Monday, May 12, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 73, ஸ்ரீ நாராயணீயம் 73வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -73
மதுரா நகரப் பயணம்

निशमय्य तवाथ यानवार्तां भृशमार्ता: पशुपालबालिकास्ता: ।
किमिदं किमिदं कथं न्वितीमा: समवेता: परिदेवितान्यकुर्वन् ॥१॥

நிஶமய்ய தவாத₂ யாநவார்தாம் ப்₄ருஶமார்தா: பஶுபாலபா₃லிகாஸ்தா: |
கிமித₃ம் கிமித₃ம் கத₂ம் ந்விதீமா: ஸமவேதா: பரிதே₃விதாந்யகுர்வந் || 1||

1. அக்ரூரருடன் தாங்கள் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள்.

करुणानिधिरेष नन्दसूनु: कथमस्मान् विसृजेदनन्यनाथा: ।
बत न: किमु दैवमेवमासीदिति तास्त्वद्गतमानसा विलेपु: ॥२॥

கருணாநிதி₄ரேஷ நந்த₃ஸூநு: கத₂மஸ்மாந் விஸ்ருஜேத₃நந்யநாதா₂: |
ப₃த ந: கிமு தை₃வமேவமாஸீதி₃தி தாஸ்த்வத்₃க₃தமாநஸா விலேபு: || 2||

2. நந்தகோபனின் பிள்ளை கருணையுள்ளவன் ஆயிற்றே! அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, உம்மிடமே மனதைச் செலுத்தி, அழுது புலம்பினார்கள்.

चरमप्रहरे प्रतिष्ठमान: सह पित्रा निजमित्रमण्डलैश्च ।
परितापभरं नितम्बिनीनां शमयिष्यन् व्यमुच: सखायमेकम् ॥३॥

சரமப்ரஹரே ப்ரதிஷ்ட₂மாந: ஸஹ பித்ரா நிஜமித்ரமண்ட₃லைஶ்ச |
பரிதாபப₄ரம் நிதம்பி₃நீநாம் ஶமயிஷ்யந் வ்யமுச: ஸகா₂யமேகம் || 3||

3. அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் மதுரா நகரம் செல்லப் புறப்பட்டீர்கள். கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினீர்கள்.

अचिरादुपयामि सन्निधिं वो भविता साधु मयैव सङ्गमश्री: ।
अमृताम्बुनिधौ निमज्जयिष्ये द्रुतमित्याश्वसिता वधूरकार्षी: ॥४॥

அசிராது₃பயாமி ஸந்நிதி₄ம் வோ ப₄விதா ஸாது₄ மயைவ ஸங்க₃மஶ்ரீ: |
அம்ருதாம்பு₃நிதௌ₄ நிமஜ்ஜயிஷ்யே த்₃ருதமித்யாஶ்வஸிதா வதூ₄ரகார்ஷீ: || 4||

4. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தீர்கள்.

सविषादभरं सयाच्ञमुच्चै: अतिदूरं वनिताभिरीक्ष्यमाण: ।
मृदु तद्दिशि पातयन्नपाङ्गान् सबलोऽक्रूररथेन निर्गतोऽभू: ॥५॥

ஸவிஷாத₃ப₄ரம் ஸயாச்ஞமுச்சை: அதிதூ₃ரம் வநிதாபி₄ரீக்ஷ்யமாண: |
ம்ருது₃ தத்₃தி₃ஶி பாதயந்நபாங்கா₃ந் ஸப₃லோ(அ)க்ரூரரதே₂ந நிர்க₃தோ(அ)பூ₄: || 5||

5. அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் தங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டீர்கள்.

अनसा बहुलेन वल्लवानां मनसा चानुगतोऽथ वल्लभानाम् ।
वनमार्तमृगं विषण्णवृक्षं समतीतो यमुनातटीमयासी: ॥६॥

அநஸா ப₃ஹுலேந வல்லவாநாம் மநஸா சாநுக₃தோ(அ)த₂ வல்லபா₄நாம் |
வநமார்தம்ருக₃ம் விஷண்ணவ்ருக்ஷம் ஸமதீதோ யமுநாதடீமயாஸீ: || 6||

6. கோபர்களின் எண்ணற்ற தேர்களும், கோபியர்களின் மனங்களும் தங்களைப் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின. யமுனைக் கரையை அடைந்தீர்கள்.

नियमाय निमज्य वारिणि त्वामभिवीक्ष्याथ रथेऽपि गान्दिनेय: ।
विवशोऽजनि किं न्विदं विभोस्ते ननु चित्रं त्ववलोकनं समन्तात् ॥७॥

நியமாய நிமஜ்ய வாரிணி த்வாமபி₄வீக்ஷ்யாத₂ ரதே₂(அ)பி கா₃ந்தி₃நேய: |
விவஶோ(அ)ஜநி கிம் ந்வித₃ம் விபோ₄ஸ்தே நநு சித்ரம் த்வவலோகநம் ஸமந்தாத் || 7||

7. அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். தங்களை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் தங்கள் தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார்.

पुनरेष निमज्य पुण्यशाली पुरुषं त्वां परमं भुजङ्गभोगे ।
अरिकम्बुगदाम्बुजै: स्फुरन्तं सुरसिद्धौघपरीतमालुलोके ॥८॥

புநரேஷ நிமஜ்ய புண்யஶாலீ புருஷம் த்வாம் பரமம் பு₄ஜங்க₃போ₄கே₃ |
அரிகம்பு₃க₃தா₃ம்பு₃ஜை: ஸ்பு₂ரந்தம் ஸுரஸித்₃தௌ₄க₄பரீதமாலுலோகே || 8||

8. மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு தங்களைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் தங்களைச் சூழ்ந்திருக்கக் கண்டார்.

स तदा परमात्मसौख्यसिन्धौ विनिमग्न: प्रणुवन् प्रकारभेदै: ।
अविलोक्य पुनश्च हर्षसिन्धोरनुवृत्त्या पुलकावृतो ययौ त्वाम् ॥९॥

ஸ ததா₃ பரமாத்மஸௌக்₂யஸிந்தௌ₄ விநிமக்₃ந: ப்ரணுவந் ப்ரகாரபே₄தை₃: |
அவிலோக்ய புநஶ்ச ஹர்ஷஸிந்தோ₄ரநுவ்ருத்த்யா புலகாவ்ருதோ யயௌ த்வாம் || 9||

9. அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் உம்மைக் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தங்களிடம் வந்தார்.

किमु शीतलिमा महान् जले यत् पुलकोऽसाविति चोदितेन तेन ।
अतिहर्षनिरुत्तरेण सार्धं रथवासी पवनेश पाहि मां त्वम् ॥१०॥

கிமு ஶீதலிமா மஹாந் ஜலே யத் புலகோ(அ)ஸாவிதி சோதி₃தேந தேந |
அதிஹர்ஷநிருத்தரேண ஸார்த₄ம் ரத₂வாஸீ பவநேஶ பாஹி மாம் த்வம் || 10||

10. அவரிடம் தாங்கள், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்டீர்கள். அக்ரூரர், வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார். குருவாயூரப்பா! இவ்வாறு அக்ரூரருடன் தேரில் வீற்றிருந்த தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment