Friday, June 6, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98, ஸ்ரீ நாராயணீயம் 98வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -98
நிஷ்கள பிரம்ம வழிபாடு

यस्मिन्नेतद्विभातं यत इदमभवद्येन चेदं य एत-
द्योऽस्मादुत्तीर्णरूप: खलु सकलमिदं भासितं यस्य भासा ।
यो वाचां दूरदूरे पुनरपि मनसां यस्य देवा मुनीन्द्रा:
नो विद्युस्तत्त्वरूपं किमु पुनरपरे कृष्ण तस्मै नमस्ते ॥१॥

யஸ்மிந்நேதத்₃விபா₄தம் யத இத₃மப₄வத்₃யேந சேத₃ம் ய ஏத-
த்₃யோ(அ)ஸ்மாது₃த்தீர்ணரூப: க₂லு ஸகலமித₃ம் பா₄ஸிதம் யஸ்ய பா₄ஸா |
யோ வாசாம் தூ₃ரதூ₃ரே புநரபி மநஸாம் யஸ்ய தே₃வா முநீந்த்₃ரா:
நோ வித்₃யுஸ்தத்த்வரூபம் கிமு புநரபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 1||

1. இந்த உலகமானது உம்மிடத்திலிருந்து தோன்றி, உம்மால் காக்கப்படுகிறது. தாங்களே உலகவடிவாக இருக்கின்றீர். உம்முடைய ஒளியால் இந்த உலகம் பிரகாசிக்கிறது. மனதிற்கும், வாக்குக்கும் எட்டாத தூரத்தில் இருக்கின்றீர். உம்முடைய உண்மையான வடிவத்தைத் தேவர்களும், முனிவர்களும் கூட அறிய முடியவில்லை. மற்றவர்களால் எப்படி முடியும்? அத்தகைய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணா! உம்மை நான் நமஸ்கரிக்கிறேன்.

जन्माथो कर्म नाम स्फुटमिह गुणदोषादिकं वा न यस्मिन्
लोकानामूतये य: स्वयमनुभजते तानि मायानुसारी ।
विभ्रच्छक्तीररूपोऽपि च बहुतररूपोऽवभात्यद्भुतात्मा
तस्मै कैवल्यधाम्ने पररसपरिपूर्णाय विष्णो नमस्ते ॥२॥

ஜந்மாதோ₂ கர்ம நாம ஸ்பு₂டமிஹ கு₃ணதோ₃ஷாதி₃கம் வா ந யஸ்மிந்
லோகாநாமூதயே ய: ஸ்வயமநுப₄ஜதே தாநி மாயாநுஸாரீ |
விப்₄ரச்ச₂க்தீரரூபோ(அ)பி ச ப₃ஹுதரரூபோ(அ)வபா₄த்யத்₃பு₄தாத்மா
தஸ்மை கைவல்யதா₄ம்நே பரரஸபரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || 2||

2. விஷ்ணுவே! உமக்கு பிறப்பு, பெயர், புண்ணியம், பாபம், ஆகிய கர்மங்கள் இல்லை. முக்குணங்கள் என்று ஒன்றும் இல்லை. உலகத்தைக் காக்க மாயையை ஏற்கின்றீர். நிற்குணராய் இருந்தும் வித்யை, அவித்யை முதலிய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டு, பல உருவங்களோடு விளங்குகின்றீர். ஆச்சர்யமான ரூபத்துடன் விளங்குகின்றீர். பேரின்பம் தரும் பூரணனே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.

नो तिर्यञ्चन्न मर्त्यं न च सुरमसुरं न स्त्रियं नो पुंमांसं
न द्रव्यं कर्म जातिं गुणमपि सदसद्वापि ते रूपमाहु: ।
शिष्टं यत् स्यान्निषेधे सति निगमशतैर्लक्षणावृत्तितस्तत्
कृच्छ्रेणावेद्यमानं परमसुखमयं भाति तस्मै नमस्ते ॥३॥

நோ திர்யஞ்சந்ந மர்த்யம் ந ச ஸுரமஸுரம் ந ஸ்த்ரியம் நோ பும்மாம்ஸம்
ந த்₃ரவ்யம் கர்ம ஜாதிம் கு₃ணமபி ஸத₃ஸத்₃வாபி தே ரூபமாஹு: |
ஶிஷ்டம் யத் ஸ்யாந்நிஷேதே₄ ஸதி நிக₃மஶதைர்லக்ஷணாவ்ருத்திதஸ்தத்
க்ருச்ச்₂ரேணாவேத்₃யமாநம் பரமஸுக₂மயம் பா₄தி தஸ்மை நமஸ்தே || 3||

3. பறவை, மிருகம், பசு, மனிதன், தேவன், அசுரன், பெண், ஆண், பஞ்சபூதங்கள், புண்ணிய பாபங்கள், ஜாதி, முக்குணங்கள், சேதனம், அசேதனம் ஆகிய இவை எதுவும் தங்கள் ரூபமில்லை என்று அறிந்தோர் கூறுகின்றனர். இவைகளைக் காட்டிலும் எஞ்சி இருக்கின்றீர். உபநிஷத்துக்கள் மிகுந்த சிரமத்துடன் உம்மைத் தெரிவிக்க முயற்சி செய்கின்றது. உம்மைப் பேரின்ப வடிவமாக விளக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்காரம் செய்கிறேன்.

मायायां बिम्बितस्त्वं सृजसि महदहङ्कारतन्मात्रभेदै-
र्भूतग्रामेन्द्रियाद्यैरपि सकलजगत्स्वप्नसङ्कल्पकल्पम् ।
भूय: संहृत्य सर्वं कमठ इव पदान्यात्मना कालशक्त्या
गम्भीरे जायमाने तमसि वितिमिरो भासि तस्मै नमस्ते ॥४॥

மாயாயாம் பி₃ம்பி₃தஸ்த்வம் ஸ்ருஜஸி மஹத₃ஹங்காரதந்மாத்ரபே₄தை₃-
ர்பூ₄தக்₃ராமேந்த்₃ரியாத்₃யைரபி ஸகலஜக₃த்ஸ்வப்நஸங்கல்பகல்பம் |
பூ₄ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட₂ இவ பதா₃ந்யாத்மநா காலஶக்த்யா
க₃ம்பீ₄ரே ஜாயமாநே தமஸி விதிமிரோ பா₄ஸி தஸ்மை நமஸ்தே || 4||

4. தாங்கள் மாயையின் பிரதிபலிப்பாய் இருக்கிறீர்கள். மகத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், பஞ்சேந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலகங்களைப் படைத்தீர்கள். ஆமை தன் கைகால்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதுபோல், காலசக்தியால் அந்த உலகங்களை உம்முள்ளே அடக்கிக் கொள்கிறீர்கள். அளவற்ற இருள் உண்டாகும்போது அந்த இருளால் பாதிக்கப்படாமல் பிரகாசிக்கிறீர். அத்தகைய உமக்கு நமஸ்காரம்.

शब्दब्रह्मेति कर्मेत्यणुरिति भगवन् काल इत्यालपन्ति
त्वामेकं विश्वहेतुं सकलमयतया सर्वथा कल्प्यमानम् ।
वेदान्तैर्यत्तु गीतं पुरुषपरचिदात्माभिधं तत्तु तत्त्वं
प्रेक्षामात्रेण मूलप्रकृतिविकृतिकृत् कृष्ण तस्मै नमस्ते ॥५॥

ஶப்₃த₃ப்₃ரஹ்மேதி கர்மேத்யணுரிதி ப₄க₃வந் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விஶ்வஹேதும் ஸகலமயதயா ஸர்வதா₂ கல்ப்யமாநம் |
வேதா₃ந்தைர்யத்து கீ₃தம் புருஷபரசிதா₃த்மாபி₄த₄ம் தத்து தத்த்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதிவிக்ருதிக்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 5||

5. பிரபஞ்சத்திற்குக் காரணம் நாதம் என்று சிலரும், கர்மம் என்று சிலரும், அணு என்று சிலரும் கூறுகின்றனர். தாங்கள் யாவுமாகி இருப்பதால் அவ்வாறு கூறுகின்றனர். வேதாந்தம், தத்வரூபமான தங்களை, புருஷன் என்றும், பரன் என்றும், சித் என்றும், அசித் என்றும் கூறுகின்றது. அந்த தத்வத்தின் பார்வையே மாயையை உண்டாக்கி, பிரபஞ்சத்தையும் உண்டாக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்கரிக்கிறேன்.

सत्त्वेनासत्तया वा न च खलु सदसत्त्वेन निर्वाच्यरूपा
धत्ते यासावविद्या गुणफणिमतिवद्विश्वदृश्यावभासम् ।
विद्यात्वं सैव याता श्रुतिवचनलवैर्यत्कृपास्यन्दलाभे
संसारारण्यसद्यस्त्रुटनपरशुतामेति तस्मै नमस्ते ॥६॥

ஸத்த்வேநாஸத்தயா வா ந ச க₂லு ஸத₃ஸத்த்வேந நிர்வாச்யரூபா
த₄த்தே யாஸாவவித்₃யா கு₃ணப₂ணிமதிவத்₃விஶ்வத்₃ருஶ்யாவபா₄ஸம் |
வித்₃யாத்வம் ஸைவ யாதா ஶ்ருதிவசநலவைர்யத்க்ருபாஸ்யந்த₃லாபே₄
ஸம்ஸாராரண்யஸத்₃யஸ்த்ருடநபரஶுதாமேதி தஸ்மை நமஸ்தே || 6||

