Monday, December 22, 2014

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

சில வருடங்களுக்கு முன்பு ஒரு  பக்தர் தனது மனைவியுடன் தரிசனத்திற்காக குருவாயூர் சென்றார். நிர்மால்ய தரிசனம் செய்ய  விருப்பம் கொண்ட அவர்கள், அதிகாலையில் குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படி ஏறும்போது அங்கே  கீழே  ஒரு தங்கக் காசுமாலை இருக்கக் கண்டார். சுற்றுமுற்றும் யாருமில்லை. அதனால் அம்மாலை யாருடையது என்று விசாரிக்கக் கூட முடியவில்லை.  விடிந்ததும் விசாரித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, தமது பையில் வைத்துக் கொண்டார். சிறிது நேரத்திலேயே அவருக்கு தலைசுற்றலும், மயக்கமும் உண்டானது. அவரது மனைவி, "என்ன ஆயிற்று?" என்று  கேட்டார். அவரும், "என்னமோ  போல் இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை" என்று கூறினார். "காசுமாலையை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று மனைவி சொன்னார். இந்த இருட்டில் யாரிடம் கொடுப்பது, விடிந்ததும் தேவஸ்தானத்தில் கொடுத்துவிடலாம்" என்று சொன்ன அவர், அதன்படியே விடிந்ததும் தேவஸ்தானத்தில் அந்தக் காசுமாலையை ஒப்படைத்து, அது குளத்துப் படியில் கிடந்ததையும் சொன்னார். உடனேயே அவரது தலைசுற்றலும், மயக்கமும் குறைந்தது. பிறகு தரிசனம் செய்தார். 

காசுமாலையைத் தொலைத்தவரும், தேவஸ்தானத்தில் முறையிடச் சென்றபோது, மாலையைப் பெற்றார். இவ்வாறு, தொலைத்தவரும் தனது பக்தரானதால், அவரது மனக்கிலேசத்தை நீக்க வேண்டி, இந்த பக்தருக்கு உபாதையை உண்டு  பண்ணி, பிறகு நீக்கி, இருவருக்கும்  சந்தோஷத்தை அளித்தார்.  

குருவாயூரப்பன், இவ்வாறு கலியுகத்திலும் பல அற்புதங்கள் செய்து, பிரத்யக்ஷ தெய்வமாக  விளங்குகிறார். 

1 comment:

  1. மனதை நெகிழ செய்யும் குருவாயுரப்பனின் ஒரு லீலை

    ReplyDelete