Tuesday, September 13, 2011

தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் (Thensiruvalur azhagiya manavala perumal koil) /கண்ணுக்கினியன கண்டோம்-3

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஆகிவிட்ட பின்பும், சொந்த ஊருக்குச் செல்லும்போது கிடைக்கும் பரவசத்திற்கு நிகர் இல்லை.

சில பெரியோர்கள் "உங்க பூர்வீகம் என்ன?" என்று கேட்பதைப் பார்த்திருப்போம். ஒருவர் தாய்நாடு, சொந்த மண், சொந்த ஊர், பூர்வீகம்.. என்று சொல்லும்போது அதில்தான் எத்தனை பற்றுதல்? அந்த வார்த்தைகளில் அவர்களது பற்றுதல் வெளிப்படுகிறது. அது ஏன்? உங்க பூர்வீகம் எந்த ஊர் ? என்ன பெருமாள்? என்று யாராவது கேட்கும்பொழுது, "எங்க பூர்வீகம் ... ஊர் .... பெருமாள் " என்று சொல்லும்போதுதான் எவ்வளவு பெருமிதம்?


ஏன் இந்த இன்பப் பெருமிதம்? யோசித்துப் பார்த்தபொழுது , நமது முன்னோர்கள், முப்பாட்டனார், பாட்டனார், தந்தை, தாய் என்று அனைவரும் வாழ்ந்த ஊர், வணங்கிய பெருமாள் என்ற உணர்வு நம்மை அறியாமலே வருவதால்தான் என்று தோன்றுகிறது.

இனி, எங்கள் பூர்வீகம், தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றிய விவரங்கள்:

தென்சிறுவளூர் - ஸ்ரோதபுரி என்றும், நவமால் சிறுவளூர் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : ஸ்ரீ அழகியமணவாளப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.
உற்சவர் :புஷ்பவல்லி தாயார் ஸமேத தேஹளீச பெருமாள்.

இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ளது.
சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள்.

இந்த கிராமம் மிகவும் புராதனமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரிய முறைப்படி அமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மண்டலாடீஸ்வரர் என்ற சிவன் கோயிலும், சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காளி கோயிலும், சிவன் கோயிலுக்கு மேற்கே பெரிய நல்ல தண்ணீர் குளமும், அதற்கும் மேற்கே வைஷ்ணவ அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது தவிர எல்லை தேவதைகள், எல்லையம்மன், அதிஉக்ரகாளியம்மன் ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு , துருக்கிய முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூலவருக்கு கற்சுவர் எழுப்பி, பின் உற்சவ மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகனே ரங்கநாதருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தபடியால்தான் நமக்கு இன்று "ஸ்ரீ அபீதி ஸ்தவம்" என்ற ஸ்தோத்ர பொக்கிஷம் கிடைத்துள்ளது. அதே போல, திருக்கோவிலூரில் உள்ள உற்சவ மூர்த்திகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்ற பெரியோர்கள், அங்கு இருந்த உற்சவ மூர்த்தியான தேஹளீச பெருமாளை, ஸ்ரோதபுரி என்று அழைக்கப்பட்ட நம் தென்சிறுவளூரில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அங்கிருந்த தேசிக சம்பிரதாய வைஷ்ணவர்கள், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத
ழகிய மணவாளப்பெருமாளையும், உற்சவர், ஸ்ரீ தேஹளீசரையும் மிகுந்த பக்தி ஸ்ரத்தையோடு ஆராதித்து வந்தார்கள். அதைப்பார்த்து மகிழ்ந்த, சிறந்த விஷ்ணு பக்தரும், ஸ்ரீ வேதாந்த தேசிகனின் சிஷ்யரும், செஞ்சியை ஆண்டவருமான கோபண்ணா, அந்த கிராமத்தை அவர்களுக்கே இனாமாக வழங்கினார்.

அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா தேசிகாச்சாரியார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.