6. இருப்பது என்றோ, இல்லாதது என்றோ, அவ்விரண்டும் சேர்ந்தது என்றோ விவரிக்க முடியாத மாயத்தோற்றம் உலகில் காணப்படும் எல்லா பொருட்களிலும் உள்ளது. அது, கயிற்றைப் பாம்பு என்று எண்ணுவது போன்ற அறியாமையே ஆகும். உம்முடைய கருணைப்ரவாகம் கிடைத்ததும், அந்த அறியாமையானது, உபநிஷத்துக்களின் வாக்கியங்களால் தெளிவை அடைந்து, சம்சாரம் என்னும் காட்டை அழிக்கும் கோடரியாக ஆகிறது. அத்தகைய கருணாநிதியான உமக்கு நமஸ்காரம்.

भूषासु स्वर्णवद्वा जगति घटशरावादिके मृत्तिकाव-
त्तत्त्वे सञ्चिन्त्यमाने स्फुरति तदधुनाप्यद्वितीयं वपुस्ते ।
स्वप्नद्रष्टु: प्रबोधे तिमिरलयविधौ जीर्णरज्जोश्च यद्व-
द्विद्यालाभे तथैव स्फुटमपि विकसेत् कृष्ण तस्मै नमस्ते ॥७॥

பூ₄ஷாஸு ஸ்வர்ணவத்₃வா ஜக₃தி க₄டஶராவாதி₃கே ம்ருத்திகாவ-
த்தத்த்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்பு₂ரதி தத₃து₄நாப்யத்₃விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்நத்₃ரஷ்டு: ப்ரபோ₃தே₄ திமிரலயவிதௌ₄ ஜீர்ணரஜ்ஜோஶ்ச யத்₃வ-
த்₃வித்₃யாலாபே₄ ததை₂வ ஸ்பு₂டமபி விகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 7||

7. ஆபரணங்களில் தங்கம் இருப்பதுபோல், பானை, மடக்கு ஆகியவற்றில் மண் இருப்பதுபோல், உண்மை ரூபத்தைப் பற்றி நினைக்கும்போது உம்முடைய இரண்டற்ற ரூபமே விளங்குகிறது. எவ்வாறு கனவில் காணும் பொருட்களை விழித்ததும் காணமுடியாதோ, இருளில் பாம்பாகத் தோன்றியது வெளிச்சத்தில் கயிராய் இருக்கிறதோ, அதேபோல், ஞானம் ஏற்பட்டதும் தங்கள் ரூபம் தெளிவாய் விளங்குகிறது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கிறேன்.

यद्भीत्योदेति सूर्यो दहति च दहनो वाति वायुस्तथान्ये
यद्भीता: पद्मजाद्या: पुनरुचितबलीनाहरन्तेऽनुकालम् ।
येनैवारोपिता: प्राङ्निजपदमपि ते च्यावितारश्च पश्चात्
तस्मै विश्वं नियन्त्रे वयमपि भवते कृष्ण कुर्म: प्रणामम् ॥८॥

யத்₃பீ₄த்யோதே₃தி ஸூர்யோ த₃ஹதி ச த₃ஹநோ வாதி வாயுஸ்ததா₂ந்யே
யத்₃பீ₄தா: பத்₃மஜாத்₃யா: புநருசிதப₃லீநாஹரந்தே(அ)நுகாலம் |
யேநைவாரோபிதா: ப்ராங்நிஜபத₃மபி தே ச்யாவிதாரஶ்ச பஶ்சாத்
தஸ்மை விஶ்வம் நியந்த்ரே வயமபி ப₄வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || 8||

8. சூரியன், அக்னி, வாயு ஆகியவை உம்மிடம் பயந்து செயல்படுகின்றன. உம்முடைய அருளால், பிரமன் முதலிய தேவர்கள் சரியான நேரத்தில் ஹவிர்பாகம் பெறுகிறார்கள். மேலும் அவர்கள், படைப்பின் துவக்கத்தில் பதவிகளைப் பெற்று, தமது இருப்பிடங்களை அடைந்து, பின் நீக்கப்படுகிறார்கள். உலகங்களை அடக்குபவரே! கிருஷ்ணா! உம்மை நாங்கள் நமஸ்கரிக்கின்றோம்.

