Thursday, June 5, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97, ஸ்ரீ நாராயணீயம் 97வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -97
மார்க்கண்டேயர் கதை

त्रैगुण्याद्भिन्नरूपं भवति हि भुवने हीनमध्योत्तमं यत्
ज्ञानं श्रद्धा च कर्ता वसतिरपि सुखं कर्म चाहारभेदा: ।
त्वत्क्षेत्रत्वन्निषेवादि तु यदिह पुनस्त्वत्परं तत्तु सर्वं
प्राहुर्नैगुण्यनिष्ठं तदनुभजनतो मङ्क्षु सिद्धो भवेयम् ॥१॥

த்ரைகு₃ண்யாத்₃பி₄ந்நரூபம் ப₄வதி ஹி பு₄வநே ஹீநமத்₄யோத்தமம் யத்
ஜ்ஞாநம் ஶ்ரத்₃தா₄ ச கர்தா வஸதிரபி ஸுக₂ம் கர்ம சாஹாரபே₄தா₃: |
த்வத்க்ஷேத்ரத்வந்நிஷேவாதி₃ து யதி₃ஹ புநஸ்த்வத்பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர்நைகு₃ண்யநிஷ்ட₂ம் தத₃நுப₄ஜநதோ மங்க்ஷு ஸித்₃தோ₄ ப₄வேயம் || 1||

1. இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் முக்குணங்களால் உண்டு பண்ணப்பட்டு வேறுபட்டு விளங்குகிறது. அதனால் உத்தமம், மத்யமம், அதமம் என்ற நிலைகளில் விளங்குகிறது. இவ்வுலகில் பலனை எதிர்பார்க்காமல் தங்களை வணங்குவது, தங்கள் கோவில்களுக்குச் செல்வது போன்றவற்றை முக்குணமற்றது என்று முனிவர்கள் கூறுகின்றனர். முக்குணங்களால் உண்டு பண்ணப்படாத தங்களை சேவித்து நான் ஜீவன் முக்தனாக ஆகவேண்டும்.

त्वय्येव न्यस्तचित्त: सुखमयि विचरन् सर्वचेष्टास्त्वदर्थं
त्वद्भक्तै: सेव्यमानानपि चरितचरानाश्रयन् पुण्यदेशान् ।
दस्यौ विप्रे मृगादिष्वपि च सममतिर्मुच्यमानावमान-
स्पर्धासूयादिदोष: सततमखिलभूतेषु संपूजये त्वाम् ॥२॥

த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுக₂மயி விசரந் ஸர்வசேஷ்டாஸ்த்வத₃ர்த₂ம்
த்வத்₃ப₄க்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஶ்ரயந் புண்யதே₃ஶாந் |
த₃ஸ்யௌ விப்ரே ம்ருகா₃தி₃ஷ்வபி ச ஸமமதிர்முச்யமாநாவமாந-
ஸ்பர்தா₄ஸூயாதி₃தோ₃ஷ: ஸததமகி₂லபூ₄தேஷு ஸம்பூஜயே த்வாம் || 2||

2. உம்மிடமே மனதைச் செலுத்தி, என் எல்லா செய்கைகளையும் உம்மிடமே அர்ப்பணம் செய்வேன். உமது பக்தர்கள் முன்பு சென்ற இடங்களுக்குச் செல்வேன். திருடன், பிராமணன், விலங்குகள் போன்ற எல்லாவற்றிலும் பேதம் பாராமல் இருப்பேன். அவமானம், துவேஷம், அசூயை முதலியவற்றை விட்டு எல்லா உயிர்களிடத்திலும் உம்மையே காண்பேன்.

त्वद्भावो यावदेषु स्फुरति न विशदं तावदेवं ह्युपास्तिं
कुर्वन्नैकात्म्यबोधे झटिति विकसति त्वन्मयोऽहं चरेयम् ।
त्वद्धर्मस्यास्य तावत् किमपि न भगवन् प्रस्तुतस्य प्रणाश-
स्तस्मात्सर्वात्मनैव प्रदिश मम विभो भक्तिमार्गं मनोज्ञम् ॥३॥

த்வத்₃பா₄வோ யாவதே₃ஷு ஸ்பு₂ரதி ந விஶத₃ம் தாவதே₃வம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்யபோ₃தே₄ ஜ₂டிதி விகஸதி த்வந்மயோ(அ)ஹம் சரேயம் |
த்வத்₃த₄ர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந ப₄க₃வந் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாஶ-
ஸ்தஸ்மாத்ஸர்வாத்மநைவ ப்ரதி₃ஶ மம விபோ₄ ப₄க்திமார்க₃ம் மநோஜ்ஞம் || 3||