கோயிலின் முன்பாக கல்தூண், அதாவது கல்லினால் செய்யப்பட்ட ஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதில் மிக நேர்த்தியாக கருடனும், ஆஞ்சநேயரும் வீற்றிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஆஞ்சநேயரும், பெருமாளைப்பார்த்தபடி கருடனும் மிகுந்த அழகோடு விளங்குகிறார்கள். திருக்கார்த்திகையன்று சொக்கப்பானை ஏற்றியிருப்பார்கள் போலும்!!!

கோயிலின்உள்ளே கருடன், அனைத்து பெருமாள் கோயில்களிலும் உள்ளபடியே, பெருமாளைப்பார்த்தபடி கைகூப்பியவாறு இருக்கிறார். பெருமாள் ஸன்னிதிக்கு முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் இருவரும் நிற்கின்றனர். அதையொட்டி, பக்கத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸன்னிதி உள்ளது.

கர்ப்பக்ருஹத்தில், பெருமாள் பெயருக்கு ஏற்றாற்போல் நின்ற திருக்கோலத்தில் சிரித்த முகத்துடன் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய், மிக அழகாக, இருக்கிறார். ஹேமாம்புஜ நாயகி ஸமேத வரதராஜ பெருமாள் உற்சவமுர்த்தியாக திருவீதி புறப்பாடு, மற்றும் உற்சவங்கள் கண்டருளுகிறார். புஷ்பாலயா ஸமேத தேஹளீஸ பெருமாளும், கையில் நவநீதத்துடன் நவநீத கிருஷ்ணரும், ஹாலக்ஷ்மியும், ஸ்வாமி தேசிகனும், உற்சவமூர்த்திகளாக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, அதிசுந்தரமாகக் காக்ஷி கொடுக்கிறார்கள்.



தென்சிறுவளூர் பெருமாள் அபரிமிதமான சக்தி படைத்தவர். தெய்வ குற்றம் நீங்கவும், முன்னோர்கள் சாபம் விலகவும், திருமண தடை விலகி விவாஹம் நடைபெறவும் , நல்ல படிப்பு கிடைக்கவும், சகல தொல்லைகளும் நீங்கவும், கடன் தொல்லை, வியாதி நீங்கவும், பெருமாளிடம் பிரார்த்தித்து பலனடைந்தோர் ஏராளம். தென்சிறுவளூரைப் பூர்வீகமாகக் கொண்ட நல்ல உள்ளம் படைத்த சிலரால் இத்திருக்கோயில் நல்ல முறையில் சீர்திருத்தப்பட்டு, 26 -8 -2007 அன்று ம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு, ஒரு மண்டபமும், திரு மடப்பள்ளியும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய ஒரு கிணறும் உள்ளது. அது தவிர, தங்கியிருந்து ஸேவிக்க விரும்புபவர்கள் சௌகர்யத்துக்கென ஒரு சிறிய ஹாலும் கட்டிவிடப்பட்டுள்ளது.

ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் மங்களாஶாஸனம் செய்து அனுக்ரஹித்தாயிற்று.

தென்சிறுவளூர் பெருமாளை 
 ஸேவித்து பிரார்த்திக்கும் அனைவரும்   நீங்காத செல்வம் நிறைந்து, எங்கும் திருவருள் பெற்று  இன்புறுவர்  என்பது திண்ணம். 


திருக்கோயில் முகவரி :

தென்சிறுவளூர் அக்ரஹாரம்,
தென்சிறுவளூர்(V&P),
வானூர் வட்டம் - 604 102.

இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழி விவரம் :

சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள். தென்சிறுவளூர் என்று யாரும் சொல்வதில்லை.

திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில், கொந்தமூர் என்ற இடத்தில் இறங்கி, குன்னம் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டிவனம்-குன்னம் மார்க்கத்தில் டவுன் பஸ் எண் 14 மற்றும் பாண்டி - குன்னம் மார்க்கத்தில் பஸ் எண் 226 , இந்த ஊர் வழியாகக் குன்னம் செல்கிறது. தென்சிறுவளூரில் இறங்க வேண்டும்.

