Thursday, April 10, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 41, ஸ்ரீ நாராயணீயம் 41வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -41
பூதனையின் சரீரத்தை எரித்தல்
கிருஷ்ணனுக்கு விழா

व्रजेश्वरै: शौरिवचो निशम्य समाव्रजन्नध्वनि भीतचेता: ।
निष्पिष्टनिश्शेषतरुं निरीक्ष्य कञ्चित्पदार्थं शरणं गतस्वाम् ॥१॥

வ்ரஜேஶ்வரை: ஶௌரிவசோ நிஶம்ய ஸமாவ்ரஜந்நத்₄வநி பீ₄தசேதா: |
நிஷ்பிஷ்டநிஶ்ஶேஷதரும் நிரீக்ஷ்ய கஞ்சித்பதா₃ர்த₂ம் ஶரணம் க₃தஸ்வாம் || 1||

1. வசுதேவர் கூறியதும் நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய பொருளைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க, தங்களை வேண்டினார்.

निशम्य गोपीवचनादुदन्तं सर्वेऽपि गोपा भयविस्मयान्धा: ।
त्वत्पातितं घोरपिशाचदेहं देहुर्विदूरेऽथ कुठारकृत्तम् ॥२॥

நிஶம்ய கோ₃பீவசநாது₃த₃ந்தம் ஸர்வே(அ)பி கோ₃பா ப₄யவிஸ்மயாந்தா₄: |
த்வத்பாதிதம் கோ₄ரபிஶாசதே₃ஹம் தே₃ஹுர்விதூ₃ரே(அ)த₂ குடா₂ரக்ருத்தம் || 2||

2. கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேசவில்லை. தாங்கள் கீழே தள்ளிய அந்த பயங்கரமான உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள்.

त्वत्पीतपूतस्तनतच्छरीरात् समुच्चलन्नुच्चतरो हि धूम: ।
शङ्कामधादागरव: किमेष किं चान्दनो गौल्गुलवोऽथवेति ॥३॥

த்வத்பீதபூதஸ்தநதச்ச₂ரீராத் ஸமுச்சலந்நுச்சதரோ ஹி தூ₄ம: |
ஶங்காமதா₄தா₃க₃ரவ: கிமேஷ கிம் சாந்த₃நோ கௌ₃ல்கு₃லவோ(அ)த₂வேதி || 3||

3. தாங்கள் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும் தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. இந்த மணம் சந்தனமா, குங்கிலியமா என்று இடையர்கள் சந்தேகம் அடைந்தார்கள். 

मदङ्गसङ्गस्य फलं न दूरे क्षणेन तावत् भवतामपि स्यात् ।
इत्युल्लपन् वल्लवतल्लजेभ्य: त्वं पूतनामातनुथा: सुगन्धिम् ॥४॥

மத₃ங்க₃ஸங்க₃ஸ்ய ப₂லம் ந தூ₃ரே க்ஷணேந தாவத் ப₄வதாமபி ஸ்யாத் |
இத்யுல்லபந் வல்லவதல்லஜேப்₄ய: த்வம் பூதநாமாதநுதா₂: ஸுக₃ந்தி₄ம் || 4||

4. உம்மைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல் தாங்கள் பூதனையை மணமுள்ளவளாகச் செய்தீர்கள்.

चित्रं पिशाच्या न हत: कुमार: चित्रं पुरैवाकथि शौरिणेदम् ।
इति प्रशंसन् किल गोपलोको भवन्मुखालोकरसे न्यमाङ्क्षीत् ॥५॥

சித்ரம் பிஶாச்யா ந ஹத: குமார: சித்ரம் புரைவாகதி₂ ஶௌரிணேத₃ம் |
இதி ப்ரஶம்ஸந் கில கோ₃பலோகோ ப₄வந்முகா₂லோகரஸே ந்யமாங்க்ஷீத் || 5||

5. இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லை. வசுதேவன் இதை முன்னமேயே எச்சரித்ததும் ஆச்சர்யம் என்று கோபர்கள் அதிசயித்து, உமது அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள். 

दिनेदिनेऽथ प्रतिवृद्धलक्ष्मीरक्षीणमाङ्गल्यशतो व्रजोऽयम् ।
भवन्निवासादयि वासुदेव प्रमोदसान्द्र: परितो विरेजे ॥६॥

தி₃நேதி₃நே(அ)த₂ ப்ரதிவ்ருத்₃த₄லக்ஷ்மீரக்ஷீணமாங்க₃ல்யஶதோ வ்ரஜோ(அ)யம் |
ப₄வந்நிவாஸாத₃யி வாஸுதே₃வ ப்ரமோத₃ஸாந்த்₃ர: பரிதோ விரேஜே || 6||

6. கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். வாசுதேவனே! தங்களால் கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. 

गृहेषु ते कोमलरूपहासमिथ:कथासङ्कुलिता: कमन्य: ।
वृत्तेषु कृत्येषु भवन्निरीक्षासमागता: प्रत्यहमत्यनन्दन् ॥७॥

க்₃ருஹேஷு தே கோமலரூபஹாஸமித₂:கதா₂ஸங்குலிதா: கமந்ய: |
வ்ருத்தேஷு க்ருʼத்யேஷு ப₄வந்நிரீக்ஷாஸமாக₃தா: ப்ரத்யஹமத்யநந்த₃ந் || 7||

7. கோபியர்கள், தங்கள் வீட்டில் வேலை செய்யும்போது, தங்கள் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் தங்களைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். 

अहो कुमारो मयि दत्तदृष्टि: स्मितं कृतं मां प्रति वत्सकेन ।
एह्येहि मामित्युपसार्य पाणी त्वयीश किं किं न कृतं वधूभि: ॥८॥

அஹோ குமாரோ மயி த₃த்தத்₃ருஷ்டி: ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந |
ஏஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணீ த்வயீஶ கிம் கிம் ந க்ருதம் வதூ₄பி₄: || 8||

8. “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம் வா” என்று இடைப்பெண்கள் மகிழ்ந்து தங்களிடம் அன்பைப் பொழிந்தார்கள். 

भवद्वपु:स्पर्शनकौतुकेन करात्करं गोपवधूजनेन ।
नीतस्त्वमाताम्रसरोजमालाव्यालम्बिलोलम्बतुलामलासी: ॥९॥

ப₄வத்₃வபு:ஸ்பர்ஶநகௌதுகேந கராத்கரம் கோ₃பவதூ₄ஜநேந |
நீதஸ்த்வமாதாம்ரஸரோஜமாலாவ்யாலம்பி₃லோலம்ப₃துலாமலாஸீ: || 9||

9. தங்களைத் தொடும் ஆசையால், மாற்றி மாற்றி உம்மைத் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள். அப்போது, தாமரை மலர்களில் மாறி மாறி அமரும் வண்டினைப் போல் தாங்கள் காட்சி அளித்தீர்கள். 

निपाययन्ती स्तनमङ्कगं त्वां विलोकयन्ती वदनं हसन्ती ।
दशां यशोदा कतमां न भेजे स तादृश: पाहि हरे गदान्माम् ॥१०॥

நிபாயயந்தீ ஸ்தநமங்கக₃ம் த்வாம் விலோகயந்தீ வத₃நம் ஹஸந்தீ |
த₃ஶாம் யஶோதா₃ கதமாம் ந பே₄ஜே ஸ தாத்₃ருஶ: பாஹி ஹரே க₃தா₃ந்மாம் || 10||

10. யசோதை, தங்களை மடியில் கிடத்தி, பாலூட்டி, தங்கள் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள். ஹரியே! நோய்களைப் போக்கி என்னை ரக்ஷிக்க வேண்டும்.

No comments:

Post a Comment