3. முன்பு கூறிய திருடன் முதலியவர்களிடத்தில் தாங்கள் இருப்பது எனக்கு விளங்கும் வரை இவ்விதமாக வழிபடுவேன். ஞானம் பெற்ற பிறகு தாங்களாகவே ஆகி வாழ்வேன். பகவானே! அவ்வாறு செய்யத் தொடங்கிய பாகவத தர்மத்திற்கு சிறிதும் அழிவு ஏற்படாது. பிரபோ! அதனால் எனக்கு மனங்கவரும் பக்தி மார்க்கத்தை அளிக்க வேண்டும்.

तं चैनं भक्तियोगं द्रढयितुमयि मे साध्यमारोग्यमायु-
र्दिष्ट्या तत्रापि सेव्यं तव चरणमहो भेषजायेव दुग्धम् ।
मार्कण्डेयो हि पूर्वं गणकनिगदितद्वादशाब्दायुरुच्चै:
सेवित्वा वत्सरं त्वां तव भटनिवहैर्द्रावयामास मृत्युम् ॥४॥

தம் சைநம் ப₄க்தியோக₃ம் த்₃ரட₄யிதுமயி மே ஸாத்₄யமாரோக்₃யமாயு-
ர்தி₃ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ பே₄ஷஜாயேவ து₃க்₃த₄ம் |
மார்கண்டே₃யோ ஹி பூர்வம் க₃ணகநிக₃தி₃தத்₃வாத₃ஶாப்₃தா₃யுருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப₄டநிவஹைர்த்₃ராவயாமாஸ ம்ருத்யும் || 4||

4. இந்த பக்தி யோகம் உறுதியாக இருக்க ஆரோக்யமும் ஆயுளும் வேண்டும். அதை அடைய தெய்வாதீனமாக உம்முடைய பாதத்தையே சரணடைய வேண்டும். நோய் தீர பாலைக் குடிப்பதுபோல், உம்முடைய காலடியில் சேவை செய்ய வேண்டும். வெகு நாட்களுக்கு முன்பு, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் பன்னிரண்டு ஆண்டுகள்தான் என்று ஒரு ஜோதிடர் கூறினார். ஒரு வருடகாலம் உன் காலடியில் தீவிர வழிபாடு செய்த மார்க்கண்டேயனுக்கு மரணம் நெருங்கிய போது, உம்முடைய தூதர்கள் யமனை விரட்டினர்.

मार्कण्डेयश्चिरायु: स खलु पुनरपि त्वत्पर: पुष्पभद्रा-
तीरे निन्ये तपस्यन्नतुलसुखरति: षट् तु मन्वन्तराणि ।
देवेन्द्र: सप्तमस्तं सुरयुवतिमरुन्मन्मथैर्मोहयिष्यन्
योगोष्मप्लुष्यमाणैर्न तु पुनरशकत्त्वज्जनं निर्जयेत् क: ॥५॥

மார்கண்டே₃யஶ்சிராயு: ஸ க₂லு புநரபி த்வத்பர: புஷ்பப₄த்₃ரா-
தீரே நிந்யே தபஸ்யந்நதுலஸுக₂ரதி: ஷட் து மந்வந்தராணி |
தே₃வேந்த்₃ர: ஸப்தமஸ்தம் ஸுரயுவதிமருந்மந்மதை₂ர்மோஹயிஷ்யந்
யோகோ₃ஷ்மப்லுஷ்யமாணைர்ந து புநரஶகத்த்வஜ்ஜநம் நிர்ஜயேத் க: || 5||

5. நீண்ட ஆயுள் பெற்ற மார்க்கண்டேயர், உம்மையே வணங்கி, நிகரற்ற பேரின்பத்தில் பற்றுக் கொண்டு, புஷ்பபத்ரா நதியின் கரையில் தவம் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார். ஏழாவது மன்வந்தரத்தில், தேவேந்திரன் அவரது தவத்தைக் குலைக்க, தேவலோகப் பெண்களையும், தென்றலையும், மன்மதனையும் அனுப்பினான். அவரது தவத்தின் வெப்பத்தால், அவர்களால் அவரை மயக்க முடியவில்லை. உமது பக்தர்களை யாரால் வெல்ல முடியும்?