Tuesday, August 30, 2011

RANGANATHA PANCHAKAM



sveeyatara bhaasakara chandamaniyukta phanamandita bhujanga shayanam
megha vara vaasaka suvarnagiri saubhaga paraabhavam ananta ruchiram
leenakara chchanda bhuvanathraya mudaakara shuchim adhika bhooshana karam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

roopamava bodhamati nootana manognya madanam bhuvana mangalakaram
vaaridhi sudhaakara sutaakara sukhaatura sumaadhura susheelana padam
bhoota mahadaadayam alankrta kalebaram akhanta karunaalaya mukam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

raachara charaachara paraadhika durakrti muraadi patu bheekaratanum
naarada varaadinutha neerada nibhaakara manoratha sumaadhura padam
naadayuta geeta paraveda ninadanagha sanaatana janaadhikavrutam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

sidhdha sura chaarana Sananda Sanakaadaya muneendra gana ghoshana param
nithya rachaneeya vachaneeya rasaneeya ramaneeya kamaneeyataparam
padmadala bhaasa makaranda parihaasa nijabhakta bhava mochana karam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

hema makutaadi katakaabarana kankana samujwala manoharatanum
geeta natanaadaya kalaavruta sudhaamrta niranjana sumangalakaram
bhaagavata Raama charitaamala dhureena vachanaadi paripooritakaram
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

Monday, April 11, 2011

மதுராந்தகம் - ஏரி காத்த ராமர் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-2




நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராமா" என்ற இரண்டெழுத்தினால். - கவிச் சக்கரவர்த்தி கம்பன்மதுராந்தகம்: அபிமான ஸ்தலம். இது வகுளாரண்ய க்ஷேத்ரம் எனப்படுகிறது.

பெருமாள்: ஏரி காத்த ராமர், கருணாகரன் . கிழக்கே நின்ற திருக்கோலம்
தாயார்: ஜனகவல்லி
தீர்த்தம்: ராமசந்த்ர புஷ்கரிணி
ஸ்தல விசேஷம்: பாஷ்யகாரர் ஸ்ரீ பெரிய நம்பிகளிடம் பஞ்சஸம்ஸ்காரம் பெற்ற ஸ்தலம்.

மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காக்ஷி தருகிறார். தர்மத்தைக் காக்க திருஅவதாரம் செய்து தானே மனிதனாக வாழ்ந்த ராமபிரான் சீதா லக்ஷ்மண ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகரமூர்த்தியும் இங்கு எழுந்தருளியுள்ளார். கர்ப்பக்ருஹத்திற்குள்ஆஞ்சநேயர் இல்லை என்பது ஆச்சர்யம்.

ஆஞ்சநேயர், கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

ராமர் சன்னிதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

தனிச்சன்னிதியில் யந்த்ர சக்கரத்தாழ்வார் காக்ஷி தருகிறார். பின்புறம் யோக நரசிம்ஹர். ஆண்டாள், ராமனுஜருக்குத் தனிச்சன்னிதிகளும் உள்ளன. நவநீதக்கண்ணன் ராமானுஜர் சன்னிதியில் காக்ஷி தருகிறார்.

ஆண்டாள் சந்நிதிக்கு அருகில் உள்ள மகிழமரத்தடியில்தான் ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் மந்திர உபதேசம்பெற்றார் என்பதும் அங்கு பொறிக்கப்பட்டு வரைபடமாகவும் உள்ளது.

பாஷ்யகாரருக்கு ஸ்ரீ பெரிய நம்பிகள் மகிழ மரத்தடியில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துவைத்து அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தாராம்.

நாங்கள் சென்ற சமயம் கோயிலில் பல்லவோற்சவம். பங்குனி மாதத்தில் திருவோணம் முடிய இந்த உற்சவம் 3 நாள் நடைபெறுமாம். காஞ்சி, திருவள்ளூர், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் இந்த உற்சவம் நடைபெறுவதாக அர்ச்சகர் சொன்னார்.

1937ம் வருடம் இந்த கோவிலை வடநாட்டில் உள்ள ஒருவர் புனரமைத்தார். ஒரு தூண் நடுவதற்காகத் தோண்டும் போது ஒரு சுரங்கம் தென்பட்டதாம். இச்சுரங்கத்தின் நடுவே ஒரு தட்டில் நவநீதக் கண்ணன் விக்ரகமும் பஞ்சஸம்ஸ்காரத்திற்கு உபயோகப்படும் சங்கும் சக்கரமும் வைக்கப்பட்டு இருந்தனவாம். இந்த சங்கும் சக்கரமும் பாஷ்யகாரரின் பஞ்சஸம்ஸ்காரத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

மதுராந்தகம் ஏரியைக் காத்த ராமர் இவர். இதற்குப் பின்னால் ஒரு சுவையான வரலாறு உள்ளது. 18ம் நூற்றாண்டு . ஒவ்வொரு வருடமும் மழையில் மதுராந்தகம் ஏரி உடைத்துக்கொண்டு விடும் ஒருநாள் பெரிய மழை பெய்தது. மதுராந்தகம் ஏரியின் கரைகள் உடையக்கூடிய அபாய நிலையில் இருந்தது. செங்கல்பட்டு ஜில்லாவிற்கு கிழக்கு இந்திய கம்பெனியின் கலெக்டராக இருந்த கர்னல் லையனல் பிளேஸ் என்பவர், அந்தப் பெரும் மழையிலும், மதுராந்தகம் பெரிய ஏரியைப் பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்தவர்களிடம், "நீங்கள் கோயில் கட்டி
வணங்குகிறீர்களே. அந்த தெய்வம் இந்த ஏரியின் கரை உடையாமல் காக்க
வேண்டியதுதானே?" என்றாராம்.

அப்போது ஒருவர், "நம்பிக்கையுடன் எங்கள் ராமரைக்
வேண்டிக்கொண்டால் அவர் வந்து ஏரியைக் காப்பார்", என்று சொன்னாராம்.உடனே கலெக்டர், “இந்த ஸ்ரீ ராமன் ஏரியை உடையாமல் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் சந்நிதியை சரி செய்து தரலாம்என்று நினைத்துக் கொண்டாராம்.

மழை பெய்து ஏரி நிரம்பியது. வெள்ளம் மிகவும் அதிகமாகி, ஏரிக்கரையும் உடையும் நிலையில் இருந்தது. ஆனால் கரை உடையவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டு இருந்தது. ஆனாலும் கரை உடையவில்லை.

தண்ணீர் நிரம்பியும் ஏன் ஏரி உடையவில்லை என்பது பெரிய மர்மமாக இருந்தது.

அப்பொழுது திடீரென்று கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மின்னல் வெட்டியது.

அந்த ஆங்கிலேயர் ஒரு காட்சியைக்கண்டார்.

ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும்
வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி
கண்டார். கரையில் வில் அம்புடன் ராமலக்ஷ்மணர்கள் ஏரியைப் பாதுகாத்து வருவதைக் கண்டு தரையில் மண்டியிட்டு விழுந்து வணங்கினார்.

அந்த வருடம் ஏரிக்கரை உடையவில்லை. தாம் முன் கூறியபடி தாயார் சந்நிதியின் சீரமைப்பு கைங்கர்யங்களை செய்தார். இந்த வரலாறு தாயார் சந்நிதியில் பொறிக்கப்படுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்த ராமர் கோயிலுக்குத் திருப்பணிகள் பலவற்றை அவர் செய்தாராம்.

இதனால் ராமருக்குஏரி காத்த ராமர்என்று பெயர் ஏற்பட்டது.

Friday, March 11, 2011

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) / கண்ணுக்கினியன கண்டோம்-1

சென்ற பதிவில் "கண் படைத்த பயன்" வரிசையில் கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி திருமஞ்சனம் பற்றி எழுதி இருந்தேன். படம் எடுத்துப்போட்டிருந்த "பேனர் " படிக்க முடியவில்லை என சிலர் சொன்னதால், அடியேன் இங்கு அனைவரின் உபயோகத்துக்காகவும் பாராயணத்துக்காகவும் தமிழில் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன். எனது ஸ்நேஹிதி ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளாள். அதையும் இங்கு வெளியிட்டுள்ளேன்.

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) கோவிலில் கட்டியிருக்கும் தொங்கு பலகையில் எழுதியிருப்பதை இங்கு தமிழில் அப்படியே எழுதியுள்ளேன்.

பெருமாளின் அமைப்பு:

ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அனந்த பீடம், யோக பீடம், ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத ஹஸ்தத்துடன் குளிர கடாக்ஷிக்கும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த ந்ருஸிம்ஹனுக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது. " அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக ஸேவை சாதிக்கிறார்". மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதைக் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நக்ஷத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.

திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராஹு, நாக்கில் சனி பகவான், ஆக நவக்ரஹங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால் இது ஒரு பரிஹார ஸ்தலமாக விளங்குகிறது.
ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி ஸ்லோகம்

ஸத்ய ஞான ஸுக ஸ்வரூப மமலம் க்ஷீராப்தி மத்யே ஸ்திதம் |
யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம் ||
த்ர்யக்ஷம் சக்ர பினாக ஸாபயகரான் பிப்ராண மர்க்கச்சவிம் |
சத்ரீபூத பணீந்த்ரமிந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்
ம் பஜே ||

நவக்ரஹ தோஷங்கள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தக்கவாறு பாராயணம் செய்துகொண்டு ஸ்ரீ ந்ருஸிம்ஹன் சந்நிதியை வலம் வர தோஷ நிவ்ருத்தி அடைந்து ஸகல ஸௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

சூரியன்:

காலானல ஸமப்ரக்யம் ஷட்கோணாந்தஸ்திதம் விபும்
ஜ்வாலாமாலாதரம் தேவம் பஜே ஜ்வாலா ந்ருகேஸரிம்

சந்திரன்:

அனந்த மச்யுதம் தீரம் விஸ்வரூபம் ப்ரபும் விபும்
ந்ருஸிம்ஹம் தேவதேவேசம் தம் பஜே ஸர்வதோமுகம்

புதன்:

ஸர்வாபரண பூஷாங்கம் ஸச்சிதானந்த விக்ரஹம்
பத்மசக்ரதரம் வந்தே ஹயக்ரீவ ந்ருகேஸரிம்

சுக்ரன்:

ஸ்ரீ பூ நீளா ஸஹிதம் ஸர்வாபரண பூஷிதம்
விரூபாக்ஷம் மஹாவிஷ்ணும் பஜே பத்ர ந்ருகேஸரிம்

செவ்வாய்:

சதுஸ் சக்ரதரம் தேவம் அங்காராந்தர் பஹிஸ்திதம்
ஜ்வாலாமாலா தரம் வந்தே பஜேதுக்ர ந்ருகேஸரிம்

குரு:

வேதாந்த வேத்யம் யக்ஞேஸம் ஸர்வதேவ நமஸ்க்ருதம்
பஜாமி ஸததம் தேவம் மஹாவிஷ்ணும் ந்ருகேஸரிம்

சனி பகவான்:

அஷ்ட சக்ரதரம் தேவம் விபும் சனி ஹ்ருதிஸ்திதம்
நீலாபரண பூஷாங்கம் பாதாள ந்ருஹரிம் பஜே

ராஹு:

சக்ராஷ்டக தரம் தேவம் த்ரிநேத்ரம் சோக்ரவிக்ரஹம்
விஸ்வரூப மஜம் ஸௌம்யம் வராஹ ந்ருஹரிம் பஜே

கேது:

ஆதிமத்யாந்த ரஹிதம் ஸச்சிதானந்த ரூபிணம்
நமாமி ந்ருஸிம்ஹம் தம் ஸர்வ சத்ரு விநாஸனம்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோட காரஞ்ச பார்கவ:
யோகானந்தஸ் சத்ரவட: பாவனோ நவஹரிர் நம:

Suryan:
Kaalanala Samapragyam Shatkonaanthasthitham Vibhum
Jwaala Maala Dharam Devam Bhaje Jwaala Nrukesarim
Chandran:
Anantham Achyutham Theeram Vishwaroopam Prabhum Vibhum
Nrisimham Deva Devesam Tham Bhaje Sarvathomukham

Budhan:
Sarvaabharana Bhooshangam Satchithananda Vigraham
Padma Chakra Dharam Vande Hayagriva Nrukesarim

Sukran:
Sri Bhu Neela Sahitham Sarvaabharana Bhooshitham
Virupaaksham Mahavishnum Bhaje Badra Nrukesarim

Chevvai:
Chathus Chakradharam Devam Angaaraanthar Bahisthitham
Jwaala Maala Dharam Vande Bhajedugra Nrukesarim

Guru:
Vedantha Vedhyam Yagnesam Sarva Deva Namaskrutham
Bhajaami Sathatham Devam Mahavishnum Nrukesarim

Sani:
Ashta Chakra Dharam Devam Vibhum Sani Hrudisthitham
Neelabharana Bhooshangam Paadhaala Nruharim Bhaje

Rahu:
Chakraashtaka Dharam Devam Trinethram shograVigraham
Vishwaroopa Bhajam Sowmyam Varaha Nruharim Bhaje

Kethu:
Adhimathyaantha Rahitham Satchithaananda Roopinam
Namaami Nrusimhan Tham Sarva Shathru Vinaasanam

Jwala Ahobila Malola Kroda Kaaranja Bhargava:
Yogananda Kshathravada Paavano Navaharim Nama:

மேலும் விவரங்களுக்கு:
http://www.naraharikrupa.com/ & http://www.narahari.in/

Sunday, January 30, 2011

KATTAVAKKAM SRI VISWAROOPA LAKSHMI NARASIMHAR

Picture of a banner in the temple


It is a great pleasure for me to share Lord Sri Viswaroopa Lakshmi Narasimhar's picture. By the grace of the Lord, I had a darshan of HIM in Kattavakkam, and also had a chance to see the Thirumanjanam (abishegam) of the LORD.


The Lord is gigantic and has an amazingly smiling face. The Lord is seated (VEETRIRUNDHA THIRUKOLAM) with his consort, Goddess Lakshmi on His left lap. She is embracing Him with Her right hand and holding a lotus flower on Her left hand. The Lord holds Sudharshana Chakra on His back left hand and bow-and-arrow on His back right hand. This indicates His intention of holding the bow and arrow in His subsequent incarnation as Lord Rama.
His forehands show Abhaya Hastham (indicating that the Lord will come to the rescue of the devotees) and Varada Hastham(pointing towards his feet conveying to the devotees that the Lord will come to the rescue of only those who fall at his feet, i.e., total surrender) postures. He has three eyes, the third one is in His forehead and the Adhisesha above His head is with seven hoods. Each hood has a crowning and sparkling Nagarathnam above it.

Visit this holy temple with your family, friends and relatives and get Perumal's blessings.


For upcoming events & more details visit http://www.naraharikrupa.com/ & http://www.narahari.in/

Post adapted from Shri.K.S.Jegannathan's "Narasimha darshanam"

Tuesday, January 4, 2011

HANUMAN CHALISA

HANUMAD JAYANTHI WISHES TO ALL !!!
ஹனுமத் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !!!

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! ப்ரபோ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத் தருவீராக.

ஹனுமான் சாலீஸா

பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன். நான்கு கனிகள்: 1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள். எட்டுவித சித்திகள்: 1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல் 3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல் ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மன்ஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

நன்றி : http://temple.dinamalar.com/