Thursday, January 29, 2015

கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்


கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

                                         கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப் பரிசாக அளித்தான். கண்ணனுடைய தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். காமதேனு என்ற அந்தப் பசு, "உலகிற்கெல்லாம் நாயகனே! தாங்கள் பசுக்களைக் காக்கும் குலத்தில் பிறந்தது எங்கள் பாக்கியம்! 'கோ'க்களைக் காக்கும் உமக்கு என் பாலைச் சொரிந்து, கோவிந்தன் எனப் பெயரிடுகிறேன் " என்று கூறி தனது பாலால் அபிஷேகம் செய்தது. இந்திரனும் 'ஐராவதம்' என்ற தனது யானை கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான். இவ்வாறு கண்ணனுக்கு 'கோவிந்தன்' என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.

மலையைத் தூக்கியது போன்ற கண்ணனுடைய மகிமைகளைப் பார்த்த கோபர்கள், அவனை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள். அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் அவன் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டனர்.

No comments:

Post a Comment