प्रीत्या नारायणाख्यस्त्वमथ नरसख: प्राप्तवानस्य पार्श्वं
तुष्ट्या तोष्टूयमान: स तु विविधवरैर्लोभितो नानुमेने ।
द्रष्टुं माय़ां त्वदीयां किल पुनरवृणोद्भक्तितृप्तान्तरात्मा
मायादु:खानभिज्ञस्तदपि मृगयते नूनमाश्चर्यहेतो: ॥६॥

ப்ரீத்யா நாராயணாக்₂யஸ்த்வமத₂ நரஸக₂: ப்ராப்தவாநஸ்ய பார்ஶ்வம்
துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து விவித₄வரைர்லோபி₄தோ நாநுமேநே |
த்₃ரஷ்டும் மாஃயாம் த்வதீ₃யாம் கில புநரவ்ருணோத்₃ப₄க்தித்ருப்தாந்தராத்மா
மாயாது₃:கா₂நபி₄ஜ்ஞஸ்தத₃பி ம்ருக₃யதே நூநமாஶ்சர்யஹேதோ: || 6||

6. நரனாகவும், நாராயணனாகவும் தாங்கள் மார்க்கண்டேயரின் அருகில் சென்றீர்கள். மனம் மகிழ்ந்த அவர் தங்களைத் துதித்தார். தாங்கள் பல்வேறு வரங்களை அளித்தும் அவர் ஒன்றையும் விரும்பவில்லை. ஆனால் தங்கள் மாயையைக் காண விரும்பினார். அதனால் உண்டாகும் துன்பங்களை அறியாமல், பக்தியின் மிகுதியாலும், ஆர்வத்தாலும் இவ்வாறு வேண்டினார்.

याते त्वय्याशु वाताकुलजलदगलत्तोयपूर्णातिघूर्णत्-
सप्तार्णोराशिमग्ने जगति स तु जले सम्भ्रमन् वर्षकोटी: ।
दीन: प्रैक्षिष्ट दूरे वटदलशयनं कञ्चिदाश्चर्यबालं
त्वामेव श्यामलाङ्गं वदनसरसिजन्यस्तपादाङ्गुलीकम् ॥७॥

யாதே த்வய்யாஶு வாதாகுலஜலத₃க₃லத்தோயபூர்ணாதிகூ₄ர்ணத்-
ஸப்தார்ணோராஶிமக்₃நே ஜக₃தி ஸ து ஜலே ஸம்ப்₄ரமந் வர்ஷகோடீ: |
தீ₃ந: ப்ரைக்ஷிஷ்ட தூ₃ரே வடத₃லஶயநம் கஞ்சிதா₃ஶ்சர்யபா₃லம்
த்வாமேவ ஶ்யாமலாங்க₃ம் வத₃நஸரஸிஜந்யஸ்தபாதா₃ங்கு₃லீகம் || 7||

7. அவ்வாறே வரமளித்துத் தாங்கள் மறைந்தீர். உடனே பலத்த காற்றுடன் மேகங்கள் மழையைப் பொழிந்தன. ஏழு கடல்களும் நிரம்பி உலகத்தை மூழ்கடித்தது. பல கோடி ஆண்டுகள் மார்க்கண்டேயர் அந்தக் கடலில் சுழன்று வருந்தினார். தொலைவில் கருநீல மேனியுடன், ஆலிலையின் மேல் சிறு குழந்தையாகப் பள்ளி கொண்டு, கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டு, அதிசயமான ரூபத்தில் இருக்கும் தங்களைக் கண்டார்.

दृष्ट्वा त्वां हृष्टरोमा त्वरितमुपगत: स्प्रष्टुकामो मुनीन्द्र:
श्वासेनान्तर्निविष्ट: पुनरिह सकलं दृष्टवान् विष्टपौघम् ।
भूयोऽपि श्वासवातैर्बहिरनुपतितो वीक्षितस्त्वत्कटाक्षै-
र्मोदादाश्लेष्टुकामस्त्वयि पिहिततनौ स्वाश्रमे प्राग्वदासीत् ॥८॥

த்₃ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமுபக₃த: ஸ்ப்ரஷ்டுகாமோ முநீந்த்₃ர:
ஶ்வாஸேநாந்தர்நிவிஷ்ட: புநரிஹ ஸகலம் த்₃ருஷ்டவாந் விஷ்டபௌக₄ம் |
பூ₄யோ(அ)பி ஶ்வாஸவாதைர்ப₃ஹிரநுபதிதோ வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை-
ர்மோதா₃தா₃ஶ்லேஷ்டுகாமஸ்த்வயி பிஹிததநௌ ஸ்வாஶ்ரமே ப்ராக்₃வதா₃ஸீத் || 8||

8. உம்மைக் கண்டதும் உடல் புல்லரிக்க, உம்மைத் தொடுவதற்காக வேகமாய்த் தங்கள் அருகே வந்தார். உம்முடைய மூச்சுக் காற்றால் உள்ளே இழுக்கப்பட்டு, குழந்தையான தங்கள் வயிற்றின் உள்ளே அண்டசராசரங்களைக் கண்டார். மீண்டும் உம்முடைய மூச்சுக் காற்றால் வெளியே வந்தார். உமது கடைக்கண் பார்வையைக் கண்ட மார்க்கண்டேயர், உம்மைத் தழுவ விரும்பினார். அப்போது உமது உருவத்தை மறைத்துக் கொண்டீர். உம்மைக் காணாமல், முன்போல் தான்மட்டும் தனியே தனது ஆசிரமத்தில் இருக்கக் கண்டார்.

गौर्या सार्धं तदग्रे पुरभिदथ गतस्त्वत्प्रियप्रेक्षणार्थी
सिद्धानेवास्य दत्वा स्वयमयमजरामृत्युतादीन् गतोऽभूत् ।
एवं त्वत्सेवयैव स्मररिपुरपि स प्रीयते येन तस्मा-
न्मूर्तित्रय्यात्मकस्त्वं ननु सकलनियन्तेति सुव्यक्तमासीत् ॥९॥

கௌ₃ர்யா ஸார்த₄ம் தத₃க்₃ரே புரபி₄த₃த₂ க₃தஸ்த்வத்ப்ரியப்ரேக்ஷணார்தீ₂
ஸித்₃தா₄நேவாஸ்ய த₃த்வா ஸ்வயமயமஜராம்ருத்யுதாதீ₃ந் க₃தோ(அ)பூ₄த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி ஸ ப்ரீயதே யேந தஸ்மா-
ந்மூர்தித்ரய்யாத்மகஸ்த்வம் நநு ஸகலநியந்தேதி ஸுவ்யக்தமாஸீத் || 9||

9. அப்போது, உமது பக்தரான மார்க்கண்டேயரைப் பார்க்க பரமசிவன் பார்வதியுடன் அவரருகே சென்றார். முதுமை, இறப்பு இல்லாத வரங்களை மார்க்கண்டேயருக்கு அளித்துச் சென்றார். உம்மை வழிபடுவதால் சிவனும் மகிழ்கிறார். இவ்வாறு, மும்மூர்த்திகளின் ரூபமான தாங்கள், அனைவரையும் ஆள்பவர் என்பது தெளிவாகிறது.

त्र्यंशेस्मिन् सत्यलोके विधिहरिपुरभिन्मन्दिराण्यूर्ध्वमूर्ध्वं
तेभोऽप्यूर्ध्वं तु मायाविकृतिविरहितो भाति वैकुण्ठलोक: ।
तत्र त्वं कारणाम्भस्यपि पशुपकुले शुद्धसत्त्वैकरूपी
सच्चित्ब्रह्माद्वयात्मा पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥१०॥

த்ர்யம்ஶேஸ்மிந் ஸத்யலோகே விதி₄ஹரிபுரபி₄ந்மந்தி₃ராண்யூர்த்₄வமூர்த்₄வம்
தேபோ₄(அ)ப்யூர்த்₄வம் து மாயாவிக்ருʼதிவிரஹிதோ பா₄தி வைகுண்ட₂லோக: |
தத்ர த்வம் காரணாம்ப₄ஸ்யபி பஶுபகுலே ஶுத்₃த₄ஸத்த்வைகரூபீ
ஸச்சித்ப்₃ரஹ்மாத்₃வயாத்மா பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 10||

10. பிரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் என்ற மூன்று பகுதிகளையுடைய ஸத்யலோகத்தில், பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவனின் வீடுகள் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கின்றது. அம்மூன்றிக்கும் மேல், மாயையாலும் அதன் விகாரங்களாலும் பாதிக்கப்படாத வைகுண்டம் இருக்கிறது. வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், இடைச்சேரியிலும் தூய ஸாத்வீக வடிவில், சச்சிதானந்த வடிவிலிருந்து வேறுபடாதவராய்த் தாங்கள் பிரகாசிக்கிறீர்கள். குருவாயூரப்பனே! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment