Saturday, June 7, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99, ஸ்ரீ நாராயணீயம் 99வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -99
வேத ஸ்துதி 

विष्णोर्वीर्याणि को वा कथयतु धरणे: कश्च रेणून्मिमीते
यस्यैवाङ्घ्रित्रयेण त्रिजगदभिमितं मोदते पूर्णसम्पत्
योसौ विश्वानि धत्ते प्रियमिह परमं धाम तस्याभियायां
त्वद्भक्ता यत्र माद्यन्त्यमृतरसमरन्दस्य यत्र प्रवाह: ॥१॥

விஷ்ணோர்வீர்யாணி கோ வா கத₂யது த₄ரணே: கஶ்ச ரேணூந்மிமீதே
யஸ்யைவாங்க்₄ரித்ரயேண த்ரிஜக₃த₃பி₄மிதம் மோத₃தே பூர்ணஸம்பத்
யோஸௌ விஶ்வாநி த₄த்தே ப்ரியமிஹ பரமம் தா₄ம தஸ்யாபி₄யாயாம்
த்வத்₃ப₄க்தா யத்ர மாத்₃யந்த்யம்ருதரஸமரந்த₃ஸ்ய யத்ர ப்ரவாஹ: || 1||

1. மூவுலகங்களையும் மூன்றடிகளால் அளந்தீர். அதனால் அவை ஐஸ்வர்யங்கள் நிறைந்து விளங்குகின்றது. உலகங்களைத் தாங்கும் விஷ்ணுவான உமது பெருமையை யாரால் விவரிக்க முடியும்? பூமியில் உள்ள மணல் துகள்களை எண்ண முடியுமா? அம்ருத வெள்ளம் ஓடும் உமது இருப்பிடமான வைகுண்டத்தில், உம்முடைய பக்தர்கள் மிகுந்த இன்பத்துடன் வாழ்கிறார்கள். அந்த வைகுண்டத்தை நான் இந்த ஜன்மத்திலேயே அடைய வேண்டும்.

आद्यायाशेषकर्त्रे प्रतिनिमिषनवीनाय भर्त्रे विभूते-
र्भक्तात्मा विष्णवे य: प्रदिशति हविरादीनि यज्ञार्चनादौ ।
कृष्णाद्यं जन्म यो वा महदिह महतो वर्णयेत्सोऽयमेव
प्रीत: पूर्णो यशोभिस्त्वरितमभिसरेत् प्राप्यमन्ते पदं ते ॥२॥

ஆத்₃யாயாஶேஷகர்த்ரே ப்ரதிநிமிஷநவீநாய ப₄ர்த்ரே விபூ₄தே-
ர்ப₄க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி₃ஶதி ஹவிராதீ₃நி யஜ்ஞார்சநாதௌ₃ |
க்ருஷ்ணாத்₃யம் ஜந்ம யோ வா மஹதி₃ஹ மஹதோ வர்ணயேத்ஸோ(அ)யமேவ
ப்ரீத: பூர்ணோ யஶோபி₄ஸ்த்வரிதமபி₄ஸரேத் ப்ராப்யமந்தே பத₃ம் தே || 2||

2. விஷ்ணுவே! தாங்கள் எல்லாவற்றிற்கும் முதலானவர். படைப்பிற்குக் காரணமாய் இருப்பவர். ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாகத் தோற்றம் அளிப்பவர். யாகங்கள் மற்றும் பூஜைகளில் ஹவிஸ் முதலியவற்றை பக்தியுடன் அளிப்பவர்களும், உமது கிருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களை வர்ணிப்பவர்களும் விரைவிலேயே மகிழ்ச்சியையும், புகழையும் அடைகின்றார்கள். இறுதியில் உம்முடைய இருப்பிடமான வைகுண்டத்தையும் அடைகின்றனர்.

