், தாயாரையே மகளாய்ப் பெற்றார். பூமியிலிருந்து கிடைத்ததால் பூமிதேவி என்று திருநாமம். அவள் திருமணப் பருவம் அடைந்தாள். திருமால் முதியவர் வேடமிட்டு மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். மார்க்கண்டேயர், ‘‘அவள் குழந்தை. மிகச் சிறியவள். உப்பு போட்டு சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது " என்று கூறினார். அப்போது முதியவர், அவருக்கு ஸ்ரீமந் நாராயணனாகக் காட்சி தந்தார். அதைக்கண்ட மார்க்கண்டேயர், மனம் மகிழ்ந்து, திருமணத்துக்குச் சம்மதித்தார். பெருமாள், "உங்கள் பெண் உப்பில்லாமல் சமைப்பதையே நாம் ஏற்றுக்கொள்வோம், மகாலக்ஷ்மியான இவளை மணம் புரியவே யாம் வந்தோம்" என்று கூறி பூமிதேவியை மணந்தார்.

அதனால் இக்கோயிலில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. பெருமாளும் உப்பிலியப்பன் என்று அழைக்கப்படலானார். உப்பு இல்லாவிட்டாலும், பிரஸாதங்கள் மிகவும் ருசியாக உள்ளது.

பெருமாள் சந்நிதியை நோக்கியபடி கருடன் சந்நிதியும், மற்றும் கண்ணன், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்கள் சந்நிதிகளும் உள்ளன.

நம்மாழ்வாருக்கு , மூலவர் விண்ணகரப்பனாகவும், உற்சவர் பொன்னப்பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனிச் சன்னதிகளில் என்னப்பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். மணியப்பனது இரு புறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளன. முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.

இப்படி பெருமாளை ஐந்து வடிவங்களில் அர்ச்சாவதாரமாய்க் கண்ட நம்மாழ்வார்,

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

(திருவாய்மொழி ஆறாம் பத்து 6-3-9,) 

என்று பாடியுள்ளார்.

தன்னொப்பாரில்லப்பன் என்று நம்மாழ்வார் அழைத்ததால் “ஒப்பிலியப்பன்” என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது.

க்ஷேத்ர விசேஷம் : திருப்பதி பெருமாளுக்கு, உப்பிலியப்பன் அண்ணா என்று ஐதீகம். அதனால் , திருப்பதி போக முடியாதவர்கள், தங்கள் பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகிறார்கள்.

இரவில் புஷ்கரிணியில் நீராடுவது பாவம் என்று ஐதீகம். ஆனால், இந்த ஒரு திவ்ய க்ஷேத்ரத்தில் மட்டும் புஷ்கரிணியில் இரவிலும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.  புஷ்கரிணியில் மீன்கள் நிறைய இருக்கின்றன. 





சென்ற, பார்த்த திருக்கோவில்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் அடியேனுக்குத் தேவையாய் இருந்ததால் "கண் படைத்த பயன்" என்ற இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன்.. இது எனக்கு சிறந்த வடிகாலாகவும் உள்ளது அதே சமயம் மிகுந்த மனநிறைவையும் தருகிறது. மனதுக்கு நிறைவான யாத்திரை.

இக்கோவிலுக்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. அதனால் இத்திருத்தலம் திருநாகேஸ்வரம் என்றே சொல்லப்படுகிறது.

Tuesday, July 24, 2012

தில்லையம்பூர் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-6

Photo courtesy: "THE HINDU"
தில்லையம்பூர் .....இந்த ஊர் வலங்கைமான் அருகே, கும்பகோணம் தாலுக்காவில் , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. 

இந்த ஊர் என் பிறந்த வீட்டின் பூர்வீகம். புகுந்த வீட்டின் பூர்வீகமான தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு அமைக்கப்பெற்றது எனது பாக்கியம். சமீபத்தில் என்னுடைய தம்பி தில்லையம்பூருக்குச் சென்று வந்து படங்கள் அனுப்பி இருந்தான். அதற்குப் பிறகு இந்த ஊரைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என்ற அவாவில் இதை எழுதுகிறேன்.
இந்த ஊரின் வரலாறு:

சோழ மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசர்களில் , தில்லைராயன் என்ற சிற்றரசன் , இந்த ஊரை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. தில்லையை (தற்கால சிதம்பரம்) ராஜதானியாகக்கொண்டு அந்த சிற்றரசன் ஆண்ட ஊர்களில் இந்த ஊரும் ஒன்று என்று சொல்லப்படுகிறது . இது பற்றிய விவரங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் உள்ளதாம்.

வேதங்களைக் கற்றுணர்ந்து, உயர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது . தில்லையம்பூர் ஸ்ரீவேங்கடராம அய்யங்கார் , தில்லியம்பூர் ஸ்ரீ சக்ரவர்த்தி ஆச்சார்ய ஸ்வாமி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், போன்ற சிறந்த வித்வான்களும் பண்டிதர்களும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. அவர்கள் வாழ்ந்த காலத்தையும் , அந்த வரலாறுகளையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை.

இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தால், மிகுந்த சந்தோஷப்படுவேன். விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி அனுப்புங்கள் அல்லது என் ஈ-மெயிலுக்கு setlur.shanu@gmail.com எழுதுங்கள்.

குடமுருட்டி ( காவிரியின் கிளை) ஆற்றின் தெற்குக் கரையில், தில்லையம்பூர் என்ற இந்த சிறிய, அழகிய கிராமம் அமைந்துள்ளது. இயற்கை அழகும் பசுமையும் கூடியதாக இருக்கிறது . சுற்றுப்பட்டு கிராமங்களில் பேச்சு வழக்கில் தில்லியம்பூர், தில்லிம்பூர்,என்று சொல்லப்படுகிறது.



அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா ராஜகோபால ஐயங்கார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 




இனி, எங்கள் பூர்வீகமான தில்லையம்பூரில் உள்ள, புராதனமான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்  பற்றிய விவரங்கள்:


மூலவர்: ஸ்ரீ வேணுகோபாலன். பாதுகைகளுடன் கூடிய பொலிந்து நின்ற திருவடிகளுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய்க் காட்சி தருகிறார். சதுர் புஜங்களுடன் சங்கு சக்ரம் ஏந்தி சேவை சாதிக்கிறார். உள்ளத்தை அள்ளும் புன்முறுவலுடன் கூடிய திருமுகம்.

யதாதாரம் விஶ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திஶசி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம் 

- ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் - 1.9

“இந்த பிரபஞ்சம் / உலகம் முழுவதையும் தாங்கும் பெருமாளை, நீ ஒருவளாகத் தாங்குகிறாயே!” என்று ஸ்வாமி தேசிகன் வியந்தது போல் நம்மையும் வியக்க வைக்கும் பாதுகையுடன் கூடிய திருவடிகள் !!!!

பெருந்தேவித்தாயார்,ஆண்டாள், ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளி
அருள் பாலிக்கிறார்கள்.

"கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்"
என்று நம்மாழ்வாரைப் போலவே நாமும் பாடி, அவன் அருளால் அவன் தாள்
வணங்குவோம்.

அடியேனும் கூடிய சீக்கிரம் அவனை ஸேவிக்க, அந்த வேணுகோபாலனிடமே பிரார்த்திக்கிறேன்.

திருக்கோயில் முகவரி :

துவாரகா அக்ரஹாரம், தில்லையம்பூர் ,
வலங்கைமான் அருகில், தஞ்சாவூர்- 612 804
Dwaraka Agraharam, Thillaiambur (near Valangiman), Thanjavur - 612 804.

Tuesday, May 15, 2012

MALLESWARAM SRI LAKSHMINARASIMHA SWAMY TEMPLE/ கண்ணுக்கினியன கண்டோம்-5



Ugram Veeram Mahaa-Vishnum
Jwalantham Sarvatho Mukham
| 
Nrisimham Bheeshanam Bhadram
Mrityu-Mrityum Namaamyaham
| |

Malleswaram is one of the areas in Bangalore where there are many temples.

Venkoji Rao, brother of Chathrapathi Shivaji, had a divine dream wherein Lord Shiva told him to build a temple. While searching, he found a small hillock, where he saw the Udbhava Murthy of Lord Shiva and in that place he built a temple, which is today's Kaadu Malleswara Temple. It is from this temple the place got its name "Malleswaram".

There is another small hillock next to Kaadu Malleswara temple, and it was here the Udbhava Murthy of Lord Sri Narasimha Swamy was discovered.

Narasimha avatara has great significance and importance. It was an instant avatara, where the Lord appears in a very ferocious form. This avatara was taken to prove the words of His devotee, Prahlada, who said "THOONILUM IRUPPAAR THURUMBILUM IRUPPAAR" and proved His omnipresence. HE is the 'Great Protector' who defends and protects his devotees in times of need.

We were blessed by HIM to visit the Sri Lakshmi Narasimha temple on the Narasimha Jayanthi day this year (5.5.2012). It was a pleasurable experience. There was a long queue, 
outside the temple, and devotees were standing to have a glimpse of Lord Narasimha. The roads had a festive look. All sides of the temple walls were illuminated.   The street and roads were also illuminated. 


ILLUMINATED  LAKSHMINARASIMHA TEMPLE


 STHAMBAM OUTSIDE THE TEMPLE

 ELEPHANTS ON TEMPLE ENTRANCE
It took almost 45 minutes to reach the entrance.Climbing the steps near the sthambam, leads to the main entrance of the temple. Beautifully sculpted elephants are on both sides of the steps and sthambam. There is a main hall which leads us to the Garbagriha where we can worship Lord Narasimha, with Sri Lakshmi on his lap, tongue out, yet with a gentle look, and abhaya hastham, telling us "don't worry I am here for you". 

There is a belief that incurable diseases will be cured and the evil spirits will be driven out and all our desires will be fulfilled by the Lord AT ONCE and He doesn't say tomorrow if one surrenders to HIM. "நாளை என்பதே நரஸிம்மனிடத்தில் இல்லை".

We had a very good darshan and while coming out I felt like Nammazhwar.

Aadi Aadi Agam Karaindhu - Isai 
Paadi Paadi Kanneer Malghi - Yengum 
Naadi Naadi Narasinghaa Endru 
Vaadi Vaadum Iv Vaanudalae - Tiruvoimozhi - 2.4.1.

Coming out from the sanctum sanctorum, on the right side of the main hall is Anjaneyar sannidhi and adjacent to that is the Utsava moorthy with His consorts and azhwaars, acharyans sannidhi. Beautiful idols are sculpted on the outer prakaram. There is one Mandapam and madapalli also. The temple is cleanly maintained.


THE STREET WITH A FESTIVE LOOK




Some more captures of the temples nearby. Just opposite to Lakshminarasimha temple is another temple called Dakshina Mukhi Eswara Temple where water comes from Nandi's mouth and falls on the Shivalinga. It is said that no one knows the origin of this water. The holy water is carried home by the devotees and is believed to cure many diseases and ailments. 


DAKSHINA MUKHI ESWARA & NANDI TEMPLE

Just adjacent to the Narasimha temple is the Gangamma temple, The deity is Goddess Gangamma, Ganga matha (Ganges), is believed to be the living goddess in Hindu mythology. Ganga represents the inner purity and coolness.  Lakhs of people from all over India, come here during the Navarathri festival.


GANGAMMA TEMPLE


IDOLS OUTSIDE GANGAMMA TEMPLE

Malleswaram Narasimhar Temple Address and contact details:
Postal Address: Sri Lakshmi Narasimhaswamy Temple,
15th Cross, Malleswaram,
Bangalore – 560 003

Friday, May 4, 2012

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

உமதடிகள் அடைகின்றேனென்று ஒருகாலுரைத்தவரை
அமையுமினி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து
தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியுந்தான் மிகவிளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே - அடைக்கலப் பத்து.

சரணாகதி என்பது, தன்னை ஒருவரிடம் அர்ப்பணித்துவிடுவது  விடுவது.

பரமாத்வாவிடம் நம்மை அர்ப்பணித்து,  நம்மால் முடிந்தது ஒன்றும் இல்லை "எல்லாம் அவனே" என்றும் , நம்முடைய செயல்கள், மற்றும்  அதனால் உண்டாகும் பலன்களையும்  அவரிடமே அர்ப்பணித்துபரமாத்மாவின்  திருவடிகளைப் பற்றியிருப்பது    ப்ரபத்தி / சரணாகதி   எனப்படும்.

நான் செய்தேன், என்னால் எல்லாம்  முடியும் ,  நானே செய்து விடுவேன்.’ என்று சொல்பவர்களிடம் பகவான் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார். "பகவானே, நீ தான் கதி, நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. திரௌபதி கதை இதற்கு எடுத்துக்காட்டு . சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்தா  புண்டரீகாக்ஷா  ரக்ஷமாம்  சரணாகதம் " என்று கூப்பிட்டவுடன்  ஓடி வந்து உதவினான் .

குலசேகர ஆழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!
என்று பாடியுள்ளார்.

ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும்,  அந்தக் குழந்தை, தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது  போன்று , தனக்குத் துயரம் வந்தபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே  வேண்டியிருப்பதாகக்  கூறுகிறார். கஷ்டங்களோ, துன்பமோ வந்தாலும் அவற்றைப் போக்குபவனும் அவனே என்கிறார்.

என்னைக் காத்தருள வேண்டிய  பொறுப்பு உன்னுடையது   உன்னாலன்றி  என்னால் ஆவது ஒன்றுமில்லைஎன்னும் திடமான எண்ணத்துடன் அவன் திருவடியைப் பற்றிக்கொள்ளுவதே  ப்ரபத்தி ஆகும்.

தன்னைச் சரணடைந்தவர்களின் துயரை  நீக்குபவர் பகவான். தன்  பக்தர்களுக்கு உண்டான துன்பத்தைத் தன் துன்பமாகக்கருதி பக்தர்களைக் காப்பாற்றுகிறார்.

தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதாவது தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விட்டது.  இதே போல் அந்தப் பரமாத்மாவைப் பற்றும் நிலையே ப்ரபத்தி .

"பகவானே, நீ தான் கதி,  நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. அப்போது பகவான் நம்மைக் காப்பாற்றுகிறான், நம்மை வழி நடத்துகிறான்நற்கதியடையச் செய்து  மோக்ஷத்தையும் அளிக்கிறான்.

Wednesday, April 25, 2012

ஸ்ரீ கிருஷ்ண கவசம்


ஸ்ரீ கிருஷ்ண கவசம் - கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற சிறிய புத்தகத்தில் உள்ளபடி:

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று இப்புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.


அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் !
இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை
என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை
நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !
யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங் கத்துப் பெருமாள் வருக !
இராவணன் கொடுமை தீர்த்தாய் ; துன்பம்
இராவணம் எமக்கும் இன்னருள் புரிக !
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை
கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய...

Wednesday, January 4, 2012

ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், சென்னை / கண்ணுக்கினியன கண்டோம்-4



ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.

இத்திருக்கோயில், வடசென்னையில், முத்தியாலுப்பேட்டையில், பவளக்காரத் தெருவில் உள்ளது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.


மூலவர் - ருக்மிணி பாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலன்.
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

தனி ஸன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், ஸுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாஶாஸனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் "வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் 
"ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.




இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தற்சமயம், இத் திருக்கோயிலைச் சீரமைப்பதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. பெருமாள், புனர் நிர்மாணப் பணிகளுக்காக பாலாலயத்தில் இருக்கிறார். இத்திருப்பணி, விரைவாக முடிந்து, ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற வேணுகோபாலனையே வேண்டி நம்மால் முடிந்த உதவியையும் செய்வோமே!