त्रैलोक्यं भावयन्तं त्रिगुणमयमिदं त्र्यक्षरस्यैकवाच्यं
त्रीशानामैक्यरूपं त्रिभिरपि निगमैर्गीयमानस्वरूपम् ।
तिस्रोवस्था विदन्तं त्रियुगजनिजुषं त्रिक्रमाक्रान्तविश्वं
त्रैकाल्ये भेदहीनं त्रिभिरहमनिशं योगभेदैर्भजे त्वाम् ॥९॥

த்ரைலோக்யம் பா₄வயந்தம் த்ரிகு₃ணமயமித₃ம் த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீஶாநாமைக்யரூபம் த்ரிபி₄ரபி நிக₃மைர்கீ₃யமாநஸ்வரூபம் |
திஸ்ரோவஸ்தா₂ வித₃ந்தம் த்ரியுக₃ஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்தவிஶ்வம்
த்ரைகால்யே பே₄த₃ஹீநம் த்ரிபி₄ரஹமநிஶம் யோக₃பே₄தை₃ர்ப₄ஜே த்வாம் || 9||

9. தாங்கள், ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களால் மூவுலகங்களையும் படைத்தீர்கள். மூன்று அக்ஷரங்களால் (அ,உ,ம)ஆன பிரணவத்தின் (ஓம்) பொருளாய் உள்ளீர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவமாக இருக்கின்றீர். உம்மை ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் புகழ்ந்து போற்றுகின்றன. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளை அறிந்தவர். மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவர். மூன்று அடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்தவர். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களிலும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். அத்தகைய தங்களை நான் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று யோகங்களால் எப்பொழுதும் வணங்குகின்றேன்.

सत्यं शुद्धं विबुद्धं जयति तव वपुर्नित्यमुक्तं निरीहं
निर्द्वन्द्वं निर्विकारं निखिलगुणगणव्यञ्जनाधारभूतम् ।
निर्मूलं निर्मलं तन्निरवधिमहिमोल्लासि निर्लीनमन्त-
र्निस्सङ्गानां मुनीनां निरुपमपरमानन्दसान्द्रप्रकाशम् ॥१०॥

ஸத்யம் ஶுத்₃த₄ம் விபு₃த்₃த₄ம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்₃வந்த்₃வம் நிர்விகாரம் நிகி₂லகு₃ணக₃ணவ்யஞ்ஜநாதா₄ரபூ₄தம் |
நிர்மூலம் நிர்மலம் தந்நிரவதி₄மஹிமோல்லாஸி நிர்லீநமந்த-
ர்நிஸ்ஸங்கா₃நாம் முநீநாம் நிருபமபரமாநந்த₃ஸாந்த்₃ரப்ரகாஶம் || 10||

10.  தங்களுடைய ரூபமானது ஸத்வமயமானது. பந்தங்களும், செய்கைகளும், மாற்றங்களும், விகாரங்களும் இல்லாதது. எல்லா குணங்களுக்கும் மூலமாகவும், காரணமற்றதாகவும், தோஷமற்றதாகவும் அளவற்ற மகிமையுடன் விளங்குகிறது. பற்றற்ற முனிவர்களின் மனதில் உறைந்திருக்கிறது. ஒப்பற்ற பேரின்ப ஒளியால் சிறப்புடன் பிரகாசிக்கிறது.

दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् ।
चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ॥११॥

(இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் துக்கம் நீங்கி ஆயுள் வளரும்)
து₃ர்வாரம் த்₃வாத₃ஶாரம் த்ரிஶதபரிமிலத்ஷஷ்டிபர்வாபி₄வீதம்
ஸம்ப்₄ராம்யத் க்ரூரவேக₃ம் க்ஷணமநு ஜக₃தா₃ச்சி₂த்₃ய ஸந்தா₄வமாநம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத₂யது ந து மாம் த்வத்பதை₃காவலம்ப₃ம்
விஷ்ணோ காருண்யஸிந்தோ₄ பவநபுரபதே பாஹி ஸர்வாமயௌகா₄த் || 11||

11. விஷ்ணுவே! உம்முடைய கால வடிவமான சக்கரம் ஒருவராலும் தடுக்க முடியாதது. பன்னிரண்டு மாதங்கள் என்ற ஆரக்கால்கள் கொண்டது. முன்னூற்று அறுபது நாட்கள் என்ற கூரிய வட்டாக்களை(முனைகள்) உடையது. கடுமையான வேகத்தில் எப்பொழுதும் சுழல்கின்றது. நொடிப்பொழுதில் உலகத்தைக் குறைத்து, மிக வேகமாக ஓடுகிறது. அந்த சக்கரமானது, உமது பாதத்தையே நம்பியிருக்கும் என்னைத் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! எல்லா நோய்களிலிருந்தும் என்னை காக்க வேண்டும்.

No comments:

Post a Comment