हे स्तोतार: कवीन्द्रास्तमिह खलु यथा चेतयध्वे तथैव
व्यक्तं वेदस्य सारं प्रणुवत जननोपात्तलीलाकथाभि: ।
जानन्तश्चास्य नामान्यखिलसुखकराणीति सङ्कीर्तयध्वं
हे विष्णो कीर्तनाद्यैस्तव खलु महतस्तत्त्वबोधं भजेयम् ॥३॥

ஹே ஸ்தோதார: கவீந்த்₃ராஸ்தமிஹ க₂லு யதா₂ சேதயத்₄வே ததை₂வ
வ்யக்தம் வேத₃ஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜநநோபாத்தலீலாகதா₂பி₄: |
ஜாநந்தஶ்சாஸ்ய நாமாந்யகி₂லஸுக₂கராணீதி ஸங்கீர்தயத்₄வம்
ஹே விஷ்ணோ கீர்தநாத்₃யைஸ்தவ க₂லு மஹதஸ்தத்த்வபோ₃த₄ம் ப₄ஜேயம் || 3||

3. கவிஞர்களே! நீங்கள் பகவானை எவ்வாறு அறிவீர்களோ, அதுபோல் வேதத்தின் சாரமாய் இருக்கும் அவரையும், பல்வேறு அவதாரங்களில் அவரது லீலைகளையும் போற்றித் துதியுங்கள். அறிஞர்களே! அனைத்து சுகங்ளையும் அளிக்கும் அவரது திருநாமங்களைப் பாடுங்கள். விஷ்ணுவே! நான் உம்மைப் போற்றிப் பாடி மெய்ஞ்ஞானத்தை அடைய வேண்டும்.

विष्णो: कर्माणि सम्पश्यत मनसि सदा यै: स धर्मानबध्नाद्
यानीन्द्रस्यैष भृत्य: प्रियसख इव च व्यातनोत् क्षेमकारी ।
वीक्षन्ते योगसिद्धा: परपदमनिशं यस्य सम्यक्प्रकाशं
विप्रेन्द्रा जागरूका: कृतबहुनुतयो यच्च निर्भासयन्ते ॥४॥

விஷ்ணோ: கர்மாணி ஸம்பஶ்யத மநஸி ஸதா₃ யை: ஸ த₄ர்மாநப₃த்₄நாத்₃
யாநீந்த்₃ரஸ்யைஷ ப்₄ருத்ய: ப்ரியஸக₂ இவ ச வ்யாதநோத் க்ஷேமகாரீ |
வீக்ஷந்தே யோக₃ஸித்₃தா₄: பரபத₃மநிஶம் யஸ்ய ஸம்யக்ப்ரகாஶம்
விப்ரேந்த்₃ரா ஜாக₃ரூகா: க்ருதப₃ஹுநுதயோ யச்ச நிர்பா₄ஸயந்தே || 4||

4. அந்த விஷ்ணுவானவர், தர்மங்களை நிறுவியவர். நண்பரைப் போல உபதேசம் செய்தும், வேலையாள் போல துஷ்டர்களை அழித்தும் இந்திரனுக்குப் பல நன்மைகளைச் செய்தவர். அவரது ஒளிவீசும் பரமபதமான வைகுண்டத்தை யோகசித்தி பெற்றவர்களால் காணமுடியும். சிறந்த பிராம்மணர்கள் பலவிதமாகப் போற்றிப் பாடித் துதித்து அவரது ஸ்தானமான வைகுண்டத்தை விளக்குகின்றனர். அந்த விஷ்ணுவினுடைய பெருமைகளை எப்போதும் மனதில் இருத்தித் தியானியுங்கள்.

नो जातो जायमानोऽपि च समधिगतस्त्वन्महिम्नोऽवसानं
देव श्रेयांसि विद्वान् प्रतिमुहुरपि ते नाम शंसामि विष्णो ।
तं त्वां संस्तौमि नानाविधनुतिवचनैरस्य लोकत्रयस्या-
प्यूर्ध्वं विभ्राजमाने विरचितवसतिं तत्र वैकुण्ठलोके ॥५॥

நோ ஜாதோ ஜாயமாநோ(அ)பி ச ஸமதி₄க₃தஸ்த்வந்மஹிம்நோ(அ)வஸாநம்
தே₃வ ஶ்ரேயாம்ஸி வித்₃வாந் ப்ரதிமுஹுரபி தே நாம ஶம்ஸாமி விஷ்ணோ |
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித₄நுதிவசநைரஸ்ய லோகத்ரயஸ்யா-
ப்யூர்த்₄வம் விப்₄ராஜமாநே விரசிதவஸதிம் தத்ர வைகுண்ட₂லோகே || 5||

5. தேவனே! வரம்பற்ற உமது மகிமையை அறிந்தவன் பிறந்ததுமில்லை. பிறக்கப் போவதுமில்லை. விஷ்ணுவே! உமது திருநாமங்கள் நன்மையை அளிக்கவல்லது என்றறிந்து அடிக்கடி உமது நாமங்களைச் சொல்லுவேன். மூவுலகிற்கும் மேலுள்ள வைகுண்டத்தில் வசிக்கும் உம்மைப் பலவிதமாகப் போற்றிப் பாடுகின்றேன்.

आप: सृष्ट्यादिजन्या: प्रथममयि विभो गर्भदेशे दधुस्त्वां
यत्र त्वय्येव जीवा जलशयन हरे सङ्गता ऐक्यमापन् ।
तस्याजस्य प्रभो ते विनिहितमभवत् पद्ममेकं हि नाभौ
दिक्पत्रं यत् किलाहु: कनकधरणिभृत् कर्णिकं लोकरूपम् ॥६॥

ஆப: ஸ்ருஷ்ட்யாதி₃ஜந்யா: ப்ரத₂மமயி விபோ₄ க₃ர்ப₄தே₃ஶே த₃து₄ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலஶயந ஹரே ஸங்க₃தா ஐக்யமாபந் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ₄ தே விநிஹிதமப₄வத் பத்₃மமேகம் ஹி நாபௌ₄
தி₃க்பத்ரம் யத் கிலாஹு: கநகத₄ரணிப்₄ருʼத் கர்ணிகம் லோகரூபம் || 6||

6. பிரபுவே! எல்லாவற்றிக்கும் முன்பு படைக்கப்பட்ட ஜலமானது, உம்மைத் தன்னுள் தாங்கிக் கொண்டது. பாற்கடலில் பள்ளி கொண்ட கிருஷ்ணா! நீரில் படுத்திருந்த தங்களிடம் எல்லா ஜீவன்களும் இணைந்தன. பிரபுவே! பிறப்பற்ற தங்களது நாபியிலிருந்து ஒரு தாமரை மலர் தோன்றியது. அந்தத் தாமரை மலரே உலகம், அந்த மலரின் இதழ்கள் திக்குகள், மொட்டு மேருமலை என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

हे लोका विष्णुरेतद्भुवनमजनयत्तन्न जानीथ यूयं
युष्माकं ह्यन्तरस्थं किमपि तदपरं विद्यते विष्णुरूपम् ।
नीहारप्रख्यमायापरिवृतमनसो मोहिता नामरूपै:
प्राणप्रीत्येकतृप्ताश्चरथ मखपरा हन्त नेच्छा मुकुन्दे ॥७॥

ஹே லோகா விஷ்ணுரேதத்₃பு₄வநமஜநயத்தந்ந ஜாநீத₂ யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த₂ம் கிமபி தத₃பரம் வித்₃யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்₂யமாயாபரிவ்ருதமநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யேகத்ருப்தாஶ்சரத₂ மக₂பரா ஹந்த நேச்சா₂ முகுந்தே₃ || 7||

7. ஜனங்களே! உலகைப் படைத்தது விஷ்ணு என்று நீங்கள் அறியவில்லை. விவரிக்க முடியாத, ஜீவனைக் காட்டிலும் வேறான விஷ்ணுவின் ரூபம் உங்கள் உள்ளத்தில் இருப்பதையும் நீங்கள் அறியவில்லை. மூடுபனி போன்ற மாயையால் மறைக்கப்பட்ட மனதுடன், பெயர்களாலும், உருவங்களாலும் மயங்கி, புலன்களை மகிழ்விக்க மட்டுமே செயல்களைச் செய்கிறீர்கள். அந்தோ! முகுந்தனான கிருஷ்ணனிடத்தில் நாட்டம் இருப்பதில்லை.

मूर्ध्नामक्ष्णां पदानां वहसि खलु सहस्राणि सम्पूर्य विश्वं
तत्प्रोत्क्रम्यापि तिष्ठन् परिमितविवरे भासि चित्तान्तरेऽपि ।
भूतं भव्यं च सर्वं परपुरुष भवान् किञ्च देहेन्द्रियादि-
ष्वाविष्टोऽप्युद्गतत्वादमृतसुखरसं चानुभुङ्क्षे त्वमेव ॥८॥

மூர்த்₄நாமக்ஷ்ணாம் பதா₃நாம் வஹஸி க₂லு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஶ்வம்
தத்ப்ரோத்க்ரம்யாபி திஷ்ட₂ந் பரிமிதவிவரே பா₄ஸி சித்தாந்தரே(அ)பி |
பூ₄தம் ப₄வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப₄வாந் கிஞ்ச தே₃ஹேந்த்₃ரியாதி₃-
ஷ்வாவிஷ்டோ(அ)ப்யுத்₃க₃தத்வாத₃ம்ருதஸுக₂ரஸம் சாநுபு₄ங்க்ஷே த்வமேவ || 8||

8. பரமபுருஷா! தாங்கள் ஆயிரக்கணக்கான தலைகளையும், கண்களையும், பாதங்களையும் உடையவர். உலகம் முழுவதையும், அதைத் தாண்டியும் வியாபித்திருப்பவர். ஆனாலும், மிகச் சிறியதான மனதிற்குள்ளேயும் வசிக்கிறீர்கள். முன்பு இருந்தது, இப்போது இருப்பது, இருக்கப் போவது அனைத்தும் தாங்களே. உடல், புலன்கள் ஆகியவற்றில் பிரவேசித்தவராய் இருந்தாலும், அவற்றிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான பேரின்பத்தையும் தாங்களே அனுபவிக்கின்றீர்.

यत्तु त्रैलोक्यरूपं दधदपि च ततो निर्गतोऽनन्तशुद्ध-
ज्ञानात्मा वर्तसे त्वं तव खलु महिमा सोऽपि तावान् किमन्यत् ।
स्तोकस्ते भाग एवाखिलभुवनतया दृश्यते त्र्यंशकल्पं
भूयिष्ठं सान्द्रमोदात्मकमुपरि ततो भाति तस्मै नमस्ते ॥९॥

யத்து த்ரைலோக்யரூபம் த₃த₄த₃பி ச ததோ நிர்க₃தோ(அ)நந்தஶுத்₃த₄-
ஜ்ஞாநாத்மா வர்தஸே த்வம் தவ க₂லு மஹிமா ஸோ(அ)பி தாவாந் கிமந்யத் |
ஸ்தோகஸ்தே பா₄க₃ ஏவாகி₂லபு₄வநதயா த்₃ருஶ்யதே த்ர்யம்ஶகல்பம்
பூ₄யிஷ்ட₂ம் ஸாந்த்₃ரமோதா₃த்மகமுபரி ததோ பா₄தி தஸ்மை நமஸ்தே || 9||

9. தாங்கள் மூவுலங்களின் வடிவமாக இருக்கின்றீர். ஆயினும், அவற்றைக் கடந்து, தூய்மையான ஞானரூபியாய் விளங்குகின்றீர். உமது மகத்துவம் அளவற்றது. உம்முடைய வடிவத்தில் நான்கில் ஒரு பாகமே எல்லா உலகங்களாகவும் இருக்கின்றன. மற்ற மூன்று பாகங்களும் பேரின்பமயமாக ஜொலிக்கின்றது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கின்றேன்.

अव्यक्तं ते स्वरूपं दुरधिगमतमं तत्तु शुद्धैकसत्त्वं
व्यक्तं चाप्येतदेव स्फुटममृतरसाम्भोधिकल्लोलतुल्यम् ।
सर्वोत्कृष्टामभीष्टां तदिह गुणरसेनैव चित्तं हरन्तीं
मूर्तिं ते संश्रयेऽहं पवनपुरपते पाहि मां कृष्ण रोगात् ॥१०॥

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து₃ரதி₄க₃மதமம் தத்து ஶுத்₃தை₄கஸத்த்வம்
வ்யக்தம் சாப்யேததே₃வ ஸ்பு₂டமம்ருதரஸாம்போ₄தி₄கல்லோலதுல்யம் |
ஸர்வோத்க்ருஷ்டாமபீ₄ஷ்டாம் ததி₃ஹ கு₃ணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
மூர்திம் தே ஸம்ஶ்ரயே(அ)ஹம் பவநபுரபதே பாஹி மாம் க்ருஷ்ண ரோகா₃த் || 10||

10. கிருஷ்ணா! குணங்களற்ற தங்கள் வடிவமானது, அடைய முடியாததாய் இருக்கிறது. தூய்மையான இந்த ஸகுண (ஸத்வகுண) ரூபமானது தெளிவாகக் காணக் கூடியதாய் இருக்கிறது. கிருஷ்ணன் முதலிய இந்த ஸகுண ரூபமானது, பேரின்பக் கடலின் அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாவற்றிலும் சிறந்ததாய் இருக்கிறது. கல்யாண குணங்களால் மனதைக் கவர்கின்றதாய் இருக்கும் அந்த மூர்த்தியையே நான் நாடி வணங்குகிறேன். குருவாயூரப்பா! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.

1